Wednesday, 21 March 2012

யார் கடவுள் ...??? ***


வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
வாழ்வினில் உள்ளதடா
வளர்ப்பதும் தேய்ப்பதும் என்றுமே உந்தன்
கைகளில் உள்ளதடா
இருக்கின்ற காட்டிலே இனத்தினை உண்பது
மிருகத்தின் வேலையடா
தப்பான தோற்றத்தில் சரியாக நடக்கின்ற
இயற்கையின் நியதியடா
எரிகின்ற வீட்டிலே இருப்பதை எடுக்கின்றாய்
மனிதா நீ பாவியடா
வலிக்கின்ற போதிலும் சிரிக்கின்ற நெஞ்சமே
எதிர்கால ஞானியடா
இல்லாத போதிலும் இருப்பதை கொடுப்பவன்
உலகுக்கே சாமியடா.....

No comments:

Post a Comment