உயிரா மதமா ? ***
இறைவன் என்பவன் எவனடா
இருந்தால் நீயும் காட்டடா
உருவம் வைத்து வழிபட்டு
சுகம் காண நினைக்கின்றாய்
மதத்தை தானே நீ கொண்டு
மனித உயிரை அழிக்கின்றாய்
மதம் பிடித்து அலைகின்றாய்
கடவுள் என்று சாயம் பூசி
கலியுகத்தை வதைக்கின்றாய்
காவி உடுத்து நடிக்கின்றாய்
இளமை தீர்ந்து போன பின்பும்
இன்பம் காணத் துடிக்கிறாய்
சிறையில் சிக்கி தவிக்கின்றாய்.....
No comments:
Post a Comment