Saturday, 25 August 2012

நானே அவளை தூண்டிவிட்டேன் ! ***



சும்மா இருந்தவளை நான் தூண்டி விட்டுபுட்டென்
தூண்டிலில் மீனாக நானே மாட்டிக்கிட்டென்
என்ன என்னன்னு கேட்டு நின்றவளை, அன்றே
சும்மா சும்மான்னு சொல்லி முடிக்காமல்
கண்ணே கண்ணே உன் காதை கொடுவென்று
கன்னா பின்னான்னு கதைகள் தான் சொல்லி்
இன்று சின்னா பின்னான்னு ஆட்டிபடைக்கின்றாள்
ஐயோ ஐயோன்னு நான் அலறித் துடித்தாலும்
பொய்யே பொய்யேன்னு கள்ளி நகைக்கின்றாள்

கண்ணா கண்ணா நீதான் என் மன்னா மன்னா
என்று அன்பை மொத்தமாய் கிள்ளி முத்தமாய்
தெளிக்கின்றாள், என் பிள்ளை நீ என்று மெல்ல
அள்ளி அனைக்கின்றாள் துள்ளி மகிழ்கின்றாள்...!!!

அன்பில் அடிமையாகும் மனசு ..!***


உன் புன்னகை ஒன்றே போதுமடி
நான் புதிதாகப் பிறப்பதற்கு
உன் பார்வை ஒன்றே போதுமடி
நான் பல கவிகள் படைப்பதற்கு
உன் வாய்மொழி ஒன்றே போதுமடி
நான் காதல் கடலில் குளிப்பதற்கு
உன் அன்பு ஒன்றே போதுமடி
நான் அடிமை என்று சொல்வதற்கு
உன் நினைவு ஒன்றே போதுமடி
நான் ஆயுள்வரை வாழ்வதற்கு.. !!!

வணங்க வைக்கும் வஞ்சிக்கொடி ..!***



உன் அஞ்சனவிழிகளில் கதைபல பேசிடும்
கயல்மீன்கூட்டம்
உன் மாதுளைச்சிரிப்பினை பார்த்ததும்
மயங்கிடும் மான்கூட்டம்
உன் தாமரை இதழ்களை தந்தவர் யாரென
தயங்கியே நின்றிடும் மயில்க்கூட்டம்
உன் கைவிரல் தீண்டவே இசை பல வீசவே
கலங்கியே நின்றிடும் யாழ்கூட்டம்
உன் கார்குழல் கூந்தலில் கவிதைகள் ஆயிரம்

விடித்திட துடித்திடும் கவிக்கூட்டம்
உன் காதடி ஓரத்தில் மின்னிடும் வேர்வைகள்
கண்களை மயக்கிடும் பனித்தோட்டம்
உன் பாதங்கள் தொட்டதும் பார்வைகள் பட்டதும்
பைந்தமிழ் பேசிடும் புல்க்கூட்டம்
உன் நாவினில் ஊறிடும் தேந்துளி உண்ணவே
திக்கென அலையுது தேனீக்கூட்டம்
உன் பொன்னிற மேனியை புடவைக்குள் பார்த்ததும்
புன்னகை சிந்திடும் நூல்க்கூட்டம்
உன் அன்பினை உணர்ந்ததும் பண்பினை அறிந்ததும்
கையெடுத்துக் கும்பிடும் ஆண்வர்க்கம் .........!!!

Saturday, 11 August 2012

வேஷம் இல்லாப் பாசம்..! ***


அன்பே உன் அழகை கண்டு நான் மயங்கவில்லை
உன் அன்பை உண்டு நான் மயங்கிவிட்டேன்
உயிரே உன் பார்வையில் நான் மயங்கவில்லை
உன் பாசத்தில் நான் மயங்கிவிட்டேன்.. !!!

கவிஞர்களின் தயவு நாடி தவிக்கின்றேன் ..!***



கவியரசர் கண்ணதாசனின் கல்லறையில்
நின்று நான் கண்ணீர் வடிக்கின்றேன்
எனக்கு கருணை காட்டு என்று,
வாலிபக்கவி்ஞர் வாலியிடம் சென்று நான்
வாழ்த்தச்சொல்லி கெஞ்சுகின்றேன் எனக்கு
கவிவடிக்க வார்த்தைகள் வேண்டுமென்று
புலமைப்பித்தனிடம் புலம்பி தவிக்கின்றேன்
என் கவிதைக்கு புதுக்கரு கொடுவென்று
வைரமுத்துவின் வாசலில் தவம் புரிகின்றேன்
என் சொத்தானவளுக்கு ஒரு முத்தான கவிதொடுக்க
வரம் கொடு கவியரசே கவிப்பேரரசே என்று
என்னவளே நீ தினம் தினம் புதிதாகப் பிறக்கிறாயே
நான் உன்னை கவிபாட என்னுள் வார்த்தை இல்லையடி..!!!

பனங்கட்டியும் பஞ்சுமிட்டாயும் ..! ***



மழைபொழிந்தாலும் வெய்யிலடித்தாலும் நான் செல்லும் இடமெல்லாம் குடையெல்லவா கொண்டுசெல்லுகின்றேன்,
அன்பே நீ மழையில் நனைத்துவிடுவாய் என்பதற்காக
இல்லை உயிரே நீ கரைந்துவிடுவாய் என்பதற்காக,
அப்புறம் ஏனடா மடையா வெய்யிலுக்கும் குடையெடுத்துச்
செல்கிறாய் என்று நீ கேட்கலாம், என் இனிய முழு லூசே
வெய்யிலில் நீ உருகிவிடுவாய் என்பதற்காக, காரணம்
நீதான் பனங்கட்டிக்குட்டானுக்குள் அடைத்து வைத்த
பஞ்சுமிட்டாய் போல் இருக்கிறீயே என் செல்லமே.........!!!

Thursday, 2 August 2012

சிடுசிடுக்கும் சிறுக்கியவள் ..!***


குறுகுறுத்த பேச்சினாலே
குதுகலிக்க வைத்தவளே
அறிவாக இருந்தும் அவள்
அறியாமை படமெடுக்க
வெடுவெடுத்த கோபம்கொண்டு

படபடத்து வெடிப்பவளே
திடுதிடென்று முடிவெடுத்து
கடகடென்று முடித்துவிட்டு
சடசடறென்று கண்கலங்கி
கொளகொளென்று அழுதுகொண்டு
குடுகுடென்று ஓடி வந்து
மளமளென்று கதைகள் சொல்லி
திருதிரென்று முழிப்பவளே, நான்
உன்மேல் சிடுசிடுத்துக்கொண்டாலும்
புறுபுறுத்து நடந்தாலும் உன் பளபளத்த
அன்பு என்னை தொளதொளக்க
வைத்துவிட்டு விறுவிறென்று தேடிவந்து
உனை தொட்டணைக்க சொல்லுதே
எனை கட்டியழச் செய்யுதே............. !!!

மெய்ஞானமும் விஞ்ஞானமும் ***



புற்றுக்குப் பாலூற்றி புனிதமெனச் சொன்னாலும்
செடிக்கு நீரூற்றி கருணையென நினைத்தாலும்
பூமியிலே விஞ்ஞானம் புதுமை பல செய்தாலும்
ஊற்றெடுத்து ஓடுக்கின்ற சிந்தனைகள் உதிர்த்தாலும்
சாத்தானை விரட்டிடும் சாமியார்கள் இருந்தாலும்

நேர்த்தியாய் கதைபேசும் தலைவர்கள் வந்தாலும்
கோட்டையில் கொடியேற்றி கோஷங்கள் போட்டாலும்
மேடைகள் பல போட்டு தத்துவங்கள் பொழிந்தாலும்
யார் வந்து போனாலும் வறுமைக்கும் பஞ்சமில்லை
அழுகின்ற பிள்ளைக்கு அரைவயிற்றுக் கஞ்சியில்லை...!!!

நீயும் நானும் யாரடி.....? ***



நீ மலர்ந்து நிற்கும் முல்லைச் செடியோ,
மானினத்தின் அரசி நீயோ
சேலை கட்டும் தேமாப்பூவோ
தாழம் பூவின் தங்கை நீயோ
தளதளக்கும் தங்க மீனோ

சீதாப் பழத்தின் சித்தி மகளோ
பேரீச்சம் பழத்தின் பேத்தி நீயோ
பலாப்பழம் உன் பாட்டிதானோ
மகிளம் பழத்தின் மாமன் பொண்ணோ
மாம்பழத்தின் மச்சாள் நீயோ
பொன்வண்டின் அக்கா தானோ
சிப்பி உந்தன் அன்னை தானோ,
செவ்வானம் உந்தன் வீடோ
செதுக்குப் போட்ட சிற்பம் நீயோ,
பெண்வடிவில் பொருத்துமான் கொடியோ
ஐயோ.....கண்ணனுக்கு நீ யாரடி
என் காதில் வந்து கூறடி...........???

Wednesday, 1 August 2012

கொஞ்சும் குஞ்சு நிலா..! ***


மஞ்சம் வந்த குஞ்சு நிலா
என்னை கொஞ்ச சொல்லி கெஞ்சுதடி,
பிஞ்சு போன நெஞ்சினிலே
மெல்ல பஞ்சு முத்தம் தந்ததடி...
அஞ்சி நின்ற பச்சைகிளி இன்று
என்னை மிஞ்சி எல்லோ கொஞ்சுதடி.......!!!

காத்திருக்கும் காதல்..!***



காத்திருப்பதில் கவலை இல்லை
என் காதலி கற்றுக் கொள்வதால்..
காதலிப்பது தப்பில்லை உன்னால்
காத்திருக்க முடியும் என்றால்......!!!

அனுபவதின் புலம்பல்!***


வீட்டை விட்டு வெளியே வந்தேன்
வேதம் சொன்ன கதையை கேட்டேன்
வெக்கப்பட்டு தலை குனிந்தேன்
வேதனையில் வெம்பி நின்றேன்
மதியை நசுக்கும் விதியை கண்டேன்

மாயக்கண்ணன் வழியில் சென்றேன்
மங்கையரின் மனதை வென்றேன்
மகுடிக்கு மயங்கா பாம்பாய் எழுந்தேன்
சாமி என்ற சாத்திரத்தை
சாடிக்குள்ளே அடைக்கச் சொன்னேன்
சாதனைகள் புரிபவரை
தலையில் வத்து ஆடச்சொன்னேன்
விதியே என்ற சதியைக் கொன்றேன்
விடிவுக்காக கவிதை சொன்னேன்
விழித்து நீயும் எழுந்தாய் என்றால், உன்
மனதை நானும் வென்றேன் என்பேன்
விழிக்க நீயோ மறுத்தால் நான்.....

காதலும் காந்தமும் ***


உந்தன் கண்ணிலோ காதல்திரி
எந்தன் நெஞ்சிலோ கண்ணிவெடி
உந்தன் ஏக்கம் எந்தன் மூச்சில்
எந்தன் உதடோ உமைப் பேச்சில்
உந்தன் மனசோ என்னை ஏன்
…............................. அறியா போச்சு..???
எந்தன் தூக்கம் கனவாய் ஆச்சு !!