Friday, 29 April 2016

எந்தனை ஆளும் மந்தார நிலவு

சிந்தையில் புகுந்து எந்தனை
ஆளும் மந்தார நிலவே உன்
விந்தையில் நனைந்து சொந்தமான
காளையும் நானே

மல்கோவா மாம்பழக் கன்னங்கள்
கொண்டு மல்லிகை மொட்டென
புன்னகை சிந்தி மாதுளம் கனிகளை
வெண்மேனியில் தாங்கி

செவ்வாழைத்தண்டிடை தேனடை
ஒழித்து கவிக்குயிலாய் கூவும்
புல்லாங்குழலொன்று கிளியாய்ச்
சிணுங்கி தேன்மொழிபேசி

தேகத்தைவளைத்து மோகனம்வடித்து
தாகத்தில் கொதித்து வேகத்தை தூண்டிட
நான் தலைகால் புரியாமல் தடுமாறித்
தடுக்கி விழுந்தேன் தலைசுற்றி !


Thursday, 28 April 2016

கள்வனை திருடிய கள்ளி நீயடி

தொல்லைகள் இருந்தும்
எம் எல்லைகள் தாண்டி
முல்லைகள் பூக்குதே


யன்னல்கள் அடைத்தும்
மின்னல்கள் துளைத்து
கொள்ளைதான் போனதே



மின்னலாய் வந்தவள்
யன்னலில் நின்று தான்
உன் வெண்ணிலா என்றதே


கண்ணிலே கண்டதும்
கைகளில் ஏந்திட நான்
காரணம் தேடினேனே


என் கள்வன் நீ தானடா
காரணம் ஏனடா உந்தன்
கள்ளி நானென்கிறாளே


விண்ணிலே பார்த்ததை
மண்ணிலே கண்டதும்
அள்ளி நான் சூடிக்கொண்டேன் !

நியாயத்தை கொல்லும் காரணங்கள்

எல்லாமே ஒரு காரணம் இருக்கும்
அதில் நல்லாவே பல காரியம் நடக்கும்
இதில் நீயென்றும் நானென்றும் சில
வேதனை சுரக்கும்

அங்கே ஏனென்றும் எதுக்கென்றும்
பல கேள்விகள் பிறக்கும், அப்போ
நியாயங்கள் தர்மங்கள் நேர்மைகள்
நாவினில் உதிக்கும்

நம்பிக்கை நாணயம் பொய்களின்
துணைகொண்டு மெல்ல காற்றினில்
பறக்கும், இங்கே உண்மைகள் செத்து
மூலையில் கிடக்கும்

இதைக் கேட்பவன் ஏமாளி பார்ப்பவன்
கோமாளி எதிர்ப்பவன் நாதாரி ரசிப்பவன்
அறிவாளி ருசிப்பவன் பெரும்ஞானி, இது
எல்லாம் நமக்கென்றால் ஒரு நீதி !

வேஷம் போடா பாசக்காரன்

நான் பாசம் காட்டுபவன் என்று
நிரூபிக்க முயற்சி செய்வதைவிட
நான் வேசம் கட்டாதவன் என்று
புரியவைக்க முயற்சி எடு அதுவே
உன்னை பாசமுள்ளவன் என்பதை

தெரிவிக்கும் !

கேள்வி கேட்கும் கொட்டுப்பூச்சி



கேள்வி கேட்கிறாள் கெட்டிக்காரி
கேணைத்தனத்தில் முட்டி மோதி
பேசத் துடிக்கின்றாள் பட்டுமேனி
பின் பேச்சைக்குறைப்பது கஷ்டமடி
கள்ளன் என்கிறாள் கொட்டுப்பூச்சி
கொண்டேபுடுவன் முட்டைக்கண்ணி
என் பதவி மாற்றிட எண்ணமோடி
உன்ன கடிச்சுப்புடுவேன் கண்டபடி
சிறு கூத்து நடப்பது உண்மையாடி
நாம் குழம்பிக்கிடப்பது உண்மையடி!

Wednesday, 13 April 2016

தனிமையின் தவிப்பு



என்னவனே என்னவனே
என் இனிய மன்னவனே
எனை ஆளும் வல்லவனே
சொர்ப்பனத்தில் நான் வாழும்
சோகத்தினை அறிவாயோ.?



பேதை இவள் உள்ளத்திலே
பேரின்பம் தந்துவிட்டு இட்ட
மணமாலை காயமுன்னே
மங்கை எனை வாடவிட்டு
தொலைதூரம் போனவனே



சிட்டாகச் சிறகடித்து வட்டமிட்டு
பறந்து வந்தேன் மொட்டாக நான்
இருக்க தேன் குடிக்கும் வண்டாக
வந்தவனே, எனை முத்தாக அள்ளி
அத்தானும் ஆனவனே



இந்த சிட்டின் சிணுங்கல்கள்
கேட்கல்லயோ உன் காதுகளில்
ஐந்து வருடங்கள் ஆனந்தமாய்
காத்திருந்தேன் இப்போ ஐந்து
நொடிகூட காத்திருக்கமுடியல்லயே



பிஞ்சு நெஞ்சினிலே ஏதோ நஞ்சு
கலந்தது போல் என்னை மிஞ்சி
எனக்குள்ளே ஏதோ நடக்குதய்யா
இந்த வஞ்சி உனையன்றி கொஞ்ச
கெஞ்ச யாரிருக்கா




சூரியன் காணா தாமரை போல்
சுருங்கி கிடக்குதய்யா என் இதயம்
சூட்சமம் அறிந்த என் சூரியனே
உன் உதயம் எனக்கு உயிர்ப்பிடமே !

Monday, 11 April 2016

இனிக்கும் தண்டனை

    அன்பே நீ எனக்கு கடும் தண்டனை
    கொடுப்பதாகச் சொல்விட்டு ஏனடி
    பஞ்சாமிர்தம் கொடுக்கின்றாய்...?                                                                                        

    என்னடி அப்படிப் பார்க்கின்றாய் 
    போடி பைத்தியக்காரி உனக்காக
    கவிதை எழுத சொல்லுகின்றாயே                                                                                   

    உன்னை வர்ணித்து உனக்காக நான்
    கவிதை எழுதுவதும் பஞ்சாமிர்தம்
    சாப்பிடுவதும் எனக்கு ஒன்றுதானேடி!

Tuesday, 5 April 2016

விதி வலையில் கலை தீபம்

சில வேளை நிலையற்று
சிலை போலே நிற்கிறாய்
பல வேளை தலை கூனி
மடல்வாழை விரிக்கிறாய்                                                                                                               

தொலை தூரம் நீயென்று
தொலைந்து ஏன் போகிறாய்
கலை தீபம் நானென்று
விழி நீரில் எரிகிறாய்                                                                                                                         

அலைபேசி ஊடாக நீயோ
அழைப்பிதழ் அனுப்புகிறாய்
அலங்காரப் பொருளென்று
விலை பேசி விற்கிறாய்                                                                                                                  

விலை என்ன நான் கேட்டு
இருகரங்கள் நீட்டுறேன்
விதி சொல்லும் விலையெதுவோ
என் கதி அதுவே என்கிறாய்!

தலை குனியும் தமிழினம்


குலத்தின் பெருமை
கழுத்தை அறுத்து
இனத்தின் இளிவை
தலையில் சுமந்து                                                                                                                                                            
கொழுத்த மடையர்
இடத்தில் பிறந்து
பகட்டை வாழ்வில்
தினமும் வளர்ந்து                                                                                                                                  
சுரத்தை கெட்ட
மனிதர்கள் காட்டில்
பலத்தை இழந்த
மறவர்கள் நாமே..!                                                                                                                                  
பிணத்தை விற்று
பிழைப்பு நடத்தி
இனத்தை அழித்து
இரையாய் உண்டு..                                                                                                                              
தவிச்ச வாய்க்கு
தண்ணீர் கொடுக்கா
மரத்துப் போன
மந்தைகள் மத்தியில்                                                                                                                              
தமிழே நீ இன்று
தமிழ் நாட்டிலே
தலை குனிந்தால்
நாம் தமிழரா..???

நவீனம் தராத நவரசம் நீயடி




எந்த மடிக்கணினியிலும்
நான் காணாத வர்க்கம்
உந்தன் மடிக்கணைக்குள்
கண்டேன் என்ன மர்மம்

எந்த அலைவரிசையிலும்
இல்லாத வண்ணம்
உந்தன் தலைகோதலில்
கிடைப்பதாக எண்ணம்

எந்த இணையத்தளத்திலும்
மிதந்திடாத மார்க்கம்
உந்தன் இதயக்குளத்துக்குள்
நீந்துவதே தருக்கம்

எந்த நவின கைபேசியிலும்
பெற்றிடாத இன்பம்
உந்தன் குஞ்சுக் கைராசியில்
பெறுவதே அமுதம் !