Thursday, 29 January 2015

அடக்கமும் ஒழுக்கமும் குனிவதில்லை


கையைப் பிடிப்பதில் இல்லை நெருக்கம்
காலைத் தொடுவதில் இல்லை அடக்கம்
தலையைக் குனிவதில் இல்லை ஒழுக்கம்
மயங்கித் தவிப்பதில் இல்லை இன்பம்
மடியில் கிடப்பதில் இல்லை சொர்க்கம்...
கூடித் .திரிவதில் .இல்லை .சொந்தம்
தாவிக் குதிப்பதில் .இல்லை. இறுக்கம்
மனதில் இடம் பிடிப்பதும் மார்பில் அள்ளி
அணைப்பதுமே உண்மையான பந்தம் ...!

சாமியும் இங்கே கோமாளியே


பாசம் என்றும் அன்பு என்றும் பாசாங்கு காட்டுகின்ற
மேடையிலே நாம் வாழும் வாழ்க்கை..
அதில் ஓசையின்றி வேசம் போடும் வேந்தர்கள் கூடி
கோசம் போட்டு நடிக்கும் நம் சேர்க்கை.... இங்கே...
நடிக்கத் தெரிந்தவன் நாயகன் உண்மை பேசுபவன்...
வில்லன் தட்டிக் கேட்பவன் குற்றவாளி
சிந்திக்கச்சொல்பவன் கோமாளி நம்பிக்கை கொள்பவன்
ஏமாளி என்ன உலகமடா சாமி .....???

எல்லாம் நன்மைக்கே எதுவும் கடந்து போகட்டும்

நாங்கள் ஒருவரை எவ்வளவு தூரம் நம்புகின்றோமோ
அந்த நம்பிக்கையை அவர்கள் எவ்வளவு தூரம்
அவர்களுக்கு சாதகமாக எடுத்து ஏமாற்றுகின்றார்களோ
அவர்கள் எங்களை ஏமாற்றவில்லை அவர்களே .........
அவர்களுக்கு துரோகம் செய்கின்றார்கள் , எந்த ஒருவன்...
ஒருவரை நம்பி உணர்வோடு உறவாடுகின்றானோ அவனை
அவர்கள் அவன் எதுகும் அறியான் நான் புத்திசாலி எனவும்...
எம் பேச்சை நம்பி விட்டான் என்று சந்தோசம் அடையும்
மனிதர்களே அது அவன் ஏமாறவில்லை இன்னமும் உங்கள்
மேல் முழு நம்பிக்கையோடும் அன்போடும் இருக்கிறான் என்று பொருள் ஆனால் இதை உணராது அறிவாளிபோல்
நினைத்தால் உங்களைபோல் ஒரு அறிவீலி இந்த உலகத்தில்
யாரும் இருக்க மாட்டார்கள்
முக்கியமான ஒன்றை நீங்கள் அறியவேண்டும் ஒருநாள் நீங்கள்
இதை உணர்ந்து மன்னிப்பு கேட்கவோ மனம் வருந்தியோ
அவர்களிடம் வந்து கூற நினைக்கும் போது அவர்கள் அங்கே
இல்லாமலும் போகலாம், அப்பொழுது உங்கள் கண்கலங்கும்
துடைக்க யாரும் இருக்க மாட்டார்கள் அப்பொழுது புரியும்
நம்பிக்கை என்றால் என்ன அன்பு என்றால் என்னவென்று
இவ்வளவு ஆனபின்னும் அந்த உள்ளம் எங்கிருந்தாலும் உங்களை வாழ்திட்டே இருக்கும் வலிதாங்கிய இதயத்துடனும்
கண்ணீர் ஏந்திய கண்களுடனும்..... 

மனித உள்ளங்களில் எத்தனை வண்ணங்கள்

அழகிய உலகத்தில் அதிசய உள்ளங்கள்
உருகிய மனிதர்கள் திடுக்கிடும் தகவல்கள்
இறுகிய நெஞ்சங்கள் உலவிய வண்ணங்கள்
இளகிய இதயங்கள் இழந்திடும் இன்பங்கள்
குமிறிய மனங்கள் கொதித்திடும் கணங்கள்
பழகிய .உறவுகள் .விலகிய நினைவுகள்
குறுகிய காலங்கள் கடந்திடும் பலயுகங்கள்

சுட்டெரிக்கும் ராட்சசி


அடியே நீ என்ன அந்த விண்ணுலகில் இருந்து
வந்து மண்ணுலகில் நடமாடும் தேவதையா
என் கண்ணிரண்டில் விளையாடும் ராட்சசியா
ஒரு கணம் உன் கடைக்கண் பார்வை என் மேல்
வீசுவதால் தேய்ந்து போகும் வெண்னிலவா...
வேண்டாம் பெண்ணே திரும்பிப்பார்க்காதே
உன் விழிகள் நடத்தும் வேள்வியை தாங்கும்
சக்தி இருக்கின்றதா என் மனதினில் பலகேள்விகள்.
ஆனால் ஒரு வார்த்தை மட்டும் பேசிவிட்டுப்போடி
அது போதும் நான் ஒரு சிறந்த இசையமைப்பாளன்
ஆகிவிடுவேன் உன் சங்கீத மொழி கேட்டு.............!!!
 

வரமென பெற்ற விசம்


யாரப்பா அங்கே பாரப்பா இங்கே
கேளப்பா கொடுமைக் கதையை,
கன்னியின் கண்கள் கலங்குது இங்கே
கல்யாணம் என்ற நிலை வந்த பின்னே
வருபவன் கேக்கிறான் வாழ்க்கைக்கு விலை...
வாரிக் கொடுக்க முடியாத நிலை
தந்தையின் மனசில் ஆடுது அலை
தாயின் வயிற்றில் கொதிக்குது உலை
வரதட்சணை என்ற விஷத்தை இங்கே
வரம் வாங்கி வந்த மூடன் தான் எங்கே.???

நாக்கு வளைக்கும் ஞானிகள்


அவனும் இவனும் எழுதியதை
அங்கும் இங்கும் படித்துவிட்டு
நாலும் தெரிந்த ஞானி போலே
நாக்கைத்தான் வளைக்கின்றோம்
சேர்த்து வைத்த சிந்தனையை ...
பூட்டிவைக்கும் நிபந்தனையால்
நாத்து நட முடியாமல் மாட்டிக்கிட்டு
முழிக்கின்றோம்......................
போட்டி போடும் உலகினிலே ஆட்டி
வைக்கும் மனிதர்களை பாட்டி சொன்ன
கதையைக் கூறி மாற்றி விட முடியுமா..
ஏட்டினிலே உள்ளதென்று எழுத்துக்கூட்டி
படித்துவிட்டு சாட்டுச்சொல்லும் கயவர்களை
சாமி என்று வணங்குகின்றோம்...................!!!
 

அவள் அழகை தமிழறியும்

தமிழே உன் ஆழத்தைப் பார்த்து விபரிக்க
முடியாமல் நான் தலைகுனிந்தேன்
என்ன அதிசயம் என்ன ஆச்சர்யம் என் மாம்பழமே
உன் அழகைப் பார்த்து வர்ணிக்க முடியாமல்
அந்த தமிழே தலைகுனிகின்றதே...!
அடி போடி பைத்தியக்காரி இதில் நான் கிறுக்கானதில்
என்ன ஆச்சர்யம் உனக்கு ..............???

காத்தான் கூத்து பார்த்ததுண்டா ?

நாடகம் நடக்கின்றது நாம் அதில் நடிக்கின்றோம்
காத்தவராயனாக நானும் ஆரியமாலாவாக நீயும்
முடிவு என்னவாகும் காலம்தான் பதில் கூறும்.....!

இதில் இரண்டுவகையுண்டு தெரிந்தவர் இருந்தால்
இங்கு வந்து கூறு ...........???

என் இதயம் என்னிடம் இல்லையடி



கற்றுக்கொடுக்காத வித்தைக்காக கட்டைவிரலை
குரு தட்சனை கேட்டார் துரோணர்
கற்றுக்கொடுக்காத வித்தைக்கே கட்டைவிரல்லை
தானமாக கொடுத்தான் ஏகலைவன்
அது அவனுடைய அறியாமையா இல்லை அவனின்...
குரு பக்தியா நானறியேன்...
கற்றுக்கொடுக்கா வித்தைக்காக நீ எனது உயிரைக்
கேட்டாலும் கொடுத்திருப்பேன்
ஆனால் நீயோ என் இதயத்தை எல்லவா கேட்கின்றாய்
அது என்னிடம் இல்லையென்றேன்
உரிமையுடன் கேட்கின்றேன் இறுதியாக சொல்லிவிடு
இல்லை என்னை புழுதியேனும் தின்னவிடு
இப்படி உன் பொறுப்பற்ற பேச்சால் உன் பொழுதையே
நீ வீணாக்கின்றாய்
நான் உறுதியாக சொல்கின்றேன் என் குருதிகூட எனக்கு சொந்தமில்லை.. இவ்வளவு சொல்லியும்
அடம்பிடிக்கும் உனக்கு ஒன்று சொல்கின்றேன் நன்றாக
கேட்டுக்கொள் நீ துரோணரும் இல்லை நான் ஒன்றும்
அந்த ஏகலைவனும் இல்லை....!!!

உன் மடி என் சொர்க்கம்

என் எல்லாமானவளே எனக்கு ஒரு உண்மை
தெரிந்தாக வேண்டும்......

என்ன அன்பே என்ன உண்மை தெரியவேண்டும் ?
...
நான் உன் மடியில் தானே சாய்ந்தேன் அப்புறம்
எப்படி சொர்க்கம் சென்றேன்...
ஓ............. உன் மடிதான் அந்தச் சொர்க்கமோ..........?

இதுதான் உண்மையின் நியதி


வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
வாழ்வினில் உள்ளதடா
வளர்ப்பதும் தேய்ப்பதும் என்றுமே உந்தன்
கைகளில் உள்ளதடா
இருக்கின்ற காட்டிலே இனத்தினை உண்பது...
மிருகத்தின் வேலையடா
தப்பான தோற்றத்தில் சரியாக நடக்கின்ற
இயற்கையின் நியதியடா
எரிகின்ற வீட்டிலே இருப்பதை எடுக்கின்றாய்
மனிதா நீ பாவியடா
வலிக்கின்ற போதிலும் சிரிக்கின்ற நெஞ்சமே
எதிர்கால ஞானியடா
இல்லாத போதிலும் இருப்பதை கொடுப்பவன்
உலகுக்கே சாமியடா.....

நிலை எல்லாம் நிலைகேடு


அகம் புறம் அறம்புறம் உனக்கு
ஏன் இந்தத் தலைக்கனம்
நிலைகோடோ நிலைகேடு உனக்கு
எதற்கு விளம்பரம்
நடைகோட்டில் நாணயக்கேடு உனக்கு ...
எதற்கு வெளிவேசம்
உணர்சிப்பேச்சில் உணர்வுப்பூச்சு உனக்கு
ஏன் .....................?
 

என்னவளே எங்கே சென்றாய்


சடுகுடு விளையாடி
சமயத்தில் தடுமாறி
விழி வழி உனையேந்தி
விதைத்தவை பலகோடி
உறவென்று எனை சொல்லி...
உயிருக்குள் உனை புகுத்தி
செவி வழியே தேனூத்தி
தேகத்தினை சூடாக்கி
வெக்கதில் தலைகூனி
பக்கத்தில் எனை நாடி
அன்று வந்தாயே நீ தேடி
உணர்வினைப் பரிமாறி
என் மனதினைக் களவாடி
உயிரினை நீ அள்ளி, இன்று
சென்றாயே ஏன் கள்ளி.....?
கண்ணீரில் மிதக்கின்றேன்
கவிதைகள் வடிக்கின்றேன்
என் கண்மணியே ஓடி நீ வாடி !
 

கண்ணை மறைத்தது பட்டுத்துண்டு

காந்தாரி கண்களிலே ஏன் பட்டுத்துண்டு
காரணம் என்னவென்று மட்டும் சொல்லு
இலக்கிய இலக்கணத்தை விட்டுத் தள்ளு
இவ்வுலக வாழ்வியலை தொட்டுக்கொள்ளு
முடிந்தால் பதில் சொல்லுங்கள் சத்தமிட்டு
உகந்தால் ஏற்றுக்கொள்வோம் முதமிட்டு...!!!
 

முடியாது என்றால் முயற்சிக்காதே


முடியாது முடியாது என்று முணுமுணுக்காதே
முடிய முன் அதன் முடிவை நீ எடுக்காதே
எனக்குத் தெரியாது தெரியாது என நடிக்காதே
கொஞ்சம் தெரிந்ததும் பருப்பாட்டம் குலைக்காதே
கிடைக்காது கிடைக்காது என எண்ணி நடக்காதே...
நடக்கின்ற வழியிலேயே முடங்கிக் கிடக்காதே
சிறகுகள் இல்லாமல் பறந்திடத்தான் நினைக்காதே
பறந்தால் நீ கிழே விழுவாய் என்றால் முறைக்காதே
என்னடா இப்படி சொல்லுறான் என்று சிரிக்காதே
சிரித்து சிரித்து ஒருநாள் கஞ்சிக்கும் வழியில்லாமல்
தவிப்பாய் என்பதை மட்டும் மகனே மறக்காதே.....!!!
 

காதல் அறியா காதலர் தினம்


அட இன்று காதலர் தினமா
இது காதலுக்குத் தெரியுமா
மோதலின் தளமா இங்கே
மோதுவது தரமா ............?
வாடுவது இதயமா.. அதில்...
ஓடுவது கண்ணீரா... நான்
பாடுவது கவியா.... இதில்
பாய்வது உணர்வா... நான்
கேட்பது சரியா ....... நீங்கள்
படித்ததும் வலியா...........???
 

தரம் கெட்ட சபையில் புண்படான் ஒருவன்


அடிபட்ட ஒருவன் வலியில் துடிப்பதைக்கண்டு
குடிகெட்ட ஒருவன் கோயிலுக்குச் சென்று
முறைகெட்ட வழியில் வணங்கினான் என்று
தடைபோட்ட ஒருவன் செய்தியை சொல்ல
கண்கெட்ட ஒருவன் அதை காதினில் கேட்டு...
பண்பட்ட ஒருவன் சபையென எண்ணிச்சென்று
தென்பட்ட விடையத்தை அவனிடம் செப்ப, அங்கே
தரம்கெட்ட மனிதர்களின் நகைப்பினைக் கண்டு
புண்பட்ட நெஞ்சோடு ஒருவன் சொன்னான் வந்து..!!!
 

இறக்கை இருந்தும் பறக்க முடியல்ல

பறக்க தெரிந்த எனக்கு உன்னை
மறக்கத் தெரியல்லையே
இறகுகள் இருந்தும் என்ன பயன்
உன் கடைக்கண் வாள்வீச்சினிலே
என் இறக்கை ஒளிந்து போனதுவே....!

விடியாத பொழுதொன்று கிடையாது


நனைத்து நனைத்து சுமக்கின்றோம்
காய முன்னே மடிக்கின்றோம்
விடிவைத் தேடித் தேடி ஓடுகின்றோம்
விடிய முன்னே வாடுகின்றோம்
வடிந்து ஓடும் கண்ணீரில் உன் வறுமை...
கரைந்து ஓடப் போவதில்லை
விடிந்து விடிந்து மறைகின்ற பொழுதை
எண்ணி நடைபோடு
விழுந்து விழுந்து எழுந்தாலும் நம்பிக்கை
கொழுந்தை கிள்ளி எறியாதே
உழுத்துப் போன சிலர் கதை கேட்டு நீயோ
பழுத்த இலைபோல் வாடாதே
சுவைத்து வீசிய மாங்கொட்டை கூட மண்ணில்
விழுந்து முளைக்கும் மறவாதே..!
 

விடிய முன் விழிக்காதே

நீ கிழக்கில் தோன்றும் உதயம்
என்றேன் சிரித்தாய்
நீ எனக்குள் துடிக்கும் இதயம்
என்றேன் நகைத்தாய்
இப்போது தான் நான் உணர்ந்து ...
கொண்டேன்
உன் சிரிப்புக்கான காரணத்தை,
ஆமா ஆமா
கிழக்கில் தோன்றும் உதயமும்
சரி,.. உன்
கணக்கில் இல்லா என் இதயமும்
சரி,... என்றும்
உனக்கு சொந்தம் இல்லை என்பதை !

அந்தநாள் நினைவுகள் நெஞ்சிலே மின்னுதே...!


அந்தநாள் நினைவுகள் நெஞ்சிலே மின்னுதே...!

மின்னிமின்னிபுளுவே எனக்கென்ன
தந்தாய்
...
காப்புத் தந்தேன் கருங்கல்லுத்
தந்தேன்

கைக்குப் பளபள மோதிரம்
தந்தேன்

சிங்காரக் கோட்டையில் நெல்லள்ளித்
தந்தேன்

தாங்கு பொங் கென்று குத்தித் தந்தேன்

தவிடு பறக்கத் தீட்டித் தந்தேன் தண்ணியும்
ஒருகுடம் அள்ளித் தந்தேன்

திரளிமீனும் திருத்தித் தந்தேன் அத்திக்காயும்
ஆய்ந்து தந்தேன்

அரிசி போட்டு வடிச்சு வைத்தேன் ஆறிப்போச்சு
தின்போம் வாவேன்..!
 

என் உதயமும் இதயமும் நீ அல்லவா


நான் கனக்கக் கனக்க சுமக்கின்றேன்
சுமையின் சுகத்தை ரசிக்கின்றேன்
வலிக்கும் போதும் சிரிக்கின்றேன்
சிரிப்பில் வலியை ருசிக்கின்றேன்
நான் களைத்துப்போன வேளையிலும் ...
உனை இறக்கிவைக்கப் போவதில்லை
ஆனால் நீ குதித்து ஓட நினைத்தாய்
என்றால் குதிக்கும்போது உன் கால்கள்
வலிக்கும் என்பதற்காக உனை கீழே
இறக்கிவிட நான் மறுக்கவில்லை...!

Wednesday, 14 January 2015

மலரும் நினைவுகளும் அன்றைய பாடல்களும்


மலரும் நினைவுகள் !!!


அக்கா வீட்ட போனேன் அரிசிப்பிட்டுத் தந்தா
...
வேண்டாம் என்று வந்தேன் வழிமுத்த பாம்பு

பாம்படிக்க தடிக்குப் போனேன் தடியெல்லாம்
தேன்

தேனெடுக்கச் சட்டிக்குப்போனேன் சட்டியெல்லாம்
ஊத்தை,

ஊத்தை கழுவத் தண்ணிக்கு போனேன் தண்ணி
எல்லாம் மீன்,

மீன் பிடிக்க வலைக்குப் போனேன் வலையெல்லாம்
பீத்தல்

பீத்தல் தைக்க ஊசிக்குப் போனேன் ஊசியெல்லாம்
வெள்ளி

வெள்ளியடி வெள்ளி புகையிலைக்காம்பு நுள்ளி
வாய்க்குள் போடடி கள்ளி .... !
 

தென்றல் சொன்னது அவள் திங்கள் என்று


தென்றல் என்னைத் தேடிவந்து செய்தி
ஒன்று சொன்னதே
திங்கள் முகம் பார்த்து வந்து செவியில்
தேனை வார்த்ததே
மாம்பழத்தை தழுவியதால் மயக்கத்தில்...
தள்ளாடுதே
மங்கை அவள் சுவாசத்திலே மூழ்கியதை
சொல்லுதே
தாமைரையை தழுவி வந்தேன் தங்கதிலே
உரசி வந்தேன்
பொய்கையிலே மிதந்து சென்றேன் பூக்களிலே
புரண்டு கெண்டேன்
நாதத்திலே இசைந்து நின்றேன் கீதத்திலே
அசைந்து கொள்வேன்
இவை எல்லாம் தொட்டு வந்து இன்பம் இனி
இல்லை என்றேன்
இருக்கையிலே படுக்கை போட்டு தலைசாய்க்க
நான் சென்றேன்
மங்கை அவள் மேனி பட்டு அங்கேயே மயக்கமிட்டு
மடையன் நான் என்றுணர்ந்தேன்..

தென்றல் சொன்ன செய்தி இது என்றோ நான்
அறிந்த உண்மை அது ...!
 

மதியில்லா மான் குட்டி விதி வலையில்


விதி முடிந்தவன் கதை படிக்க
மதி கெட்டவன் குடை பிடிக்க
கதை புரியாத் தவளை ஒன்று
நதிக் கரையில் தவம் இருக்க
குதிரையிலே வந்த அரசன்...
குற்றம் என்ன என்று கேட்க
சதி அறியா மான்குட்டி எழுந்து
தலைவிதியே குற்றம் என்றது !
நானும் நீயும் ஒன்றாகி எமக்குள் நாமே கருவானோம் 

கண்ணீர் வடிக்கும் இதயம்

விழிகள் கலங்கிறதே எதற்காக
இதயம் வலிக்கிறதே அதற்காக
வலியின் காரணம்தான் எதற்காக
இரத்தம் வடிகின்றதே அதற்காக
வடியும் காரணம்தான் எதற்காக...
இதயம் வெடித்ததுவே அதற்காக
வெடித்த காரணம்தான் எதற்காக
வேண்டாம் செத்திடுவேன் கேட்காதே !

சாட்டுச் சொல்லி சொல்லி சாகடிக்காதே


உண்மை இங்கே முக்காடு போட்டு
முடங்கிக் கிடக்குது
பொய்கள் மட்டும் பரிவட்டம் கட்டி
பல்லாக்கில் சுற்றுது
தீமை மட்டும் தீயைப்போலே தினம் ...
தீண்டிக்கொள்ளுது
அன்பு ஏனோ அடுப்பில் வெந்து காற்றில்
கரைந்து போகுது
உறவுகள் எல்லாம் உதட்டில் மட்டும்
ஊஞ்சல் ஆடுது
உரிமை என்று சொல்லிச் சொல்லி பல
உயிர்கள் போகுது
நாளைய உலகம் என்னவாகுமோ என
மனசுது ஏங்குது
நல்லதை சொன்னால் நாத்திகன் என்றே
சாயம் பூசுது
நல்லதும் கெட்டதும் சாமியின் கணக்கென்று
ஆத்திகம் சொல்லுது
இப்படியே எல்லாத்துக்கும் சாட்டுச் சொல்லி
சாட்டுச் சொல்லியே எங்கள் வாழ்க்கை ஓடுது !!!
 

அறிவு கெட்ட ஆட்டுக்குட்டி


ஓநாய் எல்லாம் ஒன்று சேர்ந்து
ஆட்டுக்குட்டியை வாழ்த்துதடா
உண்மை அறியா ஆட்டுக்குட்டி
ஆனந்தத்தில் துள்ளுதடா
...
வெளுத்ததெல்லாம் பால் என்று
தடுத்த போதும் கேட்காமல் வாய்
நுரைக்கக் குடிக்குதடா

பாசம் உள்ள கழுதை ஒன்று மோசம்
போகும் நிலையைக் கண்டு கோஷம்
போடத் தவிக்கின்றது ஓசை புரியா
நாசம் போகும் குட்டி காதுகளில்....

புரிந்தவர்களுக்கு இது புரியட்டும் புரியாத
நபர்களுக்கு இதுவும் கடந்து போகட்டும்
 

தேனிக்கும் தேன் அவள்


தேனீக்கள் கூட்டத்துக்கு செய்தி யார் சொன்னது
பூவை அவள் பூவென்று தேன் குடிக்க அலையுது
தென்றலிடம் தூது விட்டு தேம்பி தேம்பி அழுகுது
தேவதை அவள் என்று திருவிழா நடத்துது
தொட்டுப் பார்க்கமுன் சுவைக்குதே நாவென்று...
எட்டுக் கட்டையிலே மெட்டமைத்துப் பாடுது
கிட்டப் போகாதே உன் புகழ் கெட்டுப்போகும்
என பட்டாம்பூச்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்குது
இத்தனை அம்சங்கள் மொத்தமாய் பெற்றவள்
என்னிடம் இருப்பதை தேனீக்கள் அறியுமோ....???
 

அக்கரையும் இக்கரையும்

இக்கைரையில் இருந்து கொண்டு
அக்கரையை பச்சை என்போம்
அக்கரைக்கு சென்றடைந்த பின்னே
இக்கரையே சொர்க்கம் என்போம்
அக்கரையும் இல்லாமல் இக்கரையும் ...
இல்லாமல் நடுக்கடலில் தத்தளிப்போம்
நீ எக்கரைக்கு சென்றாலும் உனக்கு உன்
வாழ்வில் அக்கறை இல்லையென்றால்
சக்கரைப்பந்தல் கூட கல்லறை சாமதிகளே 

நான் காணும் கனவுலகம்


உழைக்கும் மனிதன் உயர வேண்டும்
உரிமை எல்லாம் கிடைக்க வேண்டும்
பசிக்கும் வயிறு நிறைய வேண்டும்
பச்சைப்பிள்ளை சிரிக்க வேண்டும்
பாலில் விழுந்து குளிக்க வேண்டும்...
தந்தை அசந்து உறங்க வேண்டும்
தாயின் கனவுகள் மலர வேண்டும்
இப்படி ஒரு உலகம் வேண்டும் என்று
எல்லா உயிரும் நினைக்க வேண்டும்

கலகத்தில் பிறக்கும் பெரும் சுகம்


விழியில் புகுந்து உதட்டில் தொடங்கி
இடையில் நடக்குதே நாடகம்
உடைகள் இங்கே தடைகள் போட தினம்
கலகம் பிறக்குமே இது நிஜம்
வார்தை இல்லா மொழிகள் பேசி யாடையாலே...
பதில்கள் கூறி
வழக்கு முடிப்பதும் உயிரில் கலப்பதும் உலகம்
அறிந்த பெரும் சுகம்.. !
 

தாகம் தீர்க்கும் கீதம் அவள்


நினைக்க நினைக்க உருகுதே என்
நினைவில் அமுதம் சுரக்குதே
இறைக்கை ஏதும் இல்லாமல் நான்
பறந்த நினைவு மலருதே
கன்னம் துடைத்த கைக்குட்டை என் ...
கவிதை நூலானதே
எண்ணம் போலே தாளம் போட அவள்
மேனி மேடையானதே
மோகத்திலே மெட்டமைத்து காமத்திலே
தொட்டெடுத்து
உன் ராகத்தின் கீதத்தால் என் தாகம்
தீர்ந்து போனதே...!

கடவுளும் மனிதனும் கல்லடா

என் இனிய தேசமே உன் இதயம் தான் கல்லோ
கல்லுக்கே பாலூற்றும் கடமை வீரர்கள்.. நாம்..
சொல்லுக்கு உயிர் மாய்க்கும் சொல்வேந்தர்கள்
இங்கே பச்சைப் பிள்ளைகள் பிச்சை எடுக்குதே
உச்சி வெயிலில் அதை தட்டி விட்டிட்டு தானம்...
செய்கிறாய் உச்சி மலையில், நம் தம்பி தங்கைகள்
குச்சிமிட்டாயை எட்டிப்பார்த்து நாவில் எச்சி ஊறுதே
நீ மிச்சம் மீதியை பிச்சுப் போட்டதும் நக்கிக்கொள்ள
இவர்கள் என்ன தெரு நாய்கள் கூட்டமா...............?

கொழுக்கி போடும் விழிகள்


நீ தடக்கி விழுந்தாய் மார்பினிலே
தாவிப் பிடித்தேன் இடையினிலே
கொழுக்கி போட்டாய் இதயத்திலே
அடங்கிப் போனேன் உனக்குள்ளே
மடக்கிப் போட்டாய் மடியினிலே...
மடிந்து கிடந்தேன் மயக்கத்திலே
கவிதை சொன்னாய் விழிகளிலே
காய்ந்து போனது என் உதடுகளே
தீயை மூட்டுதே உன் மூச்சு ஐயோ
தேய்ந்து போகுதே என் பேச்சு, ஏன்
என் தேகம் முழுவதும் தீயாச்சு....?
 

நரி ஊதும் சங்கொலி

புல்லாங்குழலில் சங்கொலி
புரியாத போதும் கரவொலி
பல்லாக்கு தூக்குதே பலநரி
அறியாமல் ரசிக்குதே சிறுஎலி
யார் கட்டுவது பூனைக்கு மணி
எதற்கு இதையெல்லாம் பார்க்கும்
போது என் மனதில் இப்படி ஒரு வலி ?

ஆணவத்தில் மந்தைகள்

தாய்மொழியில் சண்டை தலைக்கன மண்டை
போர்வடிவில் கருத்து பொறுப்பற்ற பேச்சு
வாய்கிழிய வசனம் விழிமூடிப் பயணம்
கூர்மையில்லா புத்தி சொல்லிலே கத்தி
ஆணவத்தில் வாக்கு அகந்தைப் போக்கு...
செயலிலே விந்தை செயல்ப்பாடோ மந்தை
காரணம் இல்லாமல் காரியத் தடுமாற்றம்
இத்தனை குறையுடன் எத்தனை மனிதர்கள்
கற்பனை பண்ணவே கண்விழி பிதுங்குதே !!

என் உயிர் உனக்கே சொந்தம்

என் ஆயுள் உனக்கென எழுதிக்கொடுப்பேன்
என் உயிரே நீ என உலகில் பதிப்பேன்
என் சுவாசக்காற்றிலே வீசுகின்ற மூச்சும்
உன் வரங்கள் என்றுதான் வணங்கிடுவேன்
உயிரே போகும் போதுகூட என் உறவே ...

நீ எனச் சொல்லிச் சாவேன்
என் சாவை தடுக்கும் மந்திரங்கள் உன்
மடியில் உள்ளதே என் அன்பே
எத்தனை ஜென்மங்கள் கடந்தாலும் உனை
மார்பில் தாங்கிட தவம் இருப்பேன்
மண்ணில் மடிந்து விழும்போதும் என்
மலரே உன் மடியில் என் உயிர் துறப்பேன்
நீயே என் உயிரடி என் எல்லாமானவளே 

கண்ணீர் தெளிக்கும் பன்னீர்


ஹா ஹா ஹா எனச் சிரித்தேன்
ஆஹா ஆஹா கவிதை கவிதை
இதுவே கவிதை என்றாய் அன்று
ம் ம் ம் நடக்கட்டும் நடக்கட்டும்
என்று பலர் கருத்தும் சொன்னார்கள்...
ஓஹோ ஓஹோ அதுதான் அதுதான்
என பதில்கள் சொல்லி மகிழ்ந்தேன்
இன்று ஓஓ ஓஒ என்று அழுகின்றேன்
நீயோ ஹா ஹா எனச் சிரிக்கின்றாய்
பச்சைப்பிள்ளையில் பச்சைமிளகாய்
கடித்தும் இவ்வாறு கலங்காத கண்கள்
பாசத்தை குடித்ததினால் கலங்கின்றதடி
இப்போது நீ என்னை கண்ணீர் வடித்து
வாழவிட்டாலும் உனை என்றும் நான்
பன்னீர் தெளித்து வாழ்த்திடுவேனே.....!
 

தமிழ் என் தாய்,மொழி


நான் தேன் குடித்து வளரவில்லை
தமிழ் பால் குடித்து வளர்ந்தேன்
முழுமையாக குடிக்க முடியாமல்
என் ஊரையும் தாயையும் விட்டு
இங்கு தனியாக வந்தேன் ஆனால் ...
என் தமிழை விட்டு வரவில்லை
கோதாரியின் சேதாரத்தை நான்
மேதாவிகளிடம் கற்கவில்லை
என் பூட்டன் பாட்டனிடம் கற்றேன்
குங்குமப்பூவை நான் பாலில் கலக்கி
சந்தன நிறம் பெற குடித்தவனில்லை
நன்னாரி வேரை பிடுங்கி தேநீரில்
கலக்கிக் குடித்து வளர்ந்தவன்
பொன்னால் செய்த தொட்டிலில்
படுத்து உறங்கியவன் இல்லை நான்
பொன்னாங்காணி மேல் தவழ்ந்தவன்
எனக்குப் புளியம்பழம் பிடிக்காது ஏன்
என்றால் அது கனிந்ததும் தன் கோதோடு
ஒட்டி உறாவாடுவதில்லை என்பதால்..... !

கனவை கெடுத்த வெள்ளைக்கிழவி


மழையில் நனைந்த போதும் குளிரில்
நடுங்கவில்லை
காரணம் என்ன வென்று கண்விழித்துப்
பார்க்கின்றேன்
என்னவள் போர்வையாகி தீ முத்தங்கள்...
கொடுக்கின்றாள்
இறைக்கைகள் ஏதுமின்றி நான் வானத்தில்
பறந்துகொண்டிருந்தேன்
ஐயஹோ அந்தநேரம் பார்த்து அழைப்பு மணி
அடிக்கக் கேட்டு
திடுக்கிட்டு நான் எழுந்து கதவைத் திறந்து
பார்க்கின்றேன்
கடவுளை நினைத்தால் உனக்கு கவலைகள்
ஏதுமில்லை எனும்
விளம்பரத் தாழ்களோடு வெள்ளைக்காரப்
பாட்டி ஒன்று
குடிகெடுத்த கிழவி என்று கோபத்தையும்
அடக்கிக்கொண்டு
ஓடிப்போய் தூங்கிவிட்டேன் என்னவளை
காணவில்லை
என்னதான் ஆச்சுதென்று நான் தூக்கத்திலே
ஏங்கித்தவிக்க
விடிந்தால் வெள்ளிக்கிழமை நான் விரதமடா
என்னவனே
உனக்கு சைவம் பிடிக்காதேடா என சொல்லிச்
சிரித்தாள் தள்ளி நின்று
அடப்பாவி அங்கேயும் நீயாடா ஆண்டாவா....?
 

Monday, 12 January 2015

சொர்க்கத்துக்கு ஏது காவல்க்காரன்


இளமை விவேகம் இல்ல வேகம் கொண்டது
கட்டிப் போட முடியாதது
இந்த இளமையிலே சில கடமை உண்டு அதை
முடிப்பதிலே பல நன்மை
அந்த கடமைகளில் சில கலைகள் உண்டு ...
அதை படிப்பதுமே பல நன்மை
இந்த கலைகளிலும் சில கலவை உண்டு அதை
பழகுவதும் பேரின்பம்
அந்த கலவைகளில் பல அமிர்தம் உண்டு அதை
பருகுவதும் பேரின்பம்
சொர்க்க வாசலிலே காவல் யாரும் இல்லை நீ
நுழைந்து விடு துணை கொண்டு...!
 

பொறுமையும் பெரும் ஆயுதமே


திடுக்கிடும் தகவல்கள் தினம் தினம் நடக்குது
தடுத்திட முடியாமல் ஒரு இனம் தவிக்குது
துடிக்கின்ற நெஞ்சங்கள் படுக்கையில் கிடக்குது
நடிக்கின்ற வஞ்சகர்கள் கொடிகட்டிப் பறக்குது
இருக்கின்ற இடத்திலே படுக்கைகள் விரித்திட...
மறுத்திடும் கொடுமையை யாரிடம் சொல்லிட
பொறுமையாய் இருப்பவன் பொறுப்பில்லை
என்றில்லை பெருமையை காத்திட பொறுமையும்
ஆயுதமே இதை புரிந்து கொள்ளடா மானிடனே !!!
 

சொல்லத் தெரியாத காரணம்

யாரும் எதுவும் சொல்லவில்லை இருந்தும்
என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் சொல்லத் தெரியவில்லை,
காதல் சிறையினில் விழுந்துவிட்டேன்
வலியைத் தாங்கப் பழகிவிட்டேன்.
உன்னை உன்னிடம் தருகின்றேன் என்னை
என்னிடம் தந்துவிடு...... !!!

நான் விழுந்தாலும் உனை விழவிடேன்

மறக்கமுடியும் என்பதையே நான் மறந்த பின்
உனை வெறுக்க முடியுமா என் மைனாக்குஞ்சே
நான் இறக்கும் தருணத்திலும் என் இதயத்தை இறுகப்பற்றிக்கொள்வேன், காரணம் மண்ணில்
சாய்ந்து விழும்போது உள்ளே நீ வீற்றிருக்கும்
உன் இருக்கை சரிந்திடக் கூடாது என்பதற்காக !

வீண் பேச்சை விட்டுத்தள்ளு

சொர்க்கத்தில் முடிவென்று சொன்னவன் யாரடா
பக்கத்தில் அவன் இருந்தால் பறக்கும் பல்லடா
சாமானியன் என்பதின் அர்த்தம் தான் என்னடா
சாதிக்க நினைப்பவன் சறுக்கினால் சிரிப்போடா
சாமிக்குப் படைத்தால் பெய்திடும் மழையோடா
விதி செய்த சதி என்ற முழக்கத்தை அகற்றடா
அலைபோலே நீ எழுந்து வெற்றிக் கொடிநாட்டடா

அதிக அன்பும் ஆபத்தே




அன்பால் வெற்றி பெற்று வாழ்ந்தவர்களைத் தான்
இதுவரை நான் அறிந்துள்ளேன்,........... இன்றுதான்
அன்பால் தோற்று கெட்டுப் போனவரை பார்க்கிறேன்
இந்த அன்பின் கொடுமையை யாருக்கு சொல்லி அழ ?

அளவுக்கு மிஞ்சிய ஆசை

ராமனின் கால் பட்டு கல் பெண்ணாகணும்
என்பது அந்தக்கால வழக்கு
ராவணன் நிழல் பட்டாவது பொன்னாகிடனும்
என்பது இந்தக்கால கணக்கு
பில்கேட்ஸூக்கே மருமகள் ஆக ஆசைப்படும்
கன்னி ஒருத்தியை
பீடி குடிக்கும் பயபுள்ள மகன் ஆசைப்பட்டால் .?