இதுதான் இன்றைய உலகம்
வெளிநாட்டில் வாழ்கின்றோம்
வெளிப்படையாய்ப் பேசுகின்றோம்
வேதனையைச் சொல்கின்றோம்
வெகுளியெனப் பெயர்வாங்குகிறோம்
காசு பணம் மட்டும் தான், இங்கே
நம்மை கணக்குப் போட்டு வைக்கிறது
பாசத்தோடு ஊரு சென்றால், அங்கே
உன் பையைக் காட்டு என்கிறது, உந்தன்
பையில் ஒன்றும் இல்லை என்றால்
மெல்லக் கையைக் காட்டி அனுப்புது
No comments:
Post a Comment