Tuesday, 27 March 2012

சிந்தனையில் வஞ்சனை ***





மந்தைகள் கூடும் சந்தையில்
விந்தைகள் என்ன விலை
சந்தனம் பூசிய சாக்கடையில்
சிந்தனைக்கு என்ன வேலை
வஞ்சங்கள் போடும் பஞ்சனையில்
தஞ்சனை கொள்வோர் எத்தனை
…....எதற்கு இந்த மந்த நிலை
யார் பின்னி வைத்த வலை
இது புரியாததால் மனதில் அலை..

Monday, 26 March 2012

இதயத் திருடி ***




கவிதை எழுதுகிறேன் முடியவில்லை
காரணம் என்னவென்று புரியவில்லை
இதயம் இருப்பதாக உணரவில்லை
இருந்திருந்தால் கவிதை ஏன் வரவில்லை
திருடிச் சென்றவர் யாரென அறியவில்லை
திருப்பித் தருவாரா அதுவும் தெரியவில்லை ??????

அவளுக்கு ஒரு கடிதம் ... !!! ***




அவளுக்கு ஒரு கடிதம் ... !!!

கவிதையே உன்னை காதலி என்றேன்
கற்பனையை கல்யாணம் செய்தேன்
காதலியே மனைவி ஆனதால் தானோ
என் நட்பை என்னிடம் நீ பிரித்து விட்டாய்
இதைத்தான் அன்று அவளிடம் சொன்னேன்
அருமை அருமை என பாராட்டி மகிழ்ந்தாள்
அதைத்தான் இன்றும் அவளிடம் சொன்னேன்
துரோகம் என எண்ணி எனை விட்டுச் சென்றாள்
விளக்கம் சொல்லமுன்னே வெட்டிவிட்டாள்
நம் உறவை.........
குழப்பம் தீர்க்க முடியாமல் குமுறித் தவிக்கின்றேன்
முன் கோபம் கொள்வதினால் உந்தன் பிடிவாதப்
பேச்சினினால் நீயும் முழு முட்டாள் ஆனாயடி
எல்லாம் நன்மைக்கே என நினைத்து வாழ்ந்தாலும்
இது கூட நீ சொன்னதால் என் நினைவில் நின்று
வாட்டுதடி,...சிரிப்பதா அழுவதா சிந்தைக்கு புரியலடி
எது நட்பு எது நம்பிக்கை ஒன்றுமே விளங்கலடி
ஐயோ ஐயோ......... என்ன வாழ்கையடா இது ........... !!!

எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன் ..... அன்பே சிவம் !

Friday, 23 March 2012

உதட்டோரம் புன்னகை ****


விழியோரம் வீச்சருவாள், எனை
வெட்டி வெட்டி சாய்க்கின்றாள்
உதட்டோரம் புன்னகையால், எனை
ஓரம் கட்ட பார்க்கின்றாள்
கழுத்தோரம் கனி கொண்டு, எனை
காமத் தீயில் தள்ளுகிறாள்
இடுப்போரம் கொடி எடுத்து, எனை
கட்டிப்போடப் பார்க்கின்றாள்
முறை மச்சாள் நான் என்று, எனை
முட்டி போட வைக்கின்றாள்
தப்பி ஓட நினைத்தாலும், என்
கனவில் வந்து வதைக்கின்றாள் …

எது தப்பு....?? ? ***



தப்புச் செய்பவன்
தைரியமாய் நடக்கிறான்
தடுக்கி விழுந்தவன்
தயங்கித் துடிக்கிறான்
தர்மத்தை மதிப்பவன்
கண்ணீரில் மிதக்கிறான்
அதர்மம் கொண்டவன்
அன்ணாந்து சிரிக்கிறான்
வம்பு செய்பவன்
வாட்டி வதைக்கிறான்
நட்பெனச் சொல்லி
நாடகம் ஆகிறான்
அன்பைச் சுமப்பவன்
பைத்தியம் ஆகிறான்
ஆசைப் படுபவன்
வாழத் துடிக்கிறான்..

மனசை கெடுத்தவள் ***



பொட்டு வைச்ச பொம்புளையே
விட்டுப்புட்டு எங்கெ சென்ற
கட்டுப்படா ஆம்பிளையே
கண்ணுக்குளெ கட்டிவச்செ
குட்டி போட்ட பூனைபோலே
எட்டி எட்டி பார்க்கவச்ச
கெட்டுப் போன என்மனச
வெட்டி நீயும் விட்டுப்புட்ட...

நின்மதியும் என்மதியும்



நிம்மதி என்னை கேற்குது கேள்வி
உன் மதி எங்கே போனது என்று
வெண்மதி போலே வந்தவள் உன்னை
தன்மதி இளக்க வைத்தது ஏனோ
கண்ணகி என்று நினைத்ததினாலே
முழுமதி இழந்தேன் பொன்மொழியாலே......

வாழ்வில் வஞ்சனை ***



வாழ்க்கையை மனிதன் வரம் என நினைத்து
வாழ்ந்திடும் போது வஞ்சனை தொல்லை
வழியினில் காணும் மனிதனின் பேச்சில்
வலிகளின் வண்ணமும் ஓயவும் இல்லை
முன் அடி வைத்து முயற்சிக்கும் போதும்
மூடரின் முழக்கமும் முடிவற்ற எல்லை...

உயிரா மதமா ? ***


இறைவன் என்பவன் எவனடா
இருந்தால் நீயும் காட்டடா
உருவம் வைத்து வழிபட்டு
சுகம் காண நினைக்கின்றாய்
மதத்தை தானே நீ கொண்டு
மனித உயிரை அழிக்கின்றாய்
மதம் பிடித்து அலைகின்றாய்
கடவுள் என்று சாயம் பூசி
கலியுகத்தை வதைக்கின்றாய்
காவி உடுத்து நடிக்கின்றாய்
இளமை தீர்ந்து போன பின்பும்
இன்பம் காணத் துடிக்கிறாய்
சிறையில் சிக்கி தவிக்கின்றாய்.....

பணமா குணமா ??? ***





பணம்..... பணம்..... பணம்
பணம் இருந்தால் குணம் மாறும்
அவன் நடை கூட தடம் மாறும்
பகை கூட வெருண்டோடும்
பண்பங்கே மெலிந்தாடும்
பாசங்கள் வெறித்தோடும்
பச்சோந்தி உறவாடும்
சொல் வாக்கு குறைந்தாலும்
செல்வாக்கு நிறைந்தாடும்
உண்மைகள் அங்கே பலியாகும்
பொய் தானே இங்கே விருந்துண்ணும்...

புன்னகைக்கும் புலிக்குட்டி ***


புள்ளி இல்லா மான் குட்டி, இவள்
புன்னகைக்கும் புலிக்குட்டி
தாவணியில் பசுக்கன்று
தாவிக்குதித்தது எனை கண்டு
சேலை கட்டிய செவ்வந்திப் பூ
சேட்டை பண்ணிச்சு சதிர் கொண்டு
கூந்தல் விரித்த குயில் ஒன்று
காதல் கவிதை வடித்தது
கவிதை படித்து ரசிக்க முன்
கண்ணில் தோன்றா மறைந்தது......

இதயத்தின் குமுறல் ***


கையிலே உள்ளது ரோசப்பூ , என்
நெஞ்சிலே ஆடுது அவள் நினைப்பூ
எங்கே தான் சென்றாளோ தெரியவில்லை
என்ன தான் ஆனாளோ புரியவில்லை
வலையில் நான் தேடுகிறேன் சிக்கவில்லை
என் இதயத்தில் வலி மட்டும் நிற்கவில்லை
அறியாமல் என் கண்ணில் தூக்கமில்லை
அவள் வந்து சேராது வாழ்கையில்லை.........
எது வந்த போதும் நான் தளரவில்லை
அவள் மிது நம்பிக்கை குறையவில்லை

இன்றைய உலகம் ***


பொல்லாத பூமி பொடிவைத்துப் பேசும்
நல்லோரை கண்டு நளினமாய் நகைத்திடும்
இல்லாதோரை ஏளனம் செய்யும்
இருப்போரைக் கண்டு ஈ என்று இளித்திடும்

யாரடி நீ ???? ***



நான் பார்த்த பூக்களிலே
உன் சிரிப்பு மேன்மையடி
உன் உதடு மட்டும்தான்
உலகிலே மென்மையடி
சத்தியமாய் சொல்கின்றேன்
தாமரை உன் இதழ்களடி
தயங்காமல் சொல்கின்றேன்
தேவதை உன் தோழியடி
எங்கே நீ பிறந்தாய்
எனக்குள்ளே ஏன் வந்தாய்
இன்றோ எனை மறந்து
உனக்காக வாழ்கின்றேன்
வானமும் பொழியுது
பூமியும் செழிக்குது
உன் நினைவு மட்டுமே
என் மனதை வாட்டுது !!!!!

நிலா பெண்ணே ***


பால் நிலவை பார்க்கயிலே
பாவை உந்தன் நினைவினிலே
பாதி விழி நனையுதடி
மிதி விழி நனைய முன்னே,
விழிக்குள்ளே வந்தவளே
இதயத்தை தந்து விடு
இமை மூடித் தூங்க விடு.....

மந்திரக்காரி ***


சூனியக்காரி சூனியம் வைத்து
மந்திரவாதி மந்திரம் போட்டு
இயந்திரம் அதை தந்திரம் பண்ணி
குந்தகம் ஆகி நிற்பதுபோல்
சிந்தனை கூட விந்தகமாகி, என்
சிந்தையில் வந்து குத்துறதே....
ஏன் ஏன் அது ஏன்....................???

துடிக்கின்றேன் பறக்கின்றேன் ***


எதற்கு இந்த சஞ்சலம்
எவர் செய்த வஞ்சகம்
பறக்கின்றேன் விண்ணகம்
மறக்கின்றேன் எனை தினம்
தவிக்கின்றேன் பல யுகம்
துடிக்கின்றேன் மறு கணம்
சிரிக்கின்றேன் ஒரு விதம்
சலிக்கின்றேன் எனை நிதம்
வலிக்குதே என் மனம்
ரசிப்பதே அவள் குணம்.

உடைந்த இதயம் ***


கண்ணில் பட்டு நெஞ்சை தொட்டு
உள்ளம் கொள்ளை கொண்டவளே
வண்ணம் பூச வார்த்தை கோர்த்து
கதைகள் பல சொன்னவளே
என்னை விட்டு எங்கே சென்றாய்
எண்ணம் என்னை கொல்லுதடி
இமைகள் மூடித் திறக்க முன்னே
இடியை நெஞ்சில் போட்டவளே
இருட்டில் என்னை தள்ளிவிட்டு
இறைவன் ஆணை என்றவளே
விதியே என்று சொன்ன போது
என் விழியில் அருவி கொட்டுதடி
சகியே உன்னை கண்டால் நானும்
கடவுள் உண்டு என்பேனடி........


மயங்கினேன் ***


பூவைக் கண்டு மயங்கவில்லை, உன்
புன்னகை கண்டு மயங்கிவிட்டேன்
வண்ணம் கண்டு மயங்கவில்லை, உன்
வார்த்தை கண்டு மயங்கிவிட்டேன்
மேகம் கண்டு மயங்கவில்லை, உன்
மேனி கண்டு மயங்கிவிட்டேன்
மானைக் கண்டு மயங்கவில்லை, உன்
மனதை கண்டு மயங்கிவிட்டேன்
நிலவைக் கண்டு மயங்கவில்லை, உன்
நினைப்பே எனக்கு மயக்கமடி...

......

விழிக்க மறுக்கும் விழிகள் !!! ***



நரிகள் கூட்டமோ நாட்டுக்குள் அதிகம்
நல்ல பாம்புகள் கூடி போடுது ஆட்டம்
ஓநாய்கள் தான் இங்கு ஓட்டுக் கேற்குது
செம்மறிக் கூட்டமோ வாக்குப் போடுது
பூனைகள் தான் இங்கே புரட்சி பண்ணுது
புரியாத எலிகள் புன்னகை செய்யுது
விழிகள் இருந்தும் விழிக்க மறந்தோம்
விண்ணை பார்த்து கையை விரித்தோம்
மண்ணை நோக்கி மழை பெய்த போதும்
நம் எண்ணங்கள் இன்னும் துளிர்க்கவில்லையே...

மோகம் ஊட்டும் தேகம் !!! ***


மாலைக் கருக்கல் வேளையிலே
மான்கள் துள்ளும் சோலையிலே
மயில் போலே மங்கை ஒன்றை
மனக்கண்ணால் நான் பார்த்தேன்
செருக்காத சிலையாக
நறுக்காக நின்ற அவள்
கிறுக்காத கவிதை போல்
சறுக்காது எனை ஈர்த்தாள்
மோகத்தில் நான் மூழ்கி
தாகத்தில் தவிக்கயிலே
கட்டுடலைத் தான் அசைத்து
மொட்டிதழை விரித்தாளே
அம்பொன்று பாய்ந்து வந்து
அடிமனதில் துழைத்தது போல்
ஐம்புலமும் படபடத்து,,, நான்,
அங்கேயே சாய்ந்தேனே
தென்றல் போல் வந்த அவள்
தேகத்தை தழுவியதால்
தேனி போல் நான் மாறி
பூவைக்குள் மறைந்தேனே..

நேசிக்கிறேன் பூஜிக்கிறேன் ***



கடலைவிட அலையை நேசிக்கிறாய், நான்
கடவுளைவிட உன்னை நேசிக்கிறேன்
பூவைவிட காம்பை நேசிக்கிறாய், நான்
பூமியைவிட உன்னை நேசிக்கிறேன்
மழையைவிட துளியை நேசிக்கிறாய், நான்
மனசாலே உன்னை சுவாசிக்கிறேன்
அன்னையாய் உன்னை நேசிக்கிறேன்
அன்பாலே உன்னை பூஜிக்கிறேன்
உயிருக்கும் மேலாக நேசிக்கிறேன் என்
உடலுக்கு உயிராகப் பாவிக்கின்றேன்
எப்படி சொன்னாலும் தீராது
எந்த ஏட்டிலும் இனி வராது
உடலுக்கும் உயிருக்கும் பாலமா
இதை உதட்டாலே சொல்வதில் தீருமா ?????????

முத்தத்தில் வேர்த்த முத்து ***


பொத்தி வைத்த மொட்டு ஒன்று
மெத்தையிலே பூத்தது
மூடி வைத்த முத்து ஒன்று
முத்தத்திலே வேர்த்தது
கால் முளைத்த வெள்ளி ஒன்று
கவித்துவமாய் பேசுது
கண் சிமிட்டும் கவிதை ஒன்று
கன்னியாகச் சுற்றுது
கை முளைத்த நிலவு ஒன்று
கன்னத்திலே கனி கொண்டு, தன்
கண்ணாளன் வரவுக்காக
காத்திருக்கும் கிளி ஒன்று....

வாட்டும் மனச்சாட்சி


சுளற்றி விட்டாய் பம்பரத்தை
சுளன்று வந்து நிற்கமுன்னே
சூழ்ந்து வந்த என் பாசம்
சுளர உன்னை வைக்குதடி
சூழ்ச்சி செய்து வந்த உன்னை
சுத்தாமான என் அன்பால்
சுட்டு விட்டேன் உன் மனதில்
பாவத்தை செய்த நீயும்
பாசத்தை கண்டவுடன்
பதட்டம் வந்து இப்போ
பாடாய் படுத்துதுன்னை
மனசாட்சி உயிர் பெற்று
மங்கை உன்னை வாட்டுதடி
காயங்கள் ஆறினாலும்
தழும்புகள் சாட்சி ஆகும்..
வேஷத்தை கலைத்து விட்டு
பெண்மைக்கு மேன்மை கொடு....

இது எதற்கு ???



பாதை மறந்து போகும் உனக்கு
பாசம் காட்டும் நரிகள் எதற்கு
கூட வரும் கூட்டம் எல்லாம்
கூவுகின்ற ஓலம் எதற்கு
சத்தியத்தை சாகடித்து
சாட்சி சொல்லும் பணி எதற்கு
சமுதாயச் சந்தையிலே
சதி செய்யும் சாதி எதற்கு
சந்தனத்தை தள்ளி விட்டு
சாக்கடையின் நட்பு எதற்கு....



இதயத்தின் சொந்தக்காரி ***


தாலாட்டும் தென்றலுக்குச் சொந்தக்காரி, இவள்
தள்ளாடும் வயதிலும் கொள்ளைகாரி
முல்லை தோட்டத்துக் காவல்காரி, இவள்
முத்துகள் சந்தைக்குப் பங்குக்காரி
தாமரை இதழ்களின் உறவுக்காரி, இவள்
தங்கத்தின் ஜொலிப்புக்கு உரிமைக்காரி
வாளெடுத்து விழிகளில் வீசும் காரி, இவள்
வாழ்கைக்கு உகந்த வீட்டுக்காரி
சாமர்த்தியக் கதைகள் சொல்லும் காரி, இவள்
தாம்பத்திய உறவில் கெட்டிக்காரி
புருசனை மயக்கும் பூக்காரி , இவள்
புன்னகை செய்யும் புதுமைக்காரி
கண்களில் மையில்லாக் கவர்ச்சிக்காரி, இவள்
கருவினில் எனைத் தாங்கா தாய்க்காரி.......

புலம்பும் மனசு ***


நிலவரம் எல்லாம் கலவரம் ஆனால்
உடல் நலம் கூட பலவீனம் ஆகும்
இரு மனம் சேர்ந்து குலவிய போதும்
ஒரு மனம் மட்டும் தவிக்குது இன்று
பிரிவினைத் தந்து தொலைவினில் நின்று
உருகிட என்னை வைத்திட்ட போதும்
துணிவுடன் நின்று துயரத்தை வென்று
தோளினில் உன்னை சாய்த்திடுவேனே,,,

பொறுப்பற்ற பொய் ***


செய்பவன் தப்பைக்கூடச் சரிவரச் செய்தால்
உண்மையின் தன்மையை உணர்ந்திட மறுக்கும்
உயிரினம் வாழ்ந்திடும் உலகம் தான் இதுவே
பொய்யெனத் தெரிந்தும் பொறுப்பற்றுப் போகும்
புருஷர்கள் ஆளும், வாழும் பூமியும் இதுவே
தன் நலம் பேணவே தவிப்பெனக் கொண்டு
பிறர் நலன் பார்க்கா பூவையர் பலர் உண்டு
என்நிலை வந்தும் தன்நிலை மாறா (த்)
மனிதனை (தமிழனை) இன்று தேடுறேன் இங்கே...........

கெஞ்சும் நெஞ்சு ***



கொஞ்சிக் கொஞ்சிப் பேசிப் பேசி, எந்தன்
நெஞ்சில் மஞ்சம் கொண்டவளே, உன்னை
கெஞ்சிக் கெஞ்சிக் கேற்கின்றேன், உந்தன்
மிஞ்சிப் போன நினைவுகளே, எந்தன்
நெஞ்சில் நஞ்சை வார்க்குதடி
வஞ்சி நீயும் கொஞ்சம் வந்தால், எந்தன்
பிஞ்சு நெஞ்சு பூக்குமடி....

நட்புக்கு வணக்கம் ***



நட்பே கொஞ்சம் பாராய்
உண்மை தன்மை கேளாய்
வணக்கம் என நான் சொல்ல
வருக வருக நட்பேயென்றாய்
நலமா என நான் கேற்க
நகைத்து நீயும் வரவேற்றாய்
நண்பர் நாமே என்று சொல்லி
நாள் தோறும் பேசவைத்தாய்
இருவர் மட்டும் உலகினிலே
இருப்பதாக கவி படைத்தாய்
உந்தன் உதயம் வேண்டுமென
உருகி உருகி கதை பயன்றாய்
முகத்தை நீயோ பார்ப்பதர்க்கு
முனிவன் போலே தவம் பூண்டாய்
முகத்தை காட்ட வந்த என்னில்
அகத்தை ஏனடி அள்ளிவிட்டாய்.???????

தேவதை என் சொந்தம் ***




தேவதை உன் சொந்தமடி நீயோ எனக்கு பந்தமடி
உன்னை கவிபாட என்னில் வார்த்தை இல்லையடி
நாணங்கள் தூவிய வண்ணங்கள் உன் மேனி
மை கொஞ்சம் பொய் கொஞ்சம் மயக்குதே உன் கண்கள்
பழரசம் வடித்திடும் பாவை உன் வார்த்தையை
பருகி நான் குடிப்பதால் அடைவேனே மோட்ஷத்தை
உன்மேனி அழகை ஆதிக்கம் செய்யும் ஆடைக்கு
கொடுத்திடவா நாளை ஆனந்த விடுமுறை
நாணத்தில் ஆடி வளைகின்ற அவள் இடை
வார்த்தையில் கூறி முடிப்பது அழகில்லை.....

கண்ணீரில் குளிக்கும் மீன் ***



தண்ணீரில் வாழும் மீனுக்கு
தரையில் என்ன தாகம்
விண்ணீரில் வாழும் மீனுக்கு
மண்மீது என்ன மோகம்
கண்ணீரில் குளிக்கின்ற போதும்
உன் சொல்நீரில் மிதக்கின்றேன் நாளும்

தென்றல் தீண்டியது


தென்றலே என்னை தீண்டாதே
பெண்மையே என்னை வாட்டாதே
வன்மையாய் வந்து தாக்காதே
உண்மையை பொய்யாய் மாற்றாதே
சொல்லிலே சாயம் பூசாதே
என்னிலே உன்னை தேடாதே....
கண்ணிலே என்னை பூட்டாதே

தூக்கம் இழந்த விழிகள் ***


மெல்லச் சிரித்தாய்
கண்ணை அசைத்தாய்
உன்னை ரசித்தேன்
என்னுள் நுளைந்தாய்
மண்ணை மறந்தேன்
விண்ணில் பறந்தேன்
கண்ணில் இன்றோ
தூக்கம் இழந்தேன்
உன்னை தேடி
எங்கும் அலைந்தேன்
என்னைப் பிரிந்து
எங்கே தொலைந்தாய்.....???

கண்களில் மழை ***


இடிபோலேவே நீ வந்தாய்
மின்னலாய் தான் சிரித்தாய்
வானவில்லாய் வசியம் செய்தாய்
வாடைக் கற்றாய் தழுவி நின்றாய்
இத்தனையும் செய்தவள் நீ தான்
ஆனால் மழை பொழிவது ஏனோ
என் கண்ணளில் மட்டும் தான்
நீயோ முகிலாக கலைந்து மறைந்தாய்.???

கவிபாடும் மூச்சு ***


பேசப் பேச இனிக்குதடி, உன்
பேச்சில் கவிதை மிதக்குதடி
மூச்சுக் காற்றோ சுவைக்குதடி
நீ முன்னே வந்தால் பசிக்குதடி..

வேஷம் போடும் உலகம் ***


மாயம் இல்லா வாழ்வு ஏது
மயக்கம் கொள்ள மனசு யாது
குழப்பம் இல்லா குடும்பம் கூறு
குமரி கண்ணில் நீரைப் பாரு
பாரு பாரு நல்லாய்ப் பாரு
பைத்தியக்கார உலகை பாரு
வேஷம் போடும் மனிதன் பாரு
வெந்து தவிக்கும் நட்பை பாரு
எல்லாம் பார்த்து நடனம் ஆடும்
நலிந்து போன நம்மைப் பாரு......!!!!!

கண்களில் கவிதை ***


துள்ளித் துள்ளி ஓடிவந்து
என்னை வதைத்தாள் ,அவள்
கண்களாலே கவிதை பல
அள்ளித் தெளித்தாள்
மென்மையாகப் பேசிப் பேசி
மெல்ல நெளிந்தாள் , நான்
மெய் மறந்து நிற்ப்பதனை
எண்ணிச் சிரித்தாள் கண்டு ரசித்தாள்.

என் மன மேடையில் ***


ஜாடையில் பேசிடும் பாவை அவள்
என் மன மேடையில் ஆடுறாள்
போதை கொண்டு
கூடையில் சுமந்திடும் பூவைப்போலே
புடவையில் சுற்றிடும் மங்கை அவள்
என் நங்கை இவள்.....

அவளுக்கு நான் அடிமை ***



விழியில் மோதி எனக்குள் இறங்கி
உயிரை வாட்டுவதேன்
மனதை மயக்கி அறிவை ஒடுக்கி
அடிமை ஆக்கியதேன்
விரகதாபம் விரட்டி என்னை
வேள்வி செய்கிறதேன்
இதழ்கள் திறந்து இருந்த போதும்
இருளில் அலைகின்றேனே 
பனியில் படுத்து புரழும் போதும்
தேகம் கொதிப்பது ஏன்.....ஏன்
உன் பேச்சில் என்றும் தேன் ஊறுது
என் மூச்சில் காமன் தேரோடுது
தேவதை விழிகளில் போதையும் வடியுது
தேகத்தை வாட்டிடும் தீயினை பொழியுது
தீயிலும் என் மனம் நீராடுது
தேவியின் பூஜைக்குப் போராடுது...

கொலைகாரி என் கொள்ளைக்காரி ***



வலிக்குதடி நெஞ்சம் பெண்ணே
நீயோ வந்து வந்து போகின்றாய்

துடிக்குதடி கண்கள் பெண்ணே
நீயும் தோன்றித் தோன்றி மறைகிறாய்
...
கொதிக்குதடி உள்ளம் கண்ணே , நீயோ
எனை வென்று கொன்று தின்கின்றாய்

ருசிக்கவில்லை ஒன்றும் எதற்கு .?
உன்னால் பசிக்கவில்லை இன்றும் எனக்கு

என் கண்களை ஏனடி கலங்கவிட்டு
நீயோகண்ணாம்மூச்சி ஆடுகிறாய்,

என்னைபைத்தியமாய் அலையவிட்டு
நீயோ பல்லாங்குழி தான் ஆடுகிறாய் !

ஓநாயும் செம்மறியும் ***



செழித்திருந்த பூமியிலே இப்போ செம்மறி மேயுதடா
வெறிச்சோடிப் போனபின்னே வேதாளம் விருந்தினராம்
ஓலங்கள் பாடிக்கொண்டு ஓநாய்கள் ஊர்வலமாம்
உண்மையை சொல்லப் போனால் உயிருக்கே பாதகமாம்

இனிக்கும் நினைவுகள் ***


கண்ணால் வலைவீசி
சொல்லால் மலர்தூவி
உறவில் விளையாடி
நினைவில் தேன் பூசி
நகைப்பில் எனைவீழ்த்தி
தூக்கம் களவாடி
தொலைந்தால் அவள் ஓடி

என் கனவு அவளே ****


கனவிலும் நினைக்காதே, நான்
உன்னைக் காதலிப்பேன் என்று
அன்று நீ சொன்னாய் ,, நானோ
கனவு காண்பது இல்லை என்றேன்
இன்றோ என் கனவே நீ தானடி

யாரோ அது யாரோ ?


வெறுச்சோடிப் போன வாழ்வில்
வென்நீரை வார்ப்பதாரோ
குதித்தோடிப் போன காதல்
துயில்கொள்ளும் கோலம் ஏனோ
மரிக்கின்ற போதினிலே
மகுடி ஊதி என்ன லாபம்..???

காதல் கைதி


முதல் முறை உன்னாலே
மனசுக்குள் துடிக்கிறேன்
செந்நீரில் மை எடுத்து
கவிதைகள் படைக்கிறேன்
கனவுடன் போராடிக்
கடைசியில் தோற்கிறேன்
நினைவுடன் உறவாடி
கண்ணீராய் வடிக்கிறேன்
காதல் எனும் நாடகத்தில்
கைதியாய் நடிக்கிறேன்
முடிவினில் நான் மட்டும்
கண்கலங்கி நிற்கின்றேன்
சாபமிட்டது யார் என்று
சாமியை கேற்க்கின்றேன்
பன்னீரில் குளித்தாலும்
வென்நீராய் கொதிக்கிறேன்
மறுபடி நீ வந்து ,,,,,எனை
உயிர் இட்டு அணைப்பாயா
புதுஜென்மம் கொடுப்பாயா ..??

ஊஞ்சல் ஆடும் ஆசைகள் ***


உள்ளுக்குள்ளே பல கோடி ஆசை இருக்கு
நேரம் வரும்போது சொல்வேன் உனக்கு
உன்னில் எனக்கேதோ மாயம் இருக்கு
மஞ்சம் வந்து என்னை நீ தட்டி எழுப்பு
கொஞ்சும் போது சொல்வேன் மீதி உனக்கு
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் ஒன்று இருக்கு.....
கொஞ்சம் வந்து அதில் ஆடி என்னை அடக்கு
பக்கத்தில் வரவும் அனுமதி இல்லை
பார்த்திட்டுப் போக முடியவும் இல்லை
தூரத்தில் இருந்தும் தருகிறாய் தொல்லை
துன்பமோ எனக்கு முடிவற்ற எல்லை
இதயத்தில் ஏனடி வீசினாய் முள்ளை..????

ஏன் இந்த நிலை ??? ***


தப்புச் செய்பவன்
தைரியமாய் நடக்கிறான்
தடுக்கி விழுந்தவன்
தயங்கித் துடிக்கிறான்
தர்மத்தை மதிப்பவன்
கண்ணீரில் மிதக்கிறான்
அதர்மம் கொண்டவன்
அன்ணாந்து சிரிக்கின்றான்
வம்பு செய்பவன்
வாட்டி வதைக்கின்றான்
நட்ப்பெனச் சொல்லி
நாடகம் ஆடுறான்
அன்பைச் சுமப்பவன்
பைத்தியம் ஆகிறான்
ஆசைப் படுபவன்
வாழத் துடிக்கிறான்..

கருணை இல்லா உள்ளங்கள் ***


கல்லுக்குப் பால் ஊற்றி, நீயோ
கடவுள் எனச் சொல்லுகின்றாய்
ஏழைக்கு நீர் ஊற்றி, நீயோ
கருணை காட்ட மறுக்கின்றாய்
இல்லாத ஒன்றை, நீயோ
இறைவன் எனச் சொல்கின்றாய்
இருக்கின்ற மனிதனை, நீயோ
இல்லாதவன் என்கின்றாய்
பணக்காரச் சாமியை, நீயோ
பாசத்துடன் பார்க்கின்றாய்
பாடுபடும் கூலிகளை, நீயோ
குறி வைத்துத் தாக்குகிறாய்....