Monday, 19 December 2016

நித்திரை களவாடும் வித்தகி

நிலவில் ஒளியெடுத்து
நினைவில் ஒட்டி வைத்து
நிஜமாய் வாழ்கிறாய்

எந்தன் நிழலும் நீயாகி
நித்திரையும் களவாடி
முத்திரைகள் பதிக்கிறாய்

உன் சித்திரமும் நானாகி
சொத்துரிமை தானாக்கி
வித்தகியாய் வாழ்கிறாய்

எப்பிறப்பிலும் எனதாகி
முப்பொழுதும் தேனாகி
எப்பொழுதும் சுவைக்கிறாய்

சொப்பனத்திலும் காணாத
சொந்தமாய் வந்தென்னை
சொர்க்கத்தில் தள்ளிவிட்டாய்

கண்ணுக்குள் பொத்திவைத்தால்
கனவாகிப் போகுமென்று,.. என்
நெஞ்சுக்குள் பூட்டி வைத்தேன்

உள்ளுக்குள் இருந்துகொண்டு
என் உயிரோடு கலந்து நின்று
உறவாடும் நுண்ணுயிரே

மண்ணுலகம் தான் மறந்து
விண்ணுலகம் நான் அடைந்து
வெண்ணிலவில் வாழ்கிறேன்

பெண் வடிவில் தான் வந்த
பொன் மலரே நீ எந்தன்
கண்ணிமையை மூடவிடு !

நாயகன் நெருப்பில் நாயகி மலர்ந்தாள்

காரண அமைப்பில் காரிய நிகழ்வில்
தோரண இனைப்பில் தூவிய மலரில்
வாரண முனைப்பில் பூரண சுகத்தில்
காமுக செழிப்பில் நாயகி நகைப்பில்
மேவிய நெருப்பில் நாயகன் உமிழ்ந்தான் !

உனக்கும் எனக்கும் இதுதான் கணக்கு

நீ யார் எனக்கு நான் யார் உனக்கு
ஆனால் நமகுள் ஏதோ இருக்கு
ஏன் தான் இந்தத் தீராக் கணக்கு
யார்தான் வந்து சொல்வார் எமக்கு

நான் என்பதும் நான் இல்லை
நீ என்பதும் நீ இல்லை, ஆனால்
நானாய் நீயும் நீயாய் நானும்
நாமாயிணைந்து ஒன்றாயிருக்கு

நீதான் எனக்கு நான் தான் உனக்கு
இதுதான் என்று எழுத்து இருக்கு
எது தான் என்று நாமும் உணர
அது தான் இந்த காலக் கணக்கு !

Monday, 21 November 2016

பிஞ்சு மொழி சிந்தும் குஞ்சு ***

தேகம் தீண்டும் தென்றல் போலே
தேடி வந்த சொந்தம் நீ

தாகம் தீரும் அன்பு தந்து எனை
தாலாட்டும் தாயும் நீ

வானம் பூமி வாழ்த்தி நிற்கும்
வானவில் குட்டி நீ

காலை மாலை கவிசமைக்கும், 
என் கவிதை பூங்கா மொட்டு நீ 

கண்ணில் ஒத்தி நெஞ்சில் பொத்தி
உயிர் கலந்த உயிரும் நீ

எந்த பந்தமென்றறியா வந்து
சேர்ந்த சொந்தம் நீ

பிஞ்சு பஞ்சு மொழி சிந்தி
நெஞ்சினிக்கும் குஞ்சு நீ

வஞ்சம் இல்ல நெஞ்சணையில்
எனை கைதி செய்தாய்  ஏனடி.?

சாத்திரம் இல்லா பாத்திரம்

ஆத்திரம் கொண்டு பாத்திரம் 
ஏற்றால் வார்த்தையில் கூட 
வேற்றுமை உண்டு..

ஆசைகள் என்றும் ஓசைகளாகி 
பூஜைகள் செய்தால் பாசையில்
கூட தோசங்கள் உண்டு

அதன் பாசைகளே புரியாமல் 
வேதனைகள் முளைப்பதுண்டு

அதன் தாக்கத்தை அறியாது
ஏக்கத்தில் திளைப்பதுண்டு

இதில் சாத்திரம் ஏதுமில்லை
அதைமாத்திரம் நெஞ்சில் அள்ளு

பின் பாத்திரம் என்னவென்று
திடமாத்திரம் பற்றிக்கொள்ளு.

தீபம் ஏற்றும் தீண்டாமை*****


கட்டித் தொழுதும் கடவுளை 
பின் கண்களில் எதற்கிந்த 
நீர்த்துளி  

புதுப்பட்டுத் துணிகளை 
சாத்தியும் பட்டினி தீர்ந்தாதா 
வாழ்வினில் 

குட்டிக் கரணங்கள் போட்டும் 
ஏன் குற்றங்கள் குறைவில்லை 
நாட்டினில்

திட்டித்திட்டிதான் வாழ்கின்றாய்
பின் தீண்டாமை தீபத்தை ஏனோ
ஏற்றுறாய்

கட்டித்தழுவித் தான் வாழ்ந்துபார்
பின் உனை துட்டு வணங்கித்தான்
வாழ்த்துவார்

விளப்பரம் தேடும் பிரபலம்****


நியாயம் என்பார் நீதியென்பார்
 நால் திசையும் மோசமென்பார் 
நல்லது கெட்டது நான் சொல்ல
 நீ கொஞ்சம் கேளென்பார்

நடத்தையிலே விளப்பரத்தை 
நல்லபடி விதைத்திடுவார் 
நாட்டுக்கு நலமென்று 
நாகூசா நயத்தோடு நடித்திருவார்

காவோலை குருத்தோலை
 கதையெல்லாம் பேசிடுவார் 
கண்மூடிக் கவித்துவமாய்
 கருத்துக்கள் உரைத்திடுவார்

வரலாறு தெரியாமல் வசைபாடி 
வலை வீசிக் கவி வடிப்பார்,.
நாம் வழியின்றி தடுமாறி தவித்திட
வகுத்தோரை வழிகாட்டியென்றிடுவார்

அண்டம் காக்கையும் குள்ளநரியும் ****




கோபப்பட்டுக் கோபப்பட்டு இரத்தம் கொதிக்குதே,
 அதை சுத்தரிக்க முன்னம்
 நெஞ்சில் யுத்தம் வெடிக்குதே..

சத்தம்போட்டு சத்தம்போட்டு சித்தம் கலையுதே,
இதை கொக்கரிக்கும் நெஞ்சில் 
ஏன்பின் பித்தம் தெளியுதே...

பத்தவைத்துப் பத்தவைத்து பழிசுமத்துதே, 
நீ புத்தனுக்கு உறவு 
என்று பச்சைகுத்துதே

திட்டம் தீட்டி சட்டம் போட்டு கொடிபறக்குதே,
அதை எட்டி நின்று பார்த்த
 கண்ணில் தீப்பிடிக்குதே

மொட்டத்தலையில் பட்டம் சூட்டி காய்நகற்றுதே
அங்கு வட்டம் போட்டு 
குள்ளநரிகள் கூட்டம் குடைவிரிக்குதே

கச்சைகூட நமக்கின்று பிச்சையானதே 
அதையும் சில கொச்சைப்படுத்தி 
முச்சைகட்டி காற்றில் ஏவுதே

நச்சுப்பாம்பு கூடி நின்று நடனமாடுதே 
இதை நன்மை என்று வழிமொழிந்து 
அண்டம் காக்(க)கா வடைசுடுகுதே

மிச்சம் சொச்சம் சொல்லமுன்னே 
தெருநாய் குரைக்குதே,
போதும் விடு வேண்டாம் இனி வாயுளையுமே !

Saturday, 5 November 2016

ஊத்தைப்பொடியனும் உலகழகியும் *****



ஊத்தை பொடியன்டா நீ
ஊத்தை பொடியன்டா நீ
என்று சாட்டுப் போக்கா
சேட்டை பண்ணுறாளே

நாரத்தங்காய் கன்னம் மின்ன
ஊமத்தங்காய் நெஞ்சை அள்ள
ஏலக்காய் வாசம்கொண்டு முந்திரி 
மூக்காலே மந்திரிச்சு போறாளே

வெண்டைக்காய் விரலழகி
விழி வித்தைக் கண்ணழகி 
முல்லைப்பூ பல்லழகி, என்
முன்னாடி நீ உலகழகி

ஆலம்பழ உதட்டாலே 
அச்சடிக்க பார்ப்பவளே, 
அச்சடிக்க முன்னாலே 
பொச்சடிக்க வைப்பவளே

தந்தைக்கு உபதேசம் செய்த 
தகப்பன் சுவாமி போல், எனை
நங்கைக்கு நயமுரைக்கும் 
நாயகனாக்கியவளே

உச்சாரம் ஏற்றிவிட்டு அச்சாரம் 
கேட்பவளே, பெரும் செய்கூலி 
எனக்கெதற்கு,. சிறு சேதாரம் 
தான் உனக்கிருக்கு

உள்ளத்தினுள் ஏதோ ஒன்று
உருக்குலைந்து கிடக்குதடி
உள்ளுக்குள்ளே நீபுகுந்து பரிகாரம் 
செய்யேனடி பரியாரி நீயாகி..!!!

கண்கலங்கும் கலண்டர்





தேவதைக்கும் உனக்கும் ஆகாது

என்பதை நான் அறிவேன், ஆனால்
மெய்கண்டான் நாள்காட்டிக்கும்
உனக்கும் அப்படி என்னதாண்டி
தகறாறு ?

உன் பேச்சை எடுத்தாலே என்னை
ஏறிட்டு பார்ப்பதுமில்லாது திட்டி
சோகத்தில் மூழ்குதேடி !

ஓ.. தன்வசம் இருக்கும் அந்த திருமால்
மனைவி மகாலட்சுமியை விட நீயோ
மங்களகரமாய் மாணிக்கக்கல்லாட்டம்
ஜொலிக்கிறியே அதனாலோடி ..?

இப்ப சும்மா சொல்லுங்கோ

எப்ப என்ன சொன்னாலும் ராசா சாமி
உங்க காலை காட்டுங்கோ உங்க
காலை காட்டுங்கோ என்று அடிக்கடி
சொல்றாங்களே அப்படி ஏன் தான்
சொல்கிறாங்களோ தெரியலையே
இதோ கால் காட்டிட்டன் சொல்ல
வந்ததை இப்ப சொல்லுங்கோ பாப்பம்..!!!

சதி வேரூண்டி சாதியானது


நாய்களின் கூடாரம்,.அங்கே
நியாயங்கள் வியாபாரம்
நாணயச் சூதாட்டம்,.அதில்
நயவர்கள் வாலாட்டம்

சாதியின் வேரோட்டம்,.இங்கே
தரம்கெட்ட நரிக்கூட்டம்
கோவிலில் தேரோட்டம்,.அங்கும்
தேவாங்கு நடமாட்டம்

அர்ச்சனை அபிசேகம்,. அங்கே
ஆண்டவனை காணோம்
ஆலய வழிபாடு,. இங்கேயோ
ஆந்தைகள் பலநூறு

மனிதர்கள் எனும் பேரில்,.சில
மந்தைகள் வித்தையாலம்
சுவாசிக்க சுதந்திரம் இல்லை
இருந்தும் தீண்டாமை தின்னுதே நம்மை

காட்டிலே நீ கிடந்து சொன்ன
உன் வார்த்தைகள் என்னாச்சு
நாட்டுக்குள் வந்ததுமே உந்தன்
நாணயம் மண்ணாச்சு

உயிர் காக்க உனை அணைத்து
உணவிட்ட வேளையிலே
உறவென்று நீ சொன்ன
கதையெல்லாம் பொய்யாச்சு

ஒரு சட்டி பானையிலே பொங்கி
ஊரெல்லாம் சேர்ந்துண்டு,.இனி
வேற்றுமை இல்லாத ஒற்றுமை
நாமென்று சொன்னது நகைச்சுவயாச்சு

ஒட்டிப்பிழைத்த ஓநாய்கள் கூட்டம்
இப்போ முட்டி மோதி எட்டி நின்று
தட்டி விடுகுதே, அதை கட்டித்தழுவி
ஒரு கூட்டம் கைதட்டிக்கொள்ளுதே

தீண்டாமை உனக்கு உயர்வென்று
அன்று நீயெனை தீண்டாதிருந்திருந்தால்,
இன்று படிதாண்டாது நானிருந்து
உன்கூட தேவாரம் பாடமாட்டேன்

நம்மை விட நாய்கள் இனம்
மேன்மைதானடா அவை நக்கி
தின்றும் உன்னை போல் நன்றி
கெட்ட ஜீவன் இல்லடா.

வெட்கத்தில் பூத்த வியர்வை


யாதும் யாதும் யாதாயினும்
நீயும் நானும் ஒன்றாயினோம்

வானும் மண்ணும் மன்றாடினும்
நானும் நீயும் கொண்டாடினோம்

மேலும் கீழும் திண்டாடினும்
பூவின் தேனை உண்டாடினோம்

நாணம் வெட்கம் கண்ணாயினும்
வியர்வை பூக்க கண்மூடினோம்

காதல் காமம் இரண்டாயினும்
கூடிக் குலவி பண்பாடினோம்

விழிகள் மொழியில் துண்டாடுதே
விடியும் வரைக்குள் என்னாகுவோம் ?

நீ பிரம்மன் வடித்த சிற்பமடி ****



பாவட்டம் தளிரைப்போலே 
பாவை உந்தன் வெட்கமடி 
சேர்த்து பார்த்து ரசிக்கமுன் 
கூட்டிப்போறாய் சொர்க்கமடி

புடலங்காய் கால்கள் ஊன்றி 
புதையல் ஒன்று பூட்டிவைத்து 
புதுமை ஒன்று செதுக்கவென்று 
புறப்பட்டானோ பிரம்மனன்று ?


கண் வடித்து கனி வடித்து 
கன்னத்திலே குழி வடித்து 
அதை வடித்து இதை வடித்து 
அங்கமெல்லாம் வடிவமைத்து

இமை வரைந்து இதழ் புனைந்து 
இவற்றினுளே சுவை புதைத்து 
இடை வடிக்கும் இடையினிலா 
இறந்து விட்டான் பிரம்மனடி

சாயம் போன தலையணை ****


உனக்கும் உன்னை கட்டியவனுக்கும்
அவ்வளவு பெரிய வேறுபாடு ஒன்றும் கிடையாது,
ஏன் என்று கேட்கிறாயா ?

அன்று நீ பூத்துக் குலுங்கும்போது
அள்ளி முத்தமிட்டு அணைத்துக்கொண்டவன்
சலித்துப் போனதும் வெட்டி விட்டான்

இன்று உன் தனிமையை போக்க
இரவும் பகலும் இணைந்து கொடுத்த என்னை
சாயம் போனதும் தள்ளிவைத்துவிட்டாய்

இங்கனம் என்றும் உன் வியர்வை வாசம் மறவாத
கிளிந்து போனதும் நீ தூக்கிவீசிய
உன் மோகத்தில் நனைந்த தலையணை!

எப்பிறப்பிலும் என்னவளாய் ****


முற்பிறப்பில் என் துணையாய்
இப்பிறப்பின் என் உயிராய், 
ஏன் எப்பிறப்பிலும் என்ன(அ)வளாய் 
நீ பிறக்க வேண்டுமடி

உன் அருகே நான் இருந்து 
உனக்காக வாழ்ந்திடுவேன் 
என் எதிரே நீ இருந்து, 
உந்தன் காட்சி தரவேண்டுமடி


பைந்தமிழே என் பகல் நிலவே
 பாலைவனத்து பனித்துளியே 
சேலை உடுத்த திரவியமே,.
என் மாலை வேளை மல்லிகையே

நாவினிக்கும் நாயகியே 
நள்ளிரவின் சொப்பனமே
தென்றலே திருவடியே 
திகட்டாதசெம்மொழியே
உன் வாசம் எந்தன் சுவாசமடி !

நிலை புரியா நிலமை***



பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தில்
உருக்குலைந்தாடும் சருகுகள்போல் 
கரை தொட அலைகின்றோமே

அதன் நிலை தன்னை அறியாது 
கரைவந்து சேரமுன் குலையோடு அள்ளிட
 விலையென்ன என்கிறோமே

தெரியா மேடையில் புரியாத பாசையில்
சதிராடும் கூட்டம் நாமே, இங்கு சரித்திரம் கூட 
தரித்திரம் என்று சான்றிதழ் உள்ளதாமே!

தொண்டு செய்யும் வண்டு நான் ******

மேனி வெந்து சிவந்திட்ட பெண்டிளாள்
உன் நெஞ்சு குளிந்ததா என்னினால்
பஞ்சு மிளிர்கின்றா கூந்தாளாள்..என்
மஞ்சம் மலர்ந்ததே உன்னினால்

கருவண்டு தவழ்ந்திடும் கண்ணிளாள்
உனை கண்டு மகிழ்கிறேன் காளை நான்
தொண்டு புரிகின்ற சொண்டிளாள்
உனை உண்டு மயங்கிய வண்டு நான்

முட்டி நெகிழ்ந்திடும் செம்புடையாள்
எனை கட்டி இழுத்துடும் தும்பிடையாள்
வெட்டி விழுத்திடும் தண்டுடையாள் 
சுளை பொத்தி ஒழித்திட்ட தேனடையாள்

எனை குத்தி சாய்த்திடும் கூர்விழியாள்
என் புத்தி மரிக்கிதே தேன்மொழியால்
முத்தி நிலைதனை நானடைய....எனை
பற்றிக் கொள்ளேண்டி பாலகனாய்.....!!!

Tuesday, 11 October 2016

நிழலா நிஜமா நீ சொல்லு ???



எனது உயிரில் இருந்து உதிரும் வார்த்தைகள் உன்
உள்ளத்திற்கு புரியாவிட்டாலும் பரவாயில்லை

ஆனால் உனது கண்களுக்கே அது தெரியாவிட்டால் எனது
உடலில் உயிர் இருந்தும் வெறும் ஜடமே

நீ நிஜம் என்றால் எனது நிழல் என்ன எனது
நினைவுகளும் உனை என்றும் தொடருமே

நீ வெறும் நினைவுகள் மட்டும்தான் என்றால் எனது
நிழல் கூட உன்னை நிஜமாகத் துரத்தும்...

    இறந்தாலும் இறக்காத உன் நினைவுகள்


    மொத்த உறுப்புக்களும் சிதைந்து சிதறி
    குருதியில் மிதக்கும் மனித சடலங்களை
    பார்த்த பின்னும்

    காவுகொடுத்த குறுக்குச்சந்தில் வேகத்தை

    குறைக்காது பயணிப்பது போல்..... அதே..
    அதிவேகத்தோடு

    உனை சுவாசித்குக்கொண்டே இருப்பேன்
    விபத்துக்கள் வரும் என்று தெரிந்தும் !

    அப்படி நான் மரணித்துப் போனாலும் இதயம்
    மட்டும் துடித்துக்கொண்டு தான் இருக்கும்
    உனது வரவை எதிர்பார்த்து

    அப்போதாவது வந்து ஒருதுளி கண்ணீர்
    விட்டுச்செல் அதன் தவிப்படங்கி ஆன்மா
    சாந்தியடையட்டும் !

    நிகழ்காலம் ஒன்றே நிஜம்

    தடுக்கி விழுந்த தருணத்தில்
    தாங்கிப் பிடிக்கும் பூங்கொடியே
    இறக்கை எதுவும் உனக்கில்லை
    இருந்தும் ஏந்திப் பறக்கிறியே



    கடந்த காலம் நினைவில் இல்லை
    எனக்கு எதிர்காலம் தேவையில்லை
    நிகழ்காலம் ஒன்றே நிஜம் என்பேன்
    மெல்லினமே என்னருகே நீயிருந்தால்.


    அழகான வர்ணங்கள் அமையாத
    வேளையிலும், உந்தன் அன்பான
    ஆர்ப்பரிப்பில் நிலைகொள்ளும்
    சமயத்தில் இதமான வண்ணங்களே !

    அலுக்கோசும் அரைலூசும்

    ஓம் ஓம் நான் விசுக்கோத்து
    போடி நீயொரு அலுக்கோசு. ..
    எதற்கடி கள்ளி கண்களில்
    வைத்து சுத்துறாய் குளுக்கோசு...
    போடா நீயும் தான் அரை லூசு

    ஐயோ.... ஐயோ........ஓடி .....நீ...
    வாடி எந்தன் முழு லூசு..!

    கவிவடிக்கும் விழிகள்


    அவள் விழியில் ஒரு ஒளி தெரியுதே
    அந்த ஒளியில் பல கவி நெளியுதே


    செவ்விதழில் பனித்துளிகள் பூக்குதே
    என் கண்கள் அதை நாடிக் கேட்க்குதே



    இதை கண்டு கொண்டு உண்டு மகிழ
    பறக்கிறதே மனம் வண்டாக..


    அதை கண்டு எனை வென்று கொன்று
    தின்றாள் பூச்செண்டாக..!

    Saturday, 17 September 2016

    நயமில்லா நட்பெதற்கு ?


    நாம் என்னதான் சொல்கின்றோம் என்று
    புரியாமலே மண்டையும் கொண்டையும்
    ஆட்டும் நட்பை விட


    நாம் இதைத்தான் சொல்கின்றோம் என்று...
    தெரிந்தும் மூஞ்சிய நீட்டி தொண்டைகிழிய
    கத்தும் நட்பே சிறந்தது !

    பிச்சை கேட்கும் சிலைகள்


    தலைக்கனத்தில் கொக்கரிக்கும்
    பிழைப்பெதற்கு உனக்கு

    இலக்கணத்தில் பிழை இருக்கு
    விளக்கெடுத்துக் கொழுத்து

    விலை உயர்ந்த படிப்பெதற்கு
    நடமாடும் சிலைக்கு

    கச்சை கூட பிச்சை கேட்கும்
    உனக்கெதற்கு கொடுக்கு


    ஓவியம் வரையும் லேகியம் ***




    நம் தூரத்தை எண்ணித் துவழாதே
    நாணத்தை மண்ணில் புதைக்காதே..

    தாகத்தால் என்னை நீ தூண்டாதே
    மோகத்தால் விண்ணை தாண்டாதே

    தினமொரு திருக்குறள் திகட்டாமல் தின்றிட
    தேவியுன் திருமொழி தேனெனச் சிந்துதே

    காவியம் பாடிடும் கன்னி உன் கருவிழி
    ஓவியம் வரையுதே பாவி என் நெஞ்சிலே

    லேகியம் தாங்கிய மாதுளை இதழ்களால்
    சூனியம் செய்கின்ற சூழ்ச்சமன் என்னடி !


    உன் முகவரி என்ன முழுமதி ? ****

    குக்குறுப்பாச்சான் குடும்பத்திற்கும்
    உனக்கும் என்னடி சம்மந்தம்..
    இப்படி அக்குவேறு ஆணிவேறாய்

    என் நெஞ்சை கொத்திக் கிழிக்கிறியே
    நான் அக்கறையோடு கேட்கின்றேன்
    ஏன் இப்படி மோசம்....

    எங்கே உந்தன் சந்நிதி அங்கே
    சென்று கேட்கின்றேன் எந்தன்
    அத்தையிடம் எனக்கொரு நீதி.

    கிடைத்தால் மறுகணமே கட்டிடுவேன்
    உன் கழுத்தில் தாலி மறுத்தால்
    மறு கணமே உடுத்திடுவேன் காவி


    Wednesday, 14 September 2016

    என்னை நானே கேட்கின்றேன்

    நான் நல்லவனா கெட்டவனா
    எனக்குத் தெரியல்ல..ஆனால்
    அந்த நாலுபேரின் சொல்லைக்
    கேட்டால் நம்ப முடியல்ல...!


    அதுவும் இதுவும் தப்பு என்று
    என் ஆத்தா சொல்லிச்சே..ஆனால்
    அதையும் இதையும் சேர்த்துப்
    பார்த்தால் அர்த்தம் பிழைக்குதே


    நல்லவனும் கெட்டவனும் நமக்குள்
    தானடா, அதில் ஞானி பாதி வேதி மீதி
    இதில் சாமி ஏதடா.. இதை நானும் நீயும்
    புரிந்து கொண்டால் மோட்ஷம் உண்டடா


    என் கதையை கேட்டால் உனக்கும்
    ஒன்றும் நஷ்டம் இல்லடா, நீ கஷ்டம்
    என்று கோபம் கொண்டால், ...மிச்சம்
    சொல்ல எனக்கும் இஷ்டம் இல்லடா !

    இதற்கு மேல் நான் என்ன சொல்வேன்

    தேடாமல் கிடைத்த முத்து நீ
    தேவதையாய் வந்த சொத்து நீ
    தேன்கவிகள் கொட்டும் மத்து நீ
    தென்றலாய் தழுவும் சிந்தும் நீ


    இனிமைதரும் இன்பம் நீ
    இனிதான சந்தம் நீ... என்
    இதயத்தின் சொந்தம் நீ..
    ஈன்றெடுக்காத் தாயும் நீ


    பூக்களின் சுவாசம் நீ
    புன்னகை வாசம் நீ..
    புல்லாங்குழலும் நீ
    புல்மீது பனித்துளி நீ


    காற்றிலணையா தீபம் நீ
    கண்முன் நிற்கும் கடவுள் நீ
    கனிகளின் சுவையும் நீ
    காம த்(தீப்) பந்தமும் நீ


    மாளிகை மஞ்சம் நீ
    மைனாக் குஞ்சும் நீ
    மஞ்சள் குங்குமம் நீ
    மரகதக் கிண்ணம் நீ


    இத்தனையும் நீ என்பேன்
    இவைக்குள் தான் நான் என்பேன்
    இதையெல்லாம் தாங்கி நிற்கும் ..
    என் இனியவளே நீ என்பேன் !

    கவிதை சொல்லும் கண்ணீர் !

    கூறிய வார்த்தைகள் கூரிய
    வாளென நெஞ்சிலே பாய்ந்ததே
    பாவி என் கண்ணிகளில் மேவிய
    நீர்த்துளி ஆறென ஓடுதே

    ஏளனமான அந்நிலை கண்டதும்
    என் மனம் வெம்முதே
    ஓவியம் வரையமுன் தூரிகை
    உடைந்து கைதனை கிழித்ததே

    வேதனை போக்கிட பாவனை
    செய்தது கொடும் காவியமானதே
    தனிமையை தகர்த்திட தருணத்தில்
    எய்தது விரகதாபத்தில் விழுந்ததே

    சாமியின் கணக்கென்று சட்டென்று
    சொன்னது பொட்டென்று நீத்ததே
    நட்பிலும் கற்பிலும் மின்னிய நாணயம்
    தேய்ந்து இன்று நிர்கதியானதே !

    நியாயம் சொல்ல நாதியில்லை



    உரச உரச மணப்பேன் நான்
    சந்தனம் இல்லை
    கடிக்கக் கடிக்கச் சிவப்பேன்
    நான் வெற்றிலை இல்லை
    தின்னத் தின்னச் சுவைப்பேன்
    நான் முக்கனி இல்லை
    எனை ருசித்த பின் எறிந்தால்
    நான் யாரிடம் சொல்ல,,,???

    Friday, 19 August 2016

    உனக்கும் எனக்கும் உள்ள கணக்கு




    ஒன்றும் ஒன்றும் ஒன்றாகி மூன்றானது
    மூன்றும் ஒன்றும் நாலாகிதேரோடுது
    ...
    நாலும் ஒன்றும் ஒன்றாகிஐந்தானது
    ஐந்தும் ஒன்றும் ஆறாகிஎன்னானது
    ஆறும் ஒன்றும் ஏழாகி நாளானத
    ஏழும் ஒன்றும் எட்டாகிகாடாத்துது

    Tuesday, 2 August 2016

    கறுப்பழகி நீயெங்கே கண்கலங்கி நானிங்கே ***



    செத்தமீன் துடிக்குதென்று,.....நீ
    செதில் நோண்டி அறுக்கயிலே
    உந்தன் பொத்தான் அவிழுதென்று
    பித்தம் பிடித்தவள் போல்
    பெரும் சத்தம் போட்டு
    ஒற்றை விரலால் ஒடிப்பிடித்து எனை
    ஓரக்கண்ணால் பார்த்தகதை,
    செத்துப்போனாலும் நெஞ்சை
    விட்டு இத்துப்போகாதடி

    சாரைப்பாம்பு ஒன்று சருகுக்குள்ளே
    போகுதென்று காராம் பசுவாட்டம்
    பாய்ந்து நீ ஓடயிலே, கொக்கைசத்தகம்
    கொழுவி இழுத்து உன் பட்டுப்பாவாடை
    சொட்டுக்கிழிந்ததென்று எனை கட்டி
    அழுதகுரல் எட்டுத்திசையிலினும்
    இன்றும் என் காதில் கேட்டுதடி..

    தொலைக்காட்சி பார்ப்பதுபோல் ஒரு
    காட்சி ஓடுதென்று ம(று)ணக்காட்சி
    எப்பவென்று பெரியாச்சி சிரிக்கயிலே
    பெத்தாச்சி கைபிடித்து உன்னுணர்வை
    அத்தாட்சிப்படுத்தினியே . இப்போ
    என் பெத்தாசியும் இல்லை,......நீ
    கொடுத்த அத்தாச்சியும் இல்லை
    அந்த பெத்தாச்சியும் செத்துப்போச்சு
    இந்த மனச்சாட்சியும் இத்துப்போச்சு !


    Wednesday, 20 July 2016

    நியாயம் இல்லா வாதங்கள் ***

    குடிக்க கொஞ்சம் தண்ணீர் கேட்டால்
    துடக்கு என்று தள்ளி நிற்கிறாய்

    பசிக்கு கெஞ்சி சோறு கேட்டால்
    சொடக்கு போட்டு தள்ளி வைக்கிறாய்

    குழப்பம் கொள்ள விளக்கம் கேட்டால்
    பழக்க வழக்கம் என்று தர்க்கம் செய்கிறாய்

    சடலம் ஆன பின்னுமா மண்ணில்
    நீ வீண் கலகம் மூட்டிப் போகணும்

    படலை தாண்டி சுடலை போனால்நீயோ
    சாம்பலாய் கடல் நீரில் தானே கரைகின்றாய்.!

    விளக்கம் சொல்லாப் பழக்கங்கள்


    தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டால்
    பாவம் என்று வாதம் செய்கிறாய்

    கோபம் கொண்டு நியாயம் கேட்டால்
    காலம் இடும் கோலம் என்றாய்
    ...

    தேகம் சுடும் வேகம் கண்டு, இதன்
    சாபம் என்ன சொல்லு என்றேன்

    ஞானம் வந்து ரோசம் கொண்டேன்
    தாளம் போடும் மோகம் என்றாய்

    ஜாலம் செய்யும் வார்த்தை எய்து
    மாயம் செய்யும் மர்மம் ஏனோ ...?

    நித்திரை கலைத்த முகத்திரை ***

    சொப்பனம் வந்ததில் சுகமொன்று கண்டேன்
    அப்புறம் நடந்ததை எவரிடம் சொல்வேன்

    முப்பெரும் தேவிகள் முழுவதும் இவளோ
    முப்பெரும்தேவியே இவளில்த்தான் உருவோ

    ஒப்பனை வெள்ளத்தில் உறைந்தது
    என் உயிரோ செப்பிட முன்னே சிவந்தது ஏன் இதழோ

    கத்தரிவெயிலில் கருகிய மலர்போல்
    கட்டிலில் கிடந்தும் நான் கானலில் குளித்தேன்

    சட்டென்று வந்தவள் முத்தங்கள் பொழிந்திட
    யுத்தங்களின்றியே இரத்தங்கள் கசிந்தன

    முத்திரை பதித்தவள் முகத்திரை கிழிக்கமுன்
    பித்தங்கள் தெளிந்திட நித்திரை கலைந்தது !


    Sunday, 10 July 2016

    சுவாசத்தில் நுழைந்த குட்டித்தென்றல் ***



    தவம் ஏதும் இருக்கவில்லை
    தரணி எங்கும் தேடவில்லை
    தானாகத் தேடிவந்து, என்னை
    தழுவுதே ஒரு குட்டித்தென்றல்

    யாரோ யாரோ நீ யாரோ ...
    என் யாவிலும் கலந்தது நீ தானோ
    யன்னல்வழி வந்த வசந்தமோ
    யமுனை உந்தன் சொந்தமோ

    மானாக துள்ளும் மங்கையோ
    மயிலாக ஆடும் நங்கையோ
    மலர்வாசம் வீசும் பூவையோ
    மனசை அள்ளும் பாவையோ

    செடியில் பூக்காத செம்பூவே
    செதுக்கி எடுக்கா பெண்சிலையே
    செந்தமிழ் சிந்தும் தேனமுதே
    செந்தாழம் பூவின் வடிவழகே

    என் மஞ்சம் உந்தன் மடிதானடி
    என் தஞ்சம் உந்தன் நிழல்தானடி
    என் நெஞ்சம் உந்தன் வசம் தானடி
    என் சுவாசக் காற்றே நீ தானடி..!


    பஸ்பமானாலும் உன் பாதத்தில் புஸ்பமாவேன் ***

    எல்லோருக்கும் எழுதிய நான்
    இன்று எனக்காக எழுதுகிறேன்
    அன்பே உனக்கென ஒரு கவிதை

    கனத்த உள்ளத்தில் களைபறிக்க
    வந்தவன் நான், களைபறிக்கமுன்
    எனைக் களவாடிச் சென்றவள்...நீ

    மண்வாசப் பேச்சினாலே தன் வசம்
    கொண்டவளே பெண் நாணம் என்ன
    என்று விண்ணாணம் புரிந்தவளே

    தன்மானம் தடுக்கவில்லை எனக்கு
    தலைகுனிவாய் நினைக்கவில்லை உன்
    சொல்வாளால் கிழித்தபோதும்

    தத்தை உந்தன் மெத்தையிலே நான்
    தனியிடமும் கேட்கவில்லை அத்தை
    மகன் நீயென்று அரவணை போதுமடி

    அக்கினியை ஏவி எனை நீ பஸ்பமாய்
    எரித்தாலும் காற்றோடு கலந்து வந்து
    உன் காலடியில் நான் விழுவேனடி !


    அன்புக்கு அடிபணியாதே

    எப்போது எல்லாம் நீ கோமாளியாகவும் ஏமாளியாகவும் இருக்கின்றாயோ
    அப்போதெல்லாம் நீ அன்பானவனாகவும்
    பாசமுள்ளவனாகவும் கருதப்படுவாய்

    ...
    எப்போதெல்லாம் நீ அன்புக்கும் பாசத்துக்கும்
    மதிப்பளித்து அடிபணிகின்றாயோ

    அப்போதெல்லாம் நீ ஏமாளியாகவும் பெரும்
    கோமாளியாகவும் ஆக்கப்படுவாய்.

    Saturday, 9 July 2016

    மனிதா நீ யார்???



    ஒரு சிங்கம் ஒரு சிங்கம்தான்
    ஒரு குரங்கு ஒரு குரங்குதான்
    ஒரு மான் ஒரு மான் தான்
    ஒரு பாம்பு ஒரு பாம்பு தான்
    ஒரு காகம் ஒரு காகம்தான்
    ...
    ஒரு நரி ஒரு நரிதான்,.. ஏன்
    ஒரு பேய்கூட ஒரு பேய்தான்
    ஆனால் இந்த ஒரு மனிதன்
    மட்டும் ஒரு மனிதனே இல்லயே
    அது எப்படி. .... ஏன்......எதற்கு....???

    என் சிந்தையில் விந்தையடி நீ



    பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு
    உன்னை எனக்கு பிடிச்சிருக்கு
    என்று சொல்லிச் சொல்லியே


    பிடிச்சிருக்கு என்ற வார்த்தையே...
    எனக்கு பிடிக்காமல் போயிடுமோ
    என்று பயமாக இருக்குதடா



    என் சிந்தை முழுதும் விந்தைகள்
    புரியும் மந்திரம் நீயடா என்று..... நீ
    சிணுங்கும் போதெல்லாம்,


    பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு உன்னை
    எனக்கு ரொம்பத்தான் பிடிச்சுருக்கடி
    என் இராசவள்ளிக்கொடியே !

    கொடுத்து வைத்த தாச்சிச்சட்டி

    கொக்கான்வெட்டும் உந்தன்
    விழிகள் என்னை கொத்தித்
    திங்குதடி


    கொக்கரிக்கும் உன் இதழ்கள்...
    என் மனதை ஏன் மக்கரிக்க
    வைக்குதடி



    கொட்டிக்கிழங்கே உன் வீட்டில்
    தாச்சிச்சட்டி கூட தலைக்கனம்
    கொள்ளுதடி,


    முட்டை குனிந்து நீ பொரிக்கையிலே
    உன் சட்டை விலகியதை தான்மட்டும்
    பார்த்ததினாலோடி ?

    Thursday, 16 June 2016

    மெய் சொல்லும் கண்ணாடி

      மெய்யான வாழ்க்கையை
       பொய்யாக வாழ்கின்றோம்
       பொய்யான வாழ்க்கையை
       மெய்யாகப் பார்க்கின்றோம்

      கண்ணுக்கு முன்னாடி தானே
       பலகதை பேசி நடிக்கின்றோம்
       கண்ணாடி முன்னாடி தினம்
       தலை கூனி நிற்கின்றோம்..

      மனசாட்சி இல்லாமல் நாம்
       பலசாட்சி சொல்கின்றோம்
       பழிவந்து சேர்ந்து விட்டால்
       குருபெயர்ச்சி என்கின்றோம்

      இதற்கு வருந்தாத உருவங்கள்
       எதற்கும் திருந்தாத உள்ளங்கள்
       பிறந்தென்ன லாபம், இவைகள்
       இருந்தாலே பெரும் சாபம்...!!!

    வாசம் வீசும் பாசமலர்கள்

      யாரோ யாரோ யார் தானோ
       இவர்கள் எனக்கு யார்தானோ
       மகிடம் சூட்டப் பாடுபடும் இரு
       மலர்கள் வாசம் எனக்கேனோ

      ஏனோ ஏனோ ஏன் தானோ, எனை
       இமைபோல் காக்கும் இவை யாரோ
       என் எண்ண அலையில் நீந்துவதை
       எடுத்துக் கொடுக்கும் இவர் யாரோ

      நானே நானே நீ என்பேன், நமக்குள்
       ஏதோ உறவெண்பேன். நீயும் நானும்
       வேறென்றும் இதுவா அதுவா என்றலும் 
       நம் நினைப்பில் ஏதோ ஒன்றென்பேன்

      இது சரியா சரியா நீ சொல்லு நம் சரிவை
       பார்த்திட பலர் உண்டு, இதுவே ஒருநாள்
       அதுவாகும் அதுவும் ஒருநாள் இதுவாகும்
       அப்போ சரித்திரம் படைப்பது நிஜமாகும் !

    என்னில் உனை பார்க்கின்றேன்

      நான் அன்று கண்ணாடி முன்னாடி
      தான் நின்றேன், என் கண் முன்னாடி
      தானேடி நீ நின்றாய் !

      அடியே இன்று உன் பின்னாடி தானேடி ...
      நான் நிற்கிறேன், என் முன்னாடி சொல்வீசி
      எனை நொறுக்கின்றாய் ?

    ஈரம் காயாத வாசம் நம் பாசம்


      உலாவந்த நிலாவில் கறைபடியும்
       என நினைக்கின்றாளே பாவம், என்
       நினைவெல்லாம் வலிக்குமென்று
       மறந்து போவதில் என்ன நியாயம்

      தொட்டெடுத்த வாசம் இன்னும்
       ஆறாத போதும் அவள் முத்தமிட்ட
       ஈரம் என்னில் காயாத போதும்
       சத்தமின்றி இருப்பதென்ன மாயம்

      எத்தனையோ வார்த்தை சொல்லி
       வேகவைத்தபோதும் அத்தனையும்
       தாண்டி அத்தைமகள் என்றுசொல்லி
       அவளை அள்ளிக்கொண்டேன் நானும்

      இத்தனையும் நான் பார்த்து விட்டேன்
       இனியும் என்ன வேண்டும் இதற்கு மேல்
       நான் என்ன சொல்ல,... இதுவும் கடந்து
       போகும், ஏன் எதுவும் கடந்து போகும்....!

    கொஞ்சிப் பேசிடும் பிஞ்சு மொழியிவள்

      எண வாண போண இல்லயண
      இருக்கெண உண்மையாவாண
      உப்புடிசொல்லாதயண என்னண
      ஐயோ ஐயோ அப்புடி பாக்கதயண 

      எதுக்கண இப்போ உந்த சிரிப்பண...
      ஏனண என்னவிடண போதுமண
      வேண்டாமண நான் சொல்லுறத
      கேளண என் செல்லமெல்லோண

      என்று நீ என்னோடு கதைக்கும்
      போதெல்லாம் எந்தன் நெஞ்சிலே
      ஏவுகணையெல்லோண ஓடிவந்து
      பாயுதெல்லோண நான் பாவமண 

      உப்புடிகதைச்சு என்ன கொல்லாதயண
      என்று சொல்ல நான் ஒண்டும் லூசு
      இல்லயண நீ என்னை கொல்லண
      எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கண!

    புடவை கட்டிய கண்ணிவெடி நீயடி



    கொட்டுப்பூச்சி கட்டிலிலே
     மெட்டிபோட்டுத் தூங்குதே
     கட்டுப்பாட்டை நானிழந்து 
     வட்டமிட்டு ஆடுறேன்

    பட்டாம்பூச்சி கண்ணெதிரில்
     சட்டை போட்டு சுற்றுதே 
     பார்த்த கண்கள் காலையிலே
     கண்ணிவெடியானதே

    சிட்டுக்குருவி பொட்டு வைத்து
     புடவை கட்டி நடக்குதே
     கட்டெறும்பு நெஞ்சுக்குள்ளே 
     பட்டாசு போடுதே 

    குட்டி நிலா கால் முளைத்து
     ஸ்கூட்டியிலே போகுதே
     எனை மறந்து மதிமயங்கி என்
     வேஷ்டி காற்றில் பறக்குதே.

    Thursday, 26 May 2016

    கலகலக்கும் நிலையறியாப் பரபரப்பு

    தலைகுனியும் நிலை எதற்கு
    தமிழினமே நீ விளக்கு

    மதி மயங்கி மதுக்கடையில்
    கிடப்பதுவா உன் பிழைப்பு
    ...

    நடந்து செல்லும் வழியெல்லாம்
    நரிகளின் வலை விரிப்பு

    நாட்டுக்குள்ளே காட்டுக்கோழி
    கூடி நின்று கலகலப்பு

    மாட்டுக்காரன் தோட்டத்திலே
    பாட்டுப்பாட ஏன் மறுப்பு

    சாட்டு சொல்லும் கூட்டத்துக்கு
    வீட்டுக்குள்ளே வரவேற்பு

    கூட்டுக்குள்ளே வாழும் உனக்கு
    எதற்கு இந்தப் பரபரப்பு..?




    லேசாய் சுடும் வாடாமல்லி

    லூசா என்பதும் லேசா
    இருக்கின்றதே நீ எனை
    திட்டும் போதும்


    போடா என்பதும் சூடா...
    இருக்கின்றதே நீ எனை
    விரட்டும் போதும்



    வாடா என்பதும் காடா
    எரிகின்றதே என் மேனி
    யாவும்


    வாடாமல்லிகையே சூடா
    மணியே எனை பாடாய்ப்
    படுத்துறியேடி !