Friday, 23 March 2012

யாரடி நீ ???? ***



நான் பார்த்த பூக்களிலே
உன் சிரிப்பு மேன்மையடி
உன் உதடு மட்டும்தான்
உலகிலே மென்மையடி
சத்தியமாய் சொல்கின்றேன்
தாமரை உன் இதழ்களடி
தயங்காமல் சொல்கின்றேன்
தேவதை உன் தோழியடி
எங்கே நீ பிறந்தாய்
எனக்குள்ளே ஏன் வந்தாய்
இன்றோ எனை மறந்து
உனக்காக வாழ்கின்றேன்
வானமும் பொழியுது
பூமியும் செழிக்குது
உன் நினைவு மட்டுமே
என் மனதை வாட்டுது !!!!!

2 comments: