Monday, 23 April 2012

மெத்தையில் தத்தை ***




வித்தைக்காரன் அன்பெனும் விந்தைகள் புரிகிறான்
தத்தையோ மெல்ல மெத்தையை விரிக்கிறாள்
முத்தத்தை அள்ளித்தான் மொத்தமா வீசுகிறாள்
மூச்சுத்திணறி விழிகள் பிதுங்கி ஐயோ..............
சித்தம் கலங்கி நான் சுவரில் முட்டிமோதினேன்
பத்தரை மணிக்கு நான் ஒத்தையில் கத்தினேன்
நித்திரை கலைந்து என் கள்ளியை வைகிறேன்
பத்திரம் இல்லாமல் நான் சித்திரம் வரைகிறேன்
மந்திரம் போட்டவளே உன் தந்திரம் தான் என்ன
குந்தகமாகுமுன் வந்தெனை உன் மடியினில் சாய்த்திடு,,

Monday, 16 April 2012

கன்னியா கனியா ??? ***



சேலத்து மாங்கனியை தேகத்தில்
அழுத்தி வைத்து
வானத்து மல்லிகையை வாய்க்குள்
அடக்கி வைத்து
மல்கோவா .மாம்பழம் .போல்
ஜொலிக்கிறாயடி
கறுத்தகொழும்பாட்டம் நீ
கனிந்து இருக்கையிலே
வறுத்த கடுகாட்டம் நானோ
வெடித்துப் பறக்கிறேனடி
றம்புட்டான் பழமே உனை
தம்பட்டம் அடித்து
ரொம்பத்தான் ரசிக்கிறேனடி,
உனை பற்கள் படாது ருசிக்க
தினம் தினம் துடிக்கிறேனடி ..........!!!









பாசத்தில் அடைந்த மோட்ஷம் ***



மோசம் போகாமல் நான்
மோட்ஷம் அடைந்தேனே
பாசம் தனை அள்ளி
பருகக் கொடுத்தாளே
பாவி மவபுள்ள ஏனோ
எனை பாடா படுத்கிறாள்
வேசம் போடாமல் அவள்
வெளுத்துக் கட்டுகிறாள்
ஊடல் எனச் சொல்லி என்
உயிரைக் குடிக்கின்றாள்
கோபம் கொண்டால் நான்
குமுறி அழுகின்றாள்
தாயே உனை நான்
தயவாய் கேட்கின்றேன்
ஓயா அலைபோல் எனை
உருட்டி எடுக்காமல்
நீ கூட இருந்து என்
குறையையை தீர்ப்பாயோ
வாடா மலரே என்னை
வாரி அணைப்பாயோ .... ???




மன்மதனும் தேவதையும் ***



தேவலோக மன்மதனும்
பூலோக தேவதையும்
நட்பென்னும் மேடையிலே
நாடகங்கள் அரங்கேற்றி
தப்பாக இருந்தாலும்
தப்பாமல் நடிப்பதுயேன்
உருவம் தந்த மன்னவனும்
உருவம் இல்லா ஓவியமும்
கர்வம் தனை மறந்துவிட்டு
கருணை கொண்ட நெஞ்சோடு
கவிதை பல பாடுவதேன்
காற்றில் வந்த காவியமாய்
நேற்றுவரை நினைத்திருந்தேன்
தூத்திவிட்டு சென்றாலும் நெஞ்சில்
ஊற்றெடுக்க காத்திருந்தேன்
தூக்கத்திலும் பார்த்திருந்தேன்
கனவா நீ வரவில்லை எனக்கு
சுகம் ஒன்று தரவில்லை, ஆனால்
மறக்க என்னை முடியாமல் என்
மனமடியில் வந்து விழுந்தாயே
கலக்கம் கொண்ட என் மனசோ
இன்று இறக்கை இன்றி பறக்குதடி..




Sunday, 8 April 2012

காற்றில் வந்த காவியம் !!! ***


பொண்ணா ஆணாண்ணு பொருத்தம் பாக்கிறா
கன்னா பின்னான்னு கருத்துக் கேட்கிறா
சின்னா பின்னமா சிக்கித் தவிக்கிறா
கண்ணா கண்ணாண்ணு கத்தி அலையுறா
என்னா என்னான்னா சும்மா சும்மாண்ணு
பூசி மொழுகிறா ஏன் மூடி மறைக்கிறா .......???




அரும்பான நட்பு ***



எத்தனையோ மனிதர்கள்
அத்தனையும் முத்துக்கள்
சொத்தையான அறியாமை
பித்தனாக மாற்றுதடா
பாய்ந்து வரும் முற்கோபம்
பகையுணர்வை தூண்டுதடா
பாசத்தை மறந்துவிட்டு
பழிவாங்க நினைக்குதடா
புரிந்துணர்வு இல்லாமல்
பிரிந்து தானே செல்லுதடா
பரிந்து நானும் பேசுவதால்
விருந்து ஏதும் வேண்டாமே
மருந்து போலே உன் நடபு
இருந்தாலே போதும(டி)டா ... !!!




Monday, 2 April 2012

நானா அவன்...???


நான் யார் என்று என்னைக் கேட்டேன்
நீதான் அவன் என்று உள்ளம் சொன்னது
அவனா நான் என்று அஞ்சி நின்றேன்
என்னை எண்ணி நொந்து கொண்டேன்......


எதிர்பார்ப்பு ***


எப்போதும் எதிர்பார்ப்பு எதிலும் எதிர்பார்ப்பு
எங்கே சென்றாலும் அங்கே எதிர்பார்ப்பு
ஏமாந்து நின்றாலும் ஏக்கத்தில் எதிர்பார்ப்பு
எட்டாத பொருள் மீது எல்லோர்க்கும் எதிர்பார்ப்பு
எப்போது இது ஓயும் அப்போது நம் நிலை மாறும்...........