Wednesday, 18 July 2012

உரிமையின் பெருமை ***




நீ என்னை வாட்டி வதைத்தாலும்
கடும் வலிகள் கொடுத்தாலும்
நான் வாடிப்போக மாட்டேனடி
நீ என்னை தத்தளிக்க விட்டாலும்
பல தடுமாற்றங்கள் தந்தாலும்
நான் என்றும் தயங்கமாட்டேனடி, என்
அன்பே எனக்கு நீ உன் வலிதாங்கும்
உரிமையாவது கொடுத்திருப்பதை
எண்ணி நான் பெருமை கொள்வேனடி
உன்னை என் இதயத்தில் வைத்து
தினம் தினம் அன்பாலே பூஜை
செய்வேனடி என் பூவை நீதானடி... !!!

தலைகுனியும் கண்ணாடி ***



நீ கண்ணாடி முன்னாடி நின்றாலே உன்
முன்னாடி கண்ணாடி தலை கூனும், உன்
முன்னாடி நான் வந்து நின்றாலே என்
முன்னாடி தள்ளாடி உன் தலை கூனும்
உன் பின்னாடி செல்லுதே என் உயிர் நாடி
உடனே நில்லாமல் ஓடோடி நீ வாடி ...!!!

ஓவியமும் காவியமும் ***



நான் அன்பெனும் தூரிகையால்
ஒரு ஓவியம் வரைந்தேன்
நீ உன் விழியெனும் மொழியாலே
காதல் காவியம் என்கிறாய்
நான் கனவென்னும் கற்பனையில்
பல கவிதைகள் வடித்தேன்
நீ உன் கருகொண்ட உணர்வாலே
காதலாய் வளர்கிறாய்
கருத்துச் சொல்ல வந்தவளே, என்
இதயத்தில் கருவாகி நிற்கிறாள்
மறுப்பு சொல்ல நினைக்கமுன்னே
என் மனதினை திருடிவிட்டாள்
கறுப்பாக இருந்தாலும் ரொம்ப
பொறுப்பாகப் பேசுகின்றாள்
நான் வெறுப்பேதும் காட்டாமல்
விழுந்துவிட்டேன் அவளிடமே
என் அன்பே எனதுயிரே இதைக்
கொஞ்சம் நீ கேளு ...................
சொந்தமென நீயிருந்தால் எனக்கு
சொத்துச் சுகம் தேவையில்லை
பந்தமெனெ நீ வந்தால் உன்
மடியே எனக்குலகம்..........!!!

காதலும் அன்பும் ***



காதலிப்பதில் அதிக இன்பமா, இல்லை காதலிக்கப் படுவதில் அதிக இன்பமா..???
அன்பு செலுத்துவதில் அதிக சுகமா, இல்லை அன்பு செலுத்தப்படுவதில் அதிக சுகமா..???

குண்டுமணி ***




கண்டுகொண்டேன் நான் என்னவள் யார் என்று கண்டுகொண்டேன்
குண்டுமணி அழகினிலே கண்டுகொண்டேன்..
நீல மயில் வடிவினிலே கண்டுகொண்டேன் உருவம் இல்லா ஓவியத்தின் உருவம் இன்று கண்டுகொண்டேன்,,,, உயிரே நான் சொல்வது உண்மையடி...........................!

இதயம் ***



உள்ளத்தை தந்து விட்டு உயிர்தனை எடுத்து
சென்றாய் எதற்க்காக ?
ஓ உன்னிடம் இருக்கும் என் இதயத்திற்க்கு என்
உயிர் தான் தேவை என்றோ.. ???

இதயத்தில் கருவாகிய என்னவள் ***




அன்னாசிப்பழம் என்றால் எனக்கு கொள்ளைப்பிரியம்
பப்பாளிப்பழத்தை பார்த்தாலே எனக்கு வாயூறும்
ஆனால் இதையெல்லாம் உண்டால் கருக்கலையும்
என்று என் பாட்டி அன்று சொன்னதால் இன்று
அன்னாசிப்பழத்தை நான் அடியோடு வெறுக்கிறேன்
பப்பாளிப்பழத்தை எனக்கு பார்த்தாலே பிடிக்கவில்லை
காரணம் இவற்றை உண்பதால் என் இதயத்தில்
கருவாகி குழந்தையாய் தவழும் என்னவள்
கரைந்துவிடுவாளோ என்று பயம் கொள்வதால்

இதயத்தில் இருக்கும் என்னவள் ***



மரணத்தை நான் நேசிக்கிறேன் மறுபடியும்
அவளுக்கே குழந்தையாக பிறப்பேன் என்றால்,
எந்த வலியையும் நான் விரும்பியேற்பேன்
அதை அவளே கொடுப்பாள் என்றால்
தோல்வியையும் நான் மகிழ்ந்தேர்ப்பேன்
என் தோல்வியில் அவள் வெற்றிபெறுவதால்
ஆனால் உடலை மட்டும் தீயிலிடமறுப்பேன்
என்னவள் என் இதயத்தில் குடியிருப்பதால்.