Thursday, 16 June 2016

மெய் சொல்லும் கண்ணாடி

    மெய்யான வாழ்க்கையை
     பொய்யாக வாழ்கின்றோம்
     பொய்யான வாழ்க்கையை
     மெய்யாகப் பார்க்கின்றோம்

    கண்ணுக்கு முன்னாடி தானே
     பலகதை பேசி நடிக்கின்றோம்
     கண்ணாடி முன்னாடி தினம்
     தலை கூனி நிற்கின்றோம்..

    மனசாட்சி இல்லாமல் நாம்
     பலசாட்சி சொல்கின்றோம்
     பழிவந்து சேர்ந்து விட்டால்
     குருபெயர்ச்சி என்கின்றோம்

    இதற்கு வருந்தாத உருவங்கள்
     எதற்கும் திருந்தாத உள்ளங்கள்
     பிறந்தென்ன லாபம், இவைகள்
     இருந்தாலே பெரும் சாபம்...!!!

வாசம் வீசும் பாசமலர்கள்

    யாரோ யாரோ யார் தானோ
     இவர்கள் எனக்கு யார்தானோ
     மகிடம் சூட்டப் பாடுபடும் இரு
     மலர்கள் வாசம் எனக்கேனோ

    ஏனோ ஏனோ ஏன் தானோ, எனை
     இமைபோல் காக்கும் இவை யாரோ
     என் எண்ண அலையில் நீந்துவதை
     எடுத்துக் கொடுக்கும் இவர் யாரோ

    நானே நானே நீ என்பேன், நமக்குள்
     ஏதோ உறவெண்பேன். நீயும் நானும்
     வேறென்றும் இதுவா அதுவா என்றலும் 
     நம் நினைப்பில் ஏதோ ஒன்றென்பேன்

    இது சரியா சரியா நீ சொல்லு நம் சரிவை
     பார்த்திட பலர் உண்டு, இதுவே ஒருநாள்
     அதுவாகும் அதுவும் ஒருநாள் இதுவாகும்
     அப்போ சரித்திரம் படைப்பது நிஜமாகும் !

என்னில் உனை பார்க்கின்றேன்

    நான் அன்று கண்ணாடி முன்னாடி
    தான் நின்றேன், என் கண் முன்னாடி
    தானேடி நீ நின்றாய் !

    அடியே இன்று உன் பின்னாடி தானேடி ...
    நான் நிற்கிறேன், என் முன்னாடி சொல்வீசி
    எனை நொறுக்கின்றாய் ?

ஈரம் காயாத வாசம் நம் பாசம்


    உலாவந்த நிலாவில் கறைபடியும்
     என நினைக்கின்றாளே பாவம், என்
     நினைவெல்லாம் வலிக்குமென்று
     மறந்து போவதில் என்ன நியாயம்

    தொட்டெடுத்த வாசம் இன்னும்
     ஆறாத போதும் அவள் முத்தமிட்ட
     ஈரம் என்னில் காயாத போதும்
     சத்தமின்றி இருப்பதென்ன மாயம்

    எத்தனையோ வார்த்தை சொல்லி
     வேகவைத்தபோதும் அத்தனையும்
     தாண்டி அத்தைமகள் என்றுசொல்லி
     அவளை அள்ளிக்கொண்டேன் நானும்

    இத்தனையும் நான் பார்த்து விட்டேன்
     இனியும் என்ன வேண்டும் இதற்கு மேல்
     நான் என்ன சொல்ல,... இதுவும் கடந்து
     போகும், ஏன் எதுவும் கடந்து போகும்....!

கொஞ்சிப் பேசிடும் பிஞ்சு மொழியிவள்

    எண வாண போண இல்லயண
    இருக்கெண உண்மையாவாண
    உப்புடிசொல்லாதயண என்னண
    ஐயோ ஐயோ அப்புடி பாக்கதயண 

    எதுக்கண இப்போ உந்த சிரிப்பண...
    ஏனண என்னவிடண போதுமண
    வேண்டாமண நான் சொல்லுறத
    கேளண என் செல்லமெல்லோண

    என்று நீ என்னோடு கதைக்கும்
    போதெல்லாம் எந்தன் நெஞ்சிலே
    ஏவுகணையெல்லோண ஓடிவந்து
    பாயுதெல்லோண நான் பாவமண 

    உப்புடிகதைச்சு என்ன கொல்லாதயண
    என்று சொல்ல நான் ஒண்டும் லூசு
    இல்லயண நீ என்னை கொல்லண
    எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கண!

புடவை கட்டிய கண்ணிவெடி நீயடி



கொட்டுப்பூச்சி கட்டிலிலே
 மெட்டிபோட்டுத் தூங்குதே
 கட்டுப்பாட்டை நானிழந்து 
 வட்டமிட்டு ஆடுறேன்

பட்டாம்பூச்சி கண்ணெதிரில்
 சட்டை போட்டு சுற்றுதே 
 பார்த்த கண்கள் காலையிலே
 கண்ணிவெடியானதே

சிட்டுக்குருவி பொட்டு வைத்து
 புடவை கட்டி நடக்குதே
 கட்டெறும்பு நெஞ்சுக்குள்ளே 
 பட்டாசு போடுதே 

குட்டி நிலா கால் முளைத்து
 ஸ்கூட்டியிலே போகுதே
 எனை மறந்து மதிமயங்கி என்
 வேஷ்டி காற்றில் பறக்குதே.