Monday, 12 November 2012

உயிரும் நீயே என் உணர்வும் நீயே !



என் எல்லாமனவளே நீயே ....
பருவமழைபோல் வந்தாய் என்
பாதி உயிரை தின்றாய்
உருவம் இல்லா ஓவியமாய் என்
உயிரினில் நுழைந்தாய், பின்

உருவமெனும் ஒளிகொடுத்து என்
உணர்வில் ஏறி அமர்ந்தாய்
நீயே எந்தன் உறவு என்று என்
கனவில் வந்து வதைத்தாய்
இறுதிவரை நீதான் என்று என்
உதிரத்திலே கலந்தாய்
இதயம் முழுதும் அன்பிருந்தும்
இடைக்கிடை வெடித்தாய் இன்று
உனக்கு தலை வலித்தால் நான்
தையிலம் போடுகிறேன்
உனக்கு காச்சல் வந்தால் என்
இதயம் நொருங்குதடி
என் உயிரும் ஊஞ்சலாடுதடி
உன்னை சுமப்பதினால் அதுவும்
போக மறுக்குதடி என் வாழ்வும்
இன்று கசக்குதடி.............

தன்மானத்தை விற்று தாளம் போடாதே !

தோல்வியுற்றவன் எல்லாம் கோழையும் இல்லை
வெற்றிபெற்றவன் எல்லாம் வீரனும் இல்லை
சந்தர்ப்பம் கொஞ்சம் சதி செய்து விட்டால்
எலிப் பொறியிலும் புலிகூட மாட்டிக் கொள்ளும்
பந்தையக் குதிரை முந்தையில் வந்தால்
தெய்வகம் கூட என்றுமே நம் வசம் என்பார்
விந்தைகள் புரிந்து வீழ்வோரைக் கண்டால்
கந்தைக்கும் வழியில்லா கயவர்கள் என்பார்
தாளம்போட்டு தடவிக்கொடுத்தால் உயிரைக்
காக்கும் தோழன் என்பார், வேஷம் கண்டு நீ
மறுப்பு சொன்னால் நாயைவிட மோசம் என்பார்
பையில் கொஞ்சம் பணம் இருந்தால் பதவி
என்னும் ஆடை வாங்கி பசுவைப்போலே அணிந்து
கொண்டு பாசம் காட்டும் மனிதனாக தினம்தோறும்
பல மோசங்கள் செய்திடுவார்......
கூறுகெட்ட மானிடனின் கேடுகெட்ட செயல்களினால்
பாடுபடும் மனதினுள் மாறுபட்ட எண்ணங்களில்
தூசு ஒட்டிக்கொண்டதடா...
ஏரு கொண்டு உழுது நீயும் வீறுகொண்ட உள்ளங்களில்
நல்ல விதையை விதைக்கா விடில்..
உணவு கூட விஷமாய் போகும் சர்வமும் நாசமாகும்
விழிக்க நீயோ மறுத்திடாதே விழியை மூடித்தூங்கிடாதே.!!
!

பூர்வ ஜென்ம பந்தம் !



புல்லாங்குழலே என் பூர்வஜென்ம
பந்தமே, உன் புன்னகை கண்டு
எத்தனை நாட்களடி, உன்
பூச்சொரியும் வார்த்தை கேட்டு
எத்தனை காலமடி...?

நீ இல்லாத பொழுது எனக்கு
இருளாகிப்போனதடி என்
இதயத்துடிப்பில் இடைவெளி
கூடுதடி...........
நான் இருந்தும் மெல்லத்தினம்
இறந்துதான் போறேனடி
என் உயிரின் ஒளியே நீ என்னதான்
செய்வாயோ எனக்குத் தெரியாது
உன்னுயிர் இங்கே உருக்குலைந்து
போகமுன்னே என் உயிரோடு கலந்து
உறவாட வருவாயோ.................?????

அம்பான அன்பு !


அம்பால் குத்தினால் வலிக்கும்
அன்பால் குத்தினால் இனிக்கும்
என் அன்பே நீ அன்பை அம்பில்
வைத்து குத்துகிறாயேடி.

உனக்கும் தெரியும் இது எனக்கும் தெரியும் !


எனக்கு தெரிந்த அன்பைத்தான்
காதல் கீதல் எண்ணுறாங்க
எனக்கு தெரிந்த காதலைத்தான்
காமம் கீமம் எண்ணுறாங்க
உனக்கும் தெரிஞ்சு போச்சிண்ணா
தயங்கித் தள்ளி நிற்காதே............!!!

பணம் தேடும் இயந்திரங்கள் !



நாம் இயந்திராமாய் வாழுகின்றோமே
தினம் மின்சாரமாய் பாய்கின்றோமே
காலையில் எழுந்தவுடன் கடிகாரத்தை
முறைக்கிறோமே, கெட்டும் பட்டணம்
போவென்று சொன்னவனும் இங்கே

கெட்டுப்போன கதைகள் தான் பல உண்டு
கொட்டும் பனியில் ஒட்டடை தட்டுறோமே
கொளுத்தும் வெயிலில் கோபுரம் ஏறுறோமே
பாலைவனத்திலே ஒட்டகம் மேய்க்கின்றோமே
நாள்தோறும் உழைக்கிறோமே, வேளை
வரும் என நி்னைக்கிறோமே இது என்னடா
வாழ்க்கை என்று ஏங்கித்தவிக்கிறோமே
திரிபோஷமாவையும் ஒடியல்பிட்டையும்
அன்று அன்போடு அம்மா ஆக்கிப்போட்டாலும்
ஆவேசத்துடன் அடி மனதில் திட்டி தீர்த்தோமே
ஆசையோடு அப்பா ஆறுதல் சொன்னாலும்
அவரைப் பார்த்தும் ஆத்திரம் கொண்டோமே
கட்டுங்கடங்கா காளையாய் திரிந்தோமே
ஏன் என்று கேட்பவனை எட்டி உதைத்தோமே
வெட்டிவிடு உறவையென வீராப்பாய் சொன்னோமே
இப்போ தீக்கிரையான தீனியைத்தான் தின்கிறோமே
விட்டுப்போன உறவை தொட்டிட துடிக்கிறோமே, அடே என்பவனை அண்ணா என்றோமே, தறுதலை என்று நினைப்பவளையும் நாங்கள் தங்கையென அழைக்கிறோமே,.... இது என்ன கொடுமையடா
இதை எங்கே சொல்வேனடா...??? எதையெல்லாம் இழந்தாலும் ஏங்கித்தவித்தாலும் இங்கேயும் ஒரு நல்லது நடப்பதை நான் கண்டு மகிழ்கின்றேன்
தீண்டத்தகாதவன் என தள்ளி வைத்து உணர்வுக்கு
கொள்ளி வைக்காமல் பள்ளி பிள்ளைகள் போல்
கிள்ளி விளையாடுகிறோம் கூடி உறவாடிகிறோம்... !

அம்மா உலகின் சாமி !



அம்மா எழுத முடியாக் கவிதை
அம்மா அதிசயத்தின் புதுமை
அம்மா தமிழ்மொழிக்கு பெருமை
அம்மா அம்மா என்றாலே கவிதை
அதை கவிதையாக நினைத்து நீ

எழுதினாலே எல்லாம் சும்மா
காரணம் வார்த்தையில் அடங்கா
அகராதி வாழ்வுக்கு கிடைத்த சாவி
இவள்தான் உலகுக்கே பெரும் சாமி.. !

Tuesday, 6 November 2012

நனைந்தது அவள் வலி எனக்கு .!





மழையில் நனைந்தாய என் மைனாக்குஞ்சே
காச்சல் பிடித்ததோ என் இலவம் பஞ்சே
மருந்து குடித்தாயா என் மாதுளம் பிஞ்சே
தலை வலி குறைந்ததா என் அணில்குஞ்சே
உன்னை மடியிம் வைத்து தாலாட்டுப்பாடி
தைலம் தடவி விடத் துடிக்குதே என் நெஞ்சே...!