Monday, 8 December 2014

மாற்றமும் மனநிலையும்


மாற்றம் ஒன்றே மாறாதது
மனதில் உள்ளது ஆறாதது
தேற்றம் பார்த்து நாட்டம்
கொண்டால் உண்மை அன்பு
பொய்யாகுது, பேச்சை மட்டும் ...
நோட்டம் போடு ஆட்டம் தீரும்
சாயல் தூவும், கேட்டுக் கேட்டு
தோற்றுப் போன கேள்விக்குறியின்
அவலக்கதையின் துயரம் கேளு
போற்றிப் பாடும் இதயம் உன்னை
கூட்டித் தள்ளும் நிலையைப் பாரு
நிலமை கண்டு நெஞ்சில் தொட்டு
எல்லாம் நன்மைக்கே என்று கூறு !
 

சட்டை போட்ட சட்டத்தரணி


கட்டம் போட்ட சட்டை போட்ட எட்டூரு
நாட்டாமை பட்டம் சூட்டும் விழாவில்
சட்டம் ஒகன்றை பிறப்பித்தாரம்...
குட்டை பாவாடை அணிந்து முட்டுக்காலில்
நின்று தொட்டு கும்பிட வேண்டும், இல்லை...
திட்டம் போட்ட என்னை தட்டி கிழேவிழுத்தி
கட்டித் தழுவி என் மொட்டைத் தலையிலே
முட்டை உடைத்திட வேண்டும் .
இதை மட்டம் தட்டி எவர் பேசினாலும் அவர்கள்
கொட்டம் அடக்கப்பட வேண்டும்,
ஆஹா ஆஹா என்ன திட்டம் என்ன திட்டம் ...!!!
 

ஆஞ்சானில் ஊஞ்சல் ஆட்டம்


ஆஞ்சான் கயிற்றில் ஊஞ்சல் கட்டி
ஆடும் உனக்கு,.... தளத்தில் நின்று
தாவான் கயிற்றை பற்றிப் பிடிக்கும்
சிறுபிள்ளையின் தவிப்பு எப்படி புரியும்,
கொக்கான் வெட்டிலே குரங்குப் பாய்ச்சல்...
ஆடிவிட்டு பிட்டுக்குழலாட்டம் நானோ
கைவிரல்களைப் பற்றி ஒன்றொன்றாய்
சேர்க்கின்றேன், ..நீயோ அரக்கல் என்று
சொல்லி அதாப்பி விளையாடுகின்றாய்,
வழிதெரியா விழியோரம் கண்ணீரும்
கசிந்தோட கருணை என்ற பெயரினிலே
குங்கிலியத்தை உருக்கி என் கண்களிலே
ஊற்றுகின்றாய் கண்ணீரை நிறுத்தவென்று
ஆனால் நானோ இப்ப தாச்சியே இல்லாமல்
கிளித்தட்டு ஆடுகின்றேன் ..........................!!!
 

திங்களும் தென்றலும்

திங்கள் வரக் காத்திருந்தேன்
செவ்வாய் வந்தது .. நானோ
இன்று புதன் என்பதை மறந்தேன் !
வியாழன் வெள்ளி சனி ஞாயிறு
மீண்டும் திங்கள் வருமே, ஆனால்
எனை தீண்டும் தென்றல் வருமா ?

பாசம் அறியா பறந்த பறவை

தாலாட்டும் தென்றலே என்
தணியாத தாகமே, ...... உன்
வாசல் தோறும் என் அன்பை
தோறணமாய் தொங்க விடுவேன்
...

தோப்புக்களில் நாம் உறவாடி
மகிழாவிடினும் உனது ஒற்றை
வார்த்தையில் என் உலகையே
மறப்பவன் நானல்லவோ..

பாப்பா பாப்பா என்று நான் உனை
பாசத்தோடு அழைத்தாலும் என்
ஆத்தாவும் நீயல்லவோ ,.. உன்
சுவாசம் என் வாழ்வின் வாசம்

அன்னையாக உனை நினைத்தாலும்
என் இதய மடியில் தவழும் மழலை
நீயல்லவோ அதை நீ அறியாயோ

என்னவளே என் உயிரே உன் ஆயுள்
நீண்டிட என் ஆயுளையும் உனக்கே
அர்ப்பணிப்பேன் நீயே என் உலகமடி 

எதை சொல்ல எப்படி சொல்ல

நான் ஒன்று சொல்லவா ஏன் என்று சொல்லவா
நீ சொன்ன சொல்லிலே நிஜம் இல்லையல்லவா
காரணம் சொல்லவா கவிதையாய் சொல்லவா
கண்களில் பொங்கிடும் கண்ணீரைச் சொல்லவா

தேன் சிந்தும் திட்டுக்கள்

முடியல்லடா சாமி அட ஏன் இப்படி திட்டுறாங்க எதற்கு இப்படி திட்டுறாங்க
திட்டுறாங்க திட்டுறாங்க எல்லோரும் முகநூலில் நல்லாவே
திட்டுறாங்க
அக்கா என்றால் திட்டுறாங்க தங்கை என்றாலும்
திட்டுறாங்க...
குமரிகளும் திட்டுறாங்க, ஐயோ ஐயோ கிழவிங்களும்
திட்டுறாங்க
ஏன் திட்டுறாங்க எதுக்கு திட்டுறாங்க பெயரை சொல்ல சொல்லி திட்டுறாங்க
வாடி போடி நண்பி என்று சொல்லச் சொல்லி ஓடிவந்து கூடி திட்டுறாங்க
பேசினாலும் திட்டுறாங்க பேசாமல் இருந்தாலும் ஏன்தானோ திட்டுறாங்க
உண்மையா முடியல்லடா சாமி .. ஹா ஹா ஹா ஹா ..

அன்பு சிறையில் சிக்கிய இதயம்

உன் அன்பெனும் சிறையில் சிக்கிக்கொண்டேன்,
தவறுகள் செய்தால் தண்டித்துவிடு ,,,,, ஆனால்
மன்னித்து விடுதலை மட்டும் செய்துவிடாதே,
அப்புறம் நீ கொலைகாறி ஆகிவிடுவாய்...........!!!!!

சிந்திக்கவே சிரிக்க அல்ல

கசநோய்க்கு விசவாய்வு மருந்தாம்,
குப்புறப்படுத்து உள்நாக்கில் படாது
அண்ணாக்காய் குடிக்கணுமாம்;
ஐயோ இது என்ன புண்ணாக்கு கதை
என்று மல்லாக்கய் படுத்திருந்து
சன்னதம் கொண்டானாம்,..............!!!

புரியாத அன்பு


நம் வீட்டு முற்றத்திலே நின்று உறவுகளுடன்
செல்ல யுத்தம் போடுவதையே வெக்கமாக
கருதும் இனத்தில் பிறந்த ..........நீ..............
நட்ட நடு வீதியிலே நின்று கத்திச் சத்தம்
போடுகிறியே பெரும் கேவலமாக ......
அங்கத்தில் ஆடை விலகுவது மட்டுமல்ல
வார்த்தைகளில் ஆடை குறைவதும் அநாகரிகமே
இதை எத்தனை முறை சுட்டிக்காட்டியும் உன்
கூரிய புத்திக்கு எட்டவில்லையா ... இல்லை
சொல்பவனின் அன்பு என்றுமே உன் இதயதிற்கு
கிட்ட இல்லையா.......... ??

உனக்கு பிடிக்காதது எனக்கும் பிடிக்காது

எங்களுக்கு மிகவும் பிடித்தவர்களுக்கு
என்ன பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து
செய்வதை விட ,,,,
எங்களுக்கு ரொம்பவே பிடித்தவர்களுக்கு
என்ன பிடிக்காது என்று பார்த்துப் பார்த்து
அதை செய்யாமல் இருப்பது தான்
உண்மையான அன்பு !

இச்சையும் கொச்சையும்

மச்சவல்லவனுக்கு இச்சையின் சாயத்தால்
பச்சை குத்துவதால் அச்சம் பிறந்திடுமோ,
வித்தை தெரிந்தவன் கொச்சைப் படுவதால்
வீரம் சரிந்திடுமோ விவேகம் குறைந்திடுமோ ?

பள்ளிப் பாதயிலே முளைத்த கள்ளிச்செடி


சங்கு சுட்டு விற்ற காசில் நான்
சங்கத்தமிழ் கற்று வந்தேன்
பூம்பாளை பொறுக்கி விற்று
புத்தகத்துக்கு உறைபோட்டேன்
கங்குமட்டை காலில் அணிந்து ...
நொங்கு பொறுக்கச்செல்வேன்
கொக்காரை எடுத்துவந்து என்
அக்காளைச் சமைக்க வைப்பேன்
பன்னாடைக்கிடையினிலே பறநாகம்
படுத்திருந்து தன் பல்லாலே
பதம் பார்க்க, பரியாரி வீட்டினிலே
நான் பலமாதங்கள் படுத்தேனே
எனக்கு பரலோகப் பதவி என்று
பரியாரி சொல்லக் கேட்டு பரிதாபப்
பட்ட அப்பன் பெரும் குடிகாரன்
ஆனதாலே என் பள்ளிப் பாதயிலே
பல கள்ளிச் செடி முளைத்ததடா ...!!!
 

வாழ்கை போடும் கணக்கு


ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று ஒருத்தன்
சொன்னான் ஓடி வந்து
இரண்டில் ஒன்று கடந்து போனால் மிகுதி
உள்ளது மூன்று என்று
நடந்து போகும் இவனின் கதையால் துவண்டு...
போனேன் நானும் அன்று
நாலும் நாலும் எட்டாய்ப் போக நடுவில் உள்ளது
பத்து என்றான்
குத்துமதிப்பாய் சொல்லிவிட்டேன் பித்துப்பிடித்தவனே
வரட்டா என்றான்
கட்டிப்பிடித்து அவனை மடக்கி காலில் விழுந்து
வணங்கி எழுந்து
சுத்தமாக எனக்கு புரியல்ல என்றேன், உத்துப்பார்த்து
சிரித்து விட்டு
செத்துப் போன வெற்றுடலுக்கு சத்துணவு கொடுக்கச்
சொன்னான்.......!
 

அறியாமல் தவிக்கும் மனசு



அன்பென்றேன் அறிவென்றேன் ஆனந்தத்தின்
திடல் என்றேன்
நீயென்றேன் நானென்றேன் நினைவுகளில்
சுகமென்றேன்
கவியென்றேன் பொருளென்றேன் கண்ணீரின்...
கதையென்றேன்
அதுவென்றேன் இதுவென்றேன் அறியாமல்
நான் நின்றேன்
எதுவென்றே தெரியாமல் எதற்க்காக எனை கொன்றேன் !