Monday, 15 October 2012

அன்பால் கொல்லும் சண்டாளி.. !



ஐயோ கொல்லுறாளே கொல்லுறாளே
என்னை அன்பாலே கொல்லுறாளே
ஐயோ வாட்டுறாளே வாட்டுறாளே
என்னை வார்த்தையாலே வாட்டுறாளே
பூட்டுறாளே பூட்டுறாளே என்னை
இமைக்குள் வைத்து பூட்டுறாளே
காட்டுறாளே காட்டுறாளே என்னை
தன் இதயத்துக்குள் காட்டுறாளே
மயக்குறாளே மயக்குறாளே நீதான்
என் மன்மதன் என்று மயக்குறாளே
துடிக்கிறேனே துடிக்கிறேனே நான்
அவள் அன்போடு போட்டி போட்டு
தோர்த்து விட்டுத் துடிக்கிறேனே
ரசிக்கிறாளே ரசிக்கிறாளே சண்டாளி
என் தோல்விகண்டு ரசிக்கிறாளே
சிரிக்கிறாளே சிரிக்கிறாளே ஐயோ
சிறு பிள்ளைபோல் சிரிக்கிறாளே
என்னை கொன்றவளே கொள்ளை
கொண்டவளே என்னவளே நீதாண்டி
என்னுயிரே என் எல்லாமானவளே...!!!

Friday, 5 October 2012

என் எல்லாமானவளே... !


பிரக்கடிக்கும் பிள்ளைக்கு முதுகில் தட்டி
ஆறுதல் சொல்லும் தாயை போல் என்
தடுமாற்றங்களை எல்லாம் தட்டி விட்டு
என்னை தாங்கிப்பிடிக்கும் தந்தையாய்
சோகத்தை துரத்தும் தோழியாய் தாக்கத்தை
போக்கும் ஏணியாய் பாசத்தை பாலாக ஊட்டி
விவேகத்தை சீராகக் காட்டி என்னை வழி
நடத்தும் குருவாய் வந்தவளே என் வாழ்வே
உன் காலடியே என் உலகம் என்றும் எனை
காத்திடும் அன்னை என நான் காலமெல்லாம்
கவிபாட உந்தன் கருணை எனக்கு வேண்டுமடி...!!!