Monday, 31 August 2015

பஞ்சவர்ணக்கிளி

பஞ்சவர்ணக்கிளி ஒன்று நெஞ்சணையில்
நிலை கொண்டு தன் சுந்தரத் தமிழினிலே
பல விந்தைகள் புரிவதென்ன...

மந்திர வலையினிலே மாட்டிய மான் போலே
சிந்தனை காட்டிலே சிக்கியதன் மாயமென்ன

சந்தனத் தென்றலாய் சிந்திட அவள் மொழி
தந்திரக் குவளையாய் ஏந்தியதே என் செவி

காதிலே தேன் துளி கண்களில் மின்பொறி
ஏங்கிடும் உள்ளத்தில் என்றுமே அவள் ஒளி

பூரண நிலவு பூமிக்கு வந்ததுபோல் தாரகை
நகைப்பில் தாமரை பூப்பதென்ன.....

ஆடிய மயில்கள் அவளை கண்டதும் தோகையை
மடித்தொழித்து சோகத்தில் மிதந்திட.......

கூவிய குயில்கள் ஒப்பாரி வைக்க வீசிய தென்றல்
வெந்நீராய் கொதித்திட நான் மட்டும் இங்கே பன்னீரில்
குளிக்கின்றேன்.................!

No comments:

Post a Comment