மங்கைக்கு மாலை இட்டு
மாப்பிள்ளை என்கின்றாய்
சிங்கத்துக்கு சேலை கட்டி
சீதனம் கேட்கின்றாய்
தங்கத்தில் தாலி செய்து சாதனை
படைக்கின்றாய் தங்கையின்
கண்ணீரை தலை எழுத்தில்
புதைக்கின்றாய்
கருங்கல்லுக்கு காவி உடுத்து
கடவுளாய் வணங்கிறாய் காதிலே
பூவைத்து கடும்தவம் செய்கிறாய்
சாமியார் ஆகின்றாய்
இப்படி ஆத்திரத்துக்கு உதவாத
பாத்திரங்களை ஏற்று விட்டு பின்
வாழ்க்கையே வீண் என்று சொல்லி
மாத்திரை உண்கின்றாய்..!!!
மானம் கெட்ட மானிடனே உனக்கு
ஏன் ஆறறிவு.....???
மாப்பிள்ளை என்கின்றாய்
சிங்கத்துக்கு சேலை கட்டி
சீதனம் கேட்கின்றாய்
தங்கத்தில் தாலி செய்து சாதனை
படைக்கின்றாய் தங்கையின்
கண்ணீரை தலை எழுத்தில்
புதைக்கின்றாய்
கருங்கல்லுக்கு காவி உடுத்து
கடவுளாய் வணங்கிறாய் காதிலே
பூவைத்து கடும்தவம் செய்கிறாய்
சாமியார் ஆகின்றாய்
இப்படி ஆத்திரத்துக்கு உதவாத
பாத்திரங்களை ஏற்று விட்டு பின்
வாழ்க்கையே வீண் என்று சொல்லி
மாத்திரை உண்கின்றாய்..!!!
மானம் கெட்ட மானிடனே உனக்கு
ஏன் ஆறறிவு.....???

No comments:
Post a Comment