Sunday, 30 August 2015

கொடூரக் கொள்ளைக்காரி



கொடுமையாய் இருந்தும் கொடையாக நிக்கின்றாளே
கோபமாக இருந்தாலும் தாகத்தை தூண்டுகின்றாளே
வறுமை இல்லா பருவம் சுமந்து பளபளக்கின்றாளே
காமத்தை அள்ளி கண்களில் வைத்து வீசுகின்றாளே
மோகத்தில் என்னை பாவம் செய்ய வைக்கின்றாளே
உன் பொல்லாத்தனத்தால் நான் பொசுங்கிப்போறேனடி
என் எளியவளே எனக்குள் கருவாகி உருவானவளே
உன் தாவணியில் என்னை கட்டி போடடி....... இல்லை
உந்தன் காலடியில் என்னை வெட்டிப் போடடி...........!!!

No comments:

Post a Comment