Sunday, 30 August 2015

தூரத்தில் தெரிவது சுகமே

தூரத்தில் இருப்பது தூய்மையாய் தெரிவதும்
பக்கத்தில் வந்ததும் துன்பமாய் இருப்பதும்
இந்தப் பாவி மனிதனின் பரிதாப மனநிலை

ஏறிமிதித்து நாம் எங்கே தான் சென்றாலும்
காவி உடுத்தவன் பின்னே நாம் போனாலும்
பாதி வழியிலே பைத்தியம் பிடிக்குதே

மாடிப்படிகளை எட்ட உதவிய ஏணிப்படிகளை
எட்டி உதைக்கிறோம் நாடித்துடிப்புக்கள் நாளை
அடங்கிடும் கூடி இருப்பது கோடி நன்மையே 

No comments:

Post a Comment