Sunday, 30 August 2015

புலம்பி தவிக்கும் இதயம்


என்ன நினைத்து கவிதை எழுத
என்னை நினைத்து ஏதும் எழுத

கண்ணே நீயும் கண்ணை கசக்கி
கட்டில் மேலே விழுந்து புரள

விளக்கம் இன்றி நீ புலம்பி குளற
இதற்கு எதற்கு நான் ஏதும் எழுத

உனை நினைத்து வார்த்தை தேட
உள்ளம் எல்லாம் வெல்லம் ஆக

வெள்ளம் மேலே வள்ளம் போலே
யன்னல் ஓரம் நானும் ஆட

வேண்டாம் அன்பே காண்டு ஆவேன்
நாண்டு கொண்டு மாண்டு போவேன்

மின்னல் போலே பாய்ந்து வந்து
என்னை அள்ளி கொண்டு செல்லு !

No comments:

Post a Comment