Monday, 31 August 2015

தனிமையில்லாத் தனிமை



தனிமையில் இருக்கின்றேன், நான்
தனியாக இல்லை
தனியாக இருக்கின்றேன் ஆனால்
தனிமையில் இல்லை

என் ஜீவநாதமே உன் நினைவுகள்
மட்டுமின்றி நீயும் எனக்குள்ளே
தான் வாழ்கின்றாயடி

எந்தனை ஜென்மம் எடுத்தாலும்
அத்தனை ஜென்மத்திலும் நீயே
என் விதியாக வேண்டுமென்று
வரம் அன்று கேட்பேனடி

அப்பொழுது கூட உன் உடலுக்கு
நானே உயிராய் வேண்டி பெரும்
தவம் ஒன்று கொள்வேனடி.

என் நிம்மதியே மதி கொல்லும் விதியே
இந்து நதியே உன் கல்லறையில் கூட எனக்கு
ஒரு இடம் வேண்டுமடி...!

No comments:

Post a Comment