Monday, 31 August 2015

கடவுளும் காதலும் ஒன்று



கண்ணில் பட்டு நெஞ்சை தொட்டு
உள்ளம் கொள்ளை கொண்டவளே

வண்ணம் பூச வார்த்தை கோர்த்து
கதைகள் பல சொன்னவளே

என்னை விட்டு எங்கே சென்றாய்
எண்ணம் என்னை கொல்லுதடி

இமைகள் மூடித் திறக்க முன்னே
இடியை நெஞ்சில் போட்டவளே

இருட்டில் என்னை தள்ளிவிட்டு
இறைவன் ஆணை என்றவளே

விதியே என்று சொன்ன போது
என் விழியில் அருவி கொட்டுதடி

சகியே உன்னை கண்டால் மீண்டும்
நானும் கடவுள் உண்டு என்பேனடி..!!!

No comments:

Post a Comment