Sunday, 30 August 2015

புடவை கட்டிய பூச்செண்டு


மலர்ந்து நிற்கும் முல்லைச்செடியோ,
மானினத்தின் அரசி நீயோ
சேலை கட்டிய தேமாப்பூவோ
தாழம் பூவின் தங்கை நீயோ
தளதளக்கும் தங்க மீனோ
சீதாப் பழத்தின் சித்தி மகளோ
பேரீச்சம் பழத்தின் பேத்தி நீயோ
பலாப்பழம் உன் பாட்டி தானோ
மகிளம் பழத்தின் மாமன் பொண்ணோ
மாம்பழத்தின் மச்சாள் நீயோ
பொன்வண்டின் அக்கா தானோ
சிப்பி உந்தன் அன்னை வீடோ
செதுக்கிப் போட்ட சிற்பம் நீயோ,
பெண்வடிவில் பொன் சிலையோ
கண் மயக்கும் கதிரவன் ஒளியோ
ஐயோ ஐயோ யார் தான் நீயோ
இந்த கண்ணனுக்கு என்ன உறவோ.?

No comments:

Post a Comment