Monday, 31 August 2015

காவடி ஆடும் கழுதைகள்



கிரகம் பிடித்ததென்று கரகம் எடுக்கின்றான்
நரக லோகத்திலே விரதம் இருக்கின்றான்
மரண ஊர்வலத்தில் கரணம் போடுகின்றான்

சாத்திரம் பார்பவன் சைக்கிலில் போகின்றான்
பரிகாரம் சொன்னவன் பல்லக்கில் சுற்றுறான்
ஆத்திரம் கொள்பவன் அனாதை ஆகின்றான்

இங்கே காசி தீத்தத்தை கழுதைகள் குடிக்குது
காண்டாமிருகங்கள் காவடி எடுக்குது, ஆடிப்
பெருக்கில் அர்ச்சணை செய்யுது ஆந்தைகள்
கூடிக் குலவுது செம்மறி ஆட்டு மந்தைகள்...

நாடித்துடிப்பிலே நாணயம் போனதே நல்லதும்
கெட்டதும் நாவினில் வாழுதே மாளிகைவீட்டில்
மானிடச் சிலைகள் ஏழைக் குடிசையில் எத்தனை
இன்னல்கள் சூடியஆடையில் ஏனிந்த யன்னல்கள் ?

No comments:

Post a Comment