Monday, 31 August 2015

சமத்துவம் இல்லா சமுதாயம்



சமுதாயம் பற்றி நான் என்ன சொல்ல, இங்கே
சமத்துவம் இருந்தால் அதை நீ வந்து சொல்லு

கூழுக்கும் கஞ்சிக்கும் கூத்தாடும் உயிர்களை
கூரிய சொல்கொண்டு குறிவைத்து தாக்குறோம்

மண்ணுக்கும் பொன்னுக்கும் பன்னீரை தூவும் நாம்
பெண்களின் புன்னகையை கண்ணீரில் கரைக்கிறோம்

மாமியார் மருமகள் மதிப்புத் தான் இங்கு உண்டா
மாந்தர்கள் பேச்சிலே மரியாதை தினம் உண்டா

ஆடவர் கைகளில் அடக்கும் அதிகாரம் உள்ளதா
சீதனம் கேட்பது அவர்களின் ஆண்மையின் சின்னமா

தாரம் என வருபவள் உனக்கு சமைத்து போடவா
தாலி கட்டினால் மட்டும் அவளின் தாகம் தீருமா

பிள்ளைகள் பெறுவது பெற்றோர்களின் கடமையா
பொத்தி பொத்தி வளர்பது போட்டிக்கு அனுப்பவா

காட்டு மிருகங்கள் தன் இனத்துடன் கூடி வளருது
நாட்டில் விலங்குகள் வீடென்னும் கூட்டில் வாழுது

இங்கே பாவி யாரடா இதன் சாபம் ஏனடா அதன்
சாவி எங்கென்று முதல் தேடி திறவடா...........!!!

No comments:

Post a Comment