Sunday, 30 August 2015

தாயாகும் தாரம் இவள்


ஈயாரே எறும்பாரே இனிப்பான
செய்தி ஒன்று கரும்பாக சுவை
உண்டு செவி கொடுத்து நீ கேளு
நான் தயாராக இருக்கின்றேன்
அவளை தாயாராக பார்ப்பதற்கு
அவளும் தயாராக இருக்கின்றாள்
தான் தாயாராக ஆவதற்கு
வாயார நான் உரைக்க மனசார
நீ ருசித்த ஒற்றை வார்த்தையில்
ஓராயிரம் கருத்திருக்கு உனக்கது
புரிந்ததால் உலகுக்கே சொல்லி விடு!

No comments:

Post a Comment