Monday, 31 August 2015

ஏழை பென்னின் ஒப்பாரி


கோது நொருங்கிய நண்டு
மாது சமைக்க கண்டு

கேது ராகு இடம் சென்று
சாது மிரண்டது என்று

பார்வை இழந்தவன் வந்து
சூது நடக்குதே அங்கு

என் பாவம் தீர்க்கவா இங்கு
என காதில்லாதவனிடம் ஓதும்
நிலை கண்டு,

சோகம் தாங்க சோலைக்குயில்
மாலைக்கருக்கலில் மல்லாக்க
பறக்குதென்று

ஓலை குடிசையிலே ஒப்பாரி நடக்குதென்று
காலைக் கனவினிலே கரிக்குருவி
சொன்னதென்று

மாலை அணிந்து வந்த மணமகள் இது என்
சாபம் எனச்சொல்லி கோலம் கலைத்தாளாம்!

No comments:

Post a Comment