Sunday, 30 August 2015

தேவதை



என்னவள் வீசுகின்றாள் காதல் வலை
எனக்குள்ளே பொங்குதே காம அலை

தேவதை உன் சொந்தமடி நீயோ
எனக்கு பந்தமடி
உன் அழகை பாடிடவே எனக்குள்
வார்த்தை இல்லையடி

வாடாத மல்லிகையே வானத்து
புன்னகையே
வண்டாக நான் மாறி வருடித்தேன்
குடித்திடவா
உண்ட தேன் நெஞ்சினிலே உரமாக
உள்ளதடி
உள்ளங்காலில் முத்தமிட்டால் உச்சி
வரை கூசுதென்றாய்

பாலைக் கண்ட பூனை போலே பருகத்
தவித்தேன் நானும் அன்று
பறக்க நினைக்கும் பச்சி போலே இறக்கை
இன்றி துடித்தாய் நின்று

பூமியிலே மோட்ஷம் காணும் பூவினத்தில்
நாமும் ஒன்று
பூஜை செய்ய பூக்கள் எடுத்து பூவை மேலே
தெளித்தேன் அன்று

என்னவள் வீசுகின்றாள் காதல் வலை
எனக்குள்ளே பொங்கியதே காம அலை

No comments:

Post a Comment