Monday, 31 August 2015

உண்மை சொல்லும் மௌனம்



உண்மை ஒன்று சொல்லவா
உண்மை ஒன்று சொல்லவா

வாயை மூடி மனதைத்திறந்து
வார்த்தையின்றி மௌனமாக
உணர்வை இங்கே கொட்டவா

காதை நீயும் பொத்திக்கொண்டு
கண்ணை நன்கு விழித்துக்கொண்டு
என் கதையைக் கேட்க ஓடிவா...

என் விழியில் வடியும் கண்ணீர்
துளியும் அந்த உண்மை சொல்லுதா,

இல்லை ஊமை பேசும் பாஷை போலே
எந்தன் மொழியும் உள்ளதா...............???

No comments:

Post a Comment