Sunday, 30 August 2015

மஞ்சம் வந்த குஞ்சு நிலா



மஞ்சம் வந்த குஞ்சு நிலா எனை
கொஞ்ச சொல்லி கெஞ்சுகிறாள்
பிஞ்சு போன நெஞ்சினிலே மெல்ல
பஞ்சு முத்தம் விதைக்கின்றாள்
வஞ்சி உந்தன் நெஞ்சிருக்க எனக்கு
பஞ்சு மெத்தை தேவையில்லை
அஞ்சி அஞ்சி நானிருந்தும் எனை
மிஞ்சி விட்டேன் தத்தை உந்தன்
வித்தைகளால்.......................!

No comments:

Post a Comment