Monday, 31 August 2015

உள்ளதை சொல்லு



உன்னை ஒன்று கேட்கணும்
உண்மை என்ன சொல்வாயா
உள்ளுக்குள்ளே என்னவென்று
உள்ளபடி நீ சொல்வாயா.....???

உள்ளத்துக்குள் நான் இருந்தால்
என்னை விட்டு செல்வாயா, உன்
எண்ணத்திலே தான் தொடர்ந்தால்
ஊமையாகி எனைக் கொல்வாயா

என்னுக்குள்ளே நான் நொருங்கி
என் கண்ணுக்குள்ளே நீர் நிரம்பி
என் தொண்டைக் குழிநீர் வற்றும்
போதும் உந்தன் நாமம் தாகமாகி

மண்ணுக்குள்ளே மறையும் செய்தி
மடலாய் வரும் ஒருநாள் தேடி, நான்
உலகை விட்டு பிரியும் போதும், என்
உண்மை பாசம் தீயில் மோதி உன்னை
வாழ்த்திப் போவேன் மலர்கள் தூவி..!

No comments:

Post a Comment