Monday, 31 August 2015

வித்தகனா மனிதனா



புத்தகத்தில் சத்திருந்தால்
பத்திரமாய் நீ வழங்கு

வித்தகனாய் இருப்பதென்றால்
சாத்திரத்தை நீ விலக்கு

நித்திரையில் கனவு வந்தால்
பாத்திரத்தை நீ அடக்கு

புத்தியிலே கூர் இருந்தால்
மத்தியிலே நீ முழங்கு

சித்திரமாய் திகழ்வதென்றால்
சத்தியத்தை நீ வணங்கு

இத்தனையும் சாத்தியமா..?
மனிதனுக்குள் நீ அடங்கு.

No comments:

Post a Comment