Sunday, 30 August 2015

நினைவில் தொங்கும் தோரணம்



பாவடை நாடாவில் அன்று பூமாலை கட்டி
பூரணநிலவில் தோரணம் தொங்கவிட்டு
காரணமின்றி காரியங்கள் நடத்தினோமே

சாமியார் இல்லாமல் கல்யாணம் கட்டி
மாமியார் இல்லாமல் மணல்வீடு கட்டி

நெருப்பில்லா அடுப்பில் குண்டான் சட்டியில்
கூட்டாஞ் சோறாக்கி உண்டு மகிழ்ந்தோமே

இன்று சாமியார் தீண்டாத மண்ணும் இல்லை
மாமியார் திட்டாத பொண்ணும் இல்லை....!!!

No comments:

Post a Comment