Sunday, 30 August 2015

சாயம் பூசிய சாட்டுக்கள்



உண்மை இங்கே முக்காடு போட்டு
முடங்கிக் கிடக்குது
பொய்கள் மட்டும் பரிவட்டம் கட்டி
பல்லாக்கில் சுற்றுது
தீமை மட்டும் தீயைப்போலே தினமும்
தீண்டிக்கொள்ளுது
அன்பு ஏனோ அடுப்பில் வெந்து காற்றில்
கரைந்து பறக்குது
உறவுகள் எல்லாம் உதட்டில் மட்டும்
ஊஞ்சல் ஆடுது
உரிமை என்று சொல்லிச் சொல்லி பல
உயிர்கள் போகுது
இயந்திரம் இப்போ மந்திரம் சொல்லி உனை
ஆட்டி வைக்குது
நாளைய உலகம் என்னவாகுமோ என்று
மனசுது ஏங்குது
நல்லதை சொன்னால் நாத்திகன் என்றே
சாயம் பூசுது
நல்லதும் கெட்டதும் சாமியின் கணக்கென்று
ஆத்திகம் சொல்லுது
இப்படி சாட்டுச் சொல்லி சாட்டுச் சொல்லியே
எங்கள் வாழ்க்கை ஓடுது.. !!!

No comments:

Post a Comment