Sunday, 30 August 2015

தேன் சிந்தும் தேவதை நீ


தேவதை தேகத்தில் பூ விரியுது
தேடி வந்து வண்டொன்று தேன்
குடிக்குது

தாமரை இதழ்களில் நீர் வடியுது
தாவி வந்து நண்டொன்று ஏன்
நெளியுது

பாவை விழிகளில் மீன் துடிக்குது
பறந்து வந்து கொக்கொன்று வலை
விரிக்குது

பூவை புன்னகையில் பால் சொரியுது
பாய்ந்து வந்து காளையொன்று பல்
இளிக்குது

தேன் குடித்த வண்டுக்கு என்ன ஆச்சு
தாவி வந்த நண்டுக்கு என்னதானாச்சு

பறந்து வந்த கொக்குக்கு ஏதோ ஆச்சு
பாய்ந்து வந்த காளைக்கு என்னமோ ஆச்சு

இதையெல்லாம் அறியாமல் என் மனசோ
குழம்பிப்போச்சு இப்படி குழப்பதில் வாழ்ந்து
எனக்கு பழகிப்போச்சு..!!!

No comments:

Post a Comment