Sunday, 30 August 2015

தாமரை மடியில் தவழும் குழந்தை

மாம்பழக் கன்னி ஒன்று மாதுளம்
கனி ஏந்தி தாவணி வீசுகின்றாள்

நான் தடுக்கி விழுகையில் தாமரை
மடிகொண்டு தாங்கிப் பிடிக்கிறாள்

பூவினில் இல்லாத தேன் சுவை நான்
உண்டு பூவை நீ யார் என்கின்றேன்

தாவணி கட்டிய தாமரை நானென்று
தத்தை தாகத்தைத் தூண்டுகிறாள்

கல்லிலே மோதிய கண்ணாடி போல்
அன்று மண்ணில் நான் கிடக்கிறேன்

தாலியை கட்டடா நான் தாரமாய்
ஒட்டிட என ஜாடையில் பேசுறாள்

கோடையில் மழை கண்ட காடையை
போல நான் தோகைவிரித்தாடுறேன்

மாரியில் வெயில் பட்ட மான்குட்டி
போல் என் மார்பினில் குதிக்கிறாள்

கார்த்திகை மாதத்து காந்தள் மலர்
ஒன்று எந்தன் கண் முன் நடக்குதே

ஆந்திரம் கொண்டவன் தூக்கமாத்திரை
போட்டது போல் மயங்கிக் கிடக்கின்றேன்.!

No comments:

Post a Comment