அன்பின் அருமை புரியாதவர்களும்
அதன் ஆழம் தெரியாதவர்களும்
ஆயிரம் சொந்தங்கள் நட்சத்திரங்களாய்
சூழ்ந்திருந்தாலும் அனாதைகளே
உணர்வுகள் இல்லாததுகளை கூட
உணர்ச்சி பொங்கப் பேசி உணர பண்ணி
உருப்பட வைக்கலாம்......
ஆனால் சூடு சூரனை வெட்கம் ரோசம்
உண்மை நேர்மை எதுவுமே இல்லாததுகளை
எப்படித்தான் உயிர்ப்பிக்க முடியும் ?
ஏளனம் செய்யும் எழியோரைக் கண்டு
இதயச் சாரளம் பூட்டித் தள்ளி நீ நில்லு
காரணம் பூரணம் ஆனதன் பின்னே
காரியம் நடத்தி கைவீசிச் செல்லு
நிற்பதும் நடப்பதும் நிழலறியும் நிம்மதி
எதுவென நிஜமறியும் கற்றவை யாவதும்
நிற்பதில்லை நிற்பவை யாவதும் கற்றதில்லை..!

No comments:
Post a Comment