Monday, 12 March 2018



நான் கதை ஒன்று சொல்லப்போறேன்
காதைக் கொடுத்துக் கேளடி
என் கதையில் நீயும் சொக்கிப்போனால்
உன் கவிதையாவேன் நானடி

நான் விதை ஒன்று போட்டு வைத்தேன்
வீணாய்ப் போகவில்லையடி
நீயோ விடை சொல்லித் தடை போட்டும்
நான் தள்ளிச் செல்லவில்லையடி

உந்தன் புல்லாங்குழல் மொழிகேட்டு
நான் குயில் குஞ்சு ஆனேனடி
எந்தன் ஒளிதீபம் நீயே என்று தினம்
கவிபாடிக் கொள்வேனடி

நீ துயில் கொள்ளும் வேளை தன்னில்
உன் துணையாவேன் நானடி
என் உயிர் போகும் போது கூட உந்தன்
நிழல் வேண்டும் எனக்கடி !

No comments:

Post a Comment