Monday, 12 March 2018

அடிப்படை உணர்வுகளை
அடியோடு வெறுக்கிறேன்
வெளிப்படை இல்லாத
விடிவைத்தேடி அலைகிறேன்

சிவனடி பாதங்கள் தொட்டவன்
நான் இல்லை....... சிந்தையில்
வைத்ததால் சீரற்று நடிக்கிறேன்

பனித்துளி பருகிடும் எறும்பு போல்
நான் சுவையாய் போனேன் தாமரை
குளத்தினில் தவளைகள் வாயில்

உருவங்கள் இல்லாத உவமைகள்
சுமக்கின்றேன் பருவங்கள் அற்ற
காலனை அழைக்கின்றேன்

பொழுது போக்கும் சித்திரமாய்
பல விசித்திரங்கள் நடக்கின்றது
பொம்மலாட்ட மேடையிலே, சில
பித்தலாட்டங்கள் கலைகின்றது !

No comments:

Post a Comment