குழப்படியாய் நான் இருந்தும்
குளறுபடிகள் செய்ததில்லை
அடுப்படியில் நீத்துப் பெட்டி
அழுவதென்று சொல்வதினால்
மடைப்பள்ளி மோதகம் தான்
மனமுவர்ந்து ஏற்றிடுமோ..?
விளை நிலத்தில் விசம் கலந்து
விளைச்சல்களை பெருக்குவதால்
உலை கொதிக்கும் என்று சொன்ன
உத்தமரே இந்த உலகினில் ஞானி
விலை உயர்ந்த பொருட்கள் கொண்டு
விழிப்புணர்வு கொடுக்கும் விஞ்ஞானி
அத்திப்பழமும் ஆலம்பழமும்
முத்திப்பழுத்தால் முழுதும் வீணி
சித்தப்பனும் பெரியப்பனும்
செத்துபோனால் சொத்துப்பங்காளி
போத்திப் படுத்த அம்மா சேலை
விட்டுப் போனால் அதுவும் காலி
புத்தி கெட்ட மனிதர்களின் இத்துப்
போன உணர்வைக் கண்டு, செத்துப்
போகுதே என் ஆவி, அதை கொஞ்சம்
ஏனும் ஒத்திவைக்க முயற்சி செய்தும்
பொத்திவைக்க முடியாது, தினம் தினம்
பித்துப்பிடித்தாடும் மனங்கள் பலகோடி !
குளறுபடிகள் செய்ததில்லை
அடுப்படியில் நீத்துப் பெட்டி
அழுவதென்று சொல்வதினால்
மடைப்பள்ளி மோதகம் தான்
மனமுவர்ந்து ஏற்றிடுமோ..?
விளை நிலத்தில் விசம் கலந்து
விளைச்சல்களை பெருக்குவதால்
உலை கொதிக்கும் என்று சொன்ன
உத்தமரே இந்த உலகினில் ஞானி
விலை உயர்ந்த பொருட்கள் கொண்டு
விழிப்புணர்வு கொடுக்கும் விஞ்ஞானி
அத்திப்பழமும் ஆலம்பழமும்
முத்திப்பழுத்தால் முழுதும் வீணி
சித்தப்பனும் பெரியப்பனும்
செத்துபோனால் சொத்துப்பங்காளி
போத்திப் படுத்த அம்மா சேலை
விட்டுப் போனால் அதுவும் காலி
புத்தி கெட்ட மனிதர்களின் இத்துப்
போன உணர்வைக் கண்டு, செத்துப்
போகுதே என் ஆவி, அதை கொஞ்சம்
ஏனும் ஒத்திவைக்க முயற்சி செய்தும்
பொத்திவைக்க முடியாது, தினம் தினம்
பித்துப்பிடித்தாடும் மனங்கள் பலகோடி !

No comments:
Post a Comment