Monday, 12 March 2018

மாலை வேளை மலையோரச் சோலை
சாலை மேலே இரு கை கோர்த்த வேளை
கதைபல பேசி தன் நிலைதனை மறந்து
மெல்லிய தென்றல் மேனியைத் தழுவ
புல்வெளிமேலே பூத்தன இரு மலர்கள்

கண்ணிலும் நெஞ்சிலும் கவிதைகள் மிதக்க
கார்முகில் கூந்தலை கைவிரல் துளைக்க
மானிட வாழ்வினில் வானவில் கலக்க
மொழிகள் தொலைந்து விழிகள் புலம்ப

படர்ந்த கொடிகள் இறக்கை முளைத்து
பறந்து சென்றன விரதம் முடிக்க ,.. அட
வாடைக் குளிரோ வாட்டி வதைத்திட
போகும் வழியினில் தேனீர் அருந்திட
தேனி இரண்டுமே தேடி அலைந்திட

மாலை உணவினை மாற்றி ஊட்டிட
வயிறு நிறைந்தும் மறுக்க மறந்திட
மனசு குளிர்ந்து மார்பில் சாய்ந்திட
பயணம் தொடங்கின பாதை இனித்திட

கண்ணாடி முன்னாடி பின்னாடி
நின்றது மனக் கண்ணில்த் தெரியுதே
கள்ளிச் செடியினில் முள்ளில் எழுதிய
கதை கொள்ளி வைக்குதே உள்ளம்
பள்ளிகொள்ளையிலும் துள்ளி எழுகுதே !
 —

No comments:

Post a Comment