Monday, 12 March 2018

பாசமும் நேசமும்
பல கதை கூற
பாவிகள் நெஞ்சினில்
கடும்விசம் ஊற

ஆதியும் அந்தமும்
அடிபணிந்தாட
ஆயிரம் ஆசைகள்
அவதியில் வாட

கூடிய கைகளும்
கொடுங்கோளாக
நாடிய நெஞ்சமும்
தீயினில் வேக

சூடிய மல்லிகை
வாடியே காய
தேடிய செல்வங்கள்
ஓடியே போக

இக்கரை அக்கரை
இச்சையில் மூழ்க
சக்கரை பந்தலில்
சாக்கடை நாற

விற்பவர் பெற்றவர்
விலை நிலை ஏற
வில்லினில் பாம்பினை
வித்தகர் ஏவ

தப்பினில் உப்பினை
அகப்பையில் ஏந்த
தவறியே வழிகளில்
தாமரை பூக்க

செப்பிய சொற்களில்
செதில் படர்ந்தோட
செவிகளில் தேளினம்
செந்தமிழ் ஓத

மாமனும் மாமியும்
மாமிசம் சமைத்து
மாப்பிள்ளை உண்டிட
மருமகள் அழைப்பு !

No comments:

Post a Comment