இது மதங்களின் வேதமா
சாத்தான்களின் நாதமா
மாட்டிலே மயிர் பிடிங்கினால்
மிருகவதை
நாட்டிலே சிலை உடைத்தால்
அதிரும் நிலை
உலகெல்லாம் உயிர் காக்க
உயர்தலைமை
ஆனால் மனிதனை அழிக்கிறதா
மனிதத்தன்மை
எல்லாம் காக்க எல்லாம் இருந்தும்
இங்கே என்ன நிலை
எத்தனை காப்பகங்கள் இருந்தும்
ஏன் இவ்வளவு கொலை
யாரும் கேட்க முடியாட்டி எதற்கு
இப்படி ஒரு முறை
பச்சைக்குழந்தைகள் பதறும் தாய்கள்
இச்சை தீர்க்கும் நாய்கள்
இதையெல்லாம் பார்த்துக்கொண்டே
இருக்கும் பேய்கள்
யாரைக் கேட்க யாருக்குச் சொல்ல
ஈனப்பிறப்புக்களின் இன அழிப்பை
மனித உரிமைகள் எதற்கு இங்கே
நாற்காலிகள்போட்டு நாட்டியம்
பார்க்கவா.. இல்லை
நலிந்தோரை பார்த்து எள்ளி நகைக்கவா ?
அதைக் காக்க இதைக் காக்க என்று
ஆயிரம் கிளைகள் இப்போ எங்கே போனது
இந்த சொறிப்படைகள் ?
வேண்டம் இனியும் இந்த உலகமே
எதுவுமே இல்லாது அழிந்து போகட்டும்
மனித இனமே மறைந்து போகட்டும்.

No comments:
Post a Comment