Monday, 12 March 2018

நான் ஒரு பாதி நீ ஒரு பாதி
கவியும் கதையும் எழுதிடவா
இதில் இரு பாதிகள் சேர்ந்து
ஒரு சோடி நாம் என்றிடவா

ஆயிரம் கனவுகளுடன்
பேசிய விழிகள் நான்கும்
பேச்சின்றி தொலைந்து
அரங்கேறிய இந்நாளில்

மண்மீது ஒரு விழி
விண்மீது மறு விழி
கைபேசி மொழி வழி
காற்றில் கலந்த பொன்னாளே

கருவறை வாசத்தின் முகரல்
மறுமுறை உன்னில் தேடி
சிலிர்த்துப் போக அன்று
முடிவு கொண்டதும் இந்நாளில்

கருவறை உனது ஆயினும்
அங்கே துடித்தது எனது உயிர்
சிலிர்த்தது மேனியல்ல என்
சுவாசத்தின் இதய ஒலியே

ஆசை தெரிவுகளில் அன்று
ஆடைகள் கொண்டுவந்தாய்
ஆர் என்று தெரியாத எனக்கு
அப்படியே பொருந்தும் படி

கண்களில் கைது செய்திருப்பில்
ஆடைககள் அளவின்றிப்போகலாம்
இதயத்துக்குள் கருவுற்றதால்
அணிந்து பார்த்து அள்ளி வந்தேன்

பயணத்தின் தொடக்கத்தில்
பாதி கதை நீ சொன்னாய்
மீதி கதை நான் சொல்ல முன்
வானம் தாண்டி நீ வந்தாய்

கதை சொன்ன கருவிழியை
கண் தேடி அலைய முன்னே
கால்கள் ஓடி கைபிடித்திட
காலம் கனிந்த பொன்னாளே

கண்டங்கள் பிரிந்த கோட்டை
காதலுடன் தாண்டி ஓடி வர
கங்கணம் கட்டிய
என் பாசக் காவலனே

கண்டம் தாண்டியது என்
உடல் மட்டுமே தவிர
என் உயிர் உன்னிடத்தில்
தானே என் கொள்ளைக்காரியே

உன்னை சேரும் நாள் எண்ணி
உறக்கம் தொலைத்த இந்நாளில்
காணத் துடித்தேன் கண்ணா
கனவிலும் உன் வருகை வேண்டி

எனை சேர உறக்கம் தொலைக்க
உன்னை தேடி உன்னிடத்தில்
உலகை மறந்து ஓராயிரம்
கனவு சுமந்தது இப்பொன்னாளே

உலகம் மறந்து உயிர் மறந்து
ஊர் திறந்து உற்றார் திறந்து
உன்னோடு பேசிக் கொண்டு
வரவுக்காக காத்துருந்ததும்
இந் நாளில்.....

உலகை நீயோ மறந்தாய்
நானோ உயிரை தொடர
அனைத்தையும் துறந்து
ஆயத்தம் ஆன பொன்னாளே

உன்னிடத்தில் உறைந்த நிமிடங்கள்
உரையாற்றுகிறது உணர்வுகளோடு
உடலினிலே ஊற்றியது பாசம் என்
உயிரில் படர்ந்து சுவாசம் கலந்து
வாசம் வீசுயது இந்நாளில்

காலங்கள் ஓடியது அதில்
கற்பனைகள் பொங்கியது
காலடி வரும் வரைக்கும்
பல யுகம் தெரிந்தது கொடுநாளே

மணித்துளிகள் நாளாக
நாள் ஒன்றும் யுகமாக
நான் சுமந்த மழலைதனை
தோள் சாய்க்க துடித்ததும்
இப்பொன்னாளே

கவனம் கவனமென்று
காரியத்தில் கண்ணாயிருந்து
என் கருவாச்சிக்கு கதை
சொல்லி நான் கருக்கலைந்ததும்
இப் பொன்னாளிலே

இதில் உன் பாதி எதுவென்றும்
என்மீதி இதுவென்றும் யார்தான்
புரிந்து கொள்வார் அப்படி புரிந்தால்
நம் ஜாதி புரிந்து கவிகூட இனித்திடும் !

No comments:

Post a Comment