உனக்கும் உன்னை கட்டியவனுக்கும்
அவ்வளவு பெரிய வேறுபாடு ஒன்றும்
கிடையாது, ஏன் என்று கேட்கிறாயா ?
அன்று நீ பூத்துக் குலுங்கும்போது அள்ளி
முத்தமிட்டு அணைத்துக்கொண்டவன்
சலித்துப் போனதும் வெட்டி விட்டான்
இன்று உன் தனிமையை போக்க இரவும்
பகலும் இணைந்து கொடுத்த என்னை
சாயம் போனதும் தள்ளிவைத்துவிட்டாய்
ஓ.... நான் யார் என்று கேட்கிறாயா ..???
இங்கனம் என்றும் உன் வியர்வை வாசம்
மறவாத கிளிந்து போனதும் நீ தூக்கிவீசிய
உன் மோகத்தில் நனைந்த தலையணை!

No comments:
Post a Comment