இடைவெளி முளைத்ததாய்
எண்ணிக்கொண்டு
புது முகவரி நீட்டுறாய்
கண்ணுக்குள்ளே
விழிவழி புகுந்தவள்
நெஞ்சுக்குள்ளே
முழுமதியென மின்னுறாள்
உள்ளுக்குள்ளே
வளர்பிறை வாழும் என்
உயிருக்குள்ளே
புது தேய்பிறை புகுருமோ
உள்ளத்துக்குள்ளே
சதி வலை பின்னி ஏன்
கவி எழுதி,.. எனை
சாய்த்திடப் பார்க்கிறாய்
நோடாலச்சதிர் ஆடி
உண்மையை சொல்கிறேன்
ஓடிவிடு,.. இல்லை
உபத்திரம் கொடுக்காமல்
ஆளைவிடு
தரித்திரம் பிடிக்க முன்
மாறிவிடு, ..இல்லை
நான் தடுத்தும் நீ தந்தால்
தறுதலையாவேன் காலைவிடு
எங்கள் இடைவெளி குறைந்தது
இப்போது இனி இடஞ்சல்கள்
கொடுக்காதே எப்போதும், பின்
தலைகீழ் ஆகிடும் உன் கோடு !

No comments:
Post a Comment