இரவுப்பயணம் இணைந்த இதயங்கள்
இறுகப்பற்றிய இரண்டு உள்ளங்கள்
தொடர்ந்த உறவில் மறந்தது உலகை
அச்சம் பாதி உச்சம் மீதி எல்லைகள் பல
தொல்லைகள் இருந்தும் முல்லைகள் பூத்தது
காதுகளில் ஓசைகள் கர்ப்பம் தரித்திட
கண்களின் மொழிகள் களம் அமைத்திட
கைவிரல் பத்தும் ஒத்து உழைத்திட
மூச்சுக்காற்றில் முகங்கள் சிவந்திட
முந்தானை வாசத்தில் பேச்சு திணறிட
செவிவழி செய்திகள் சொல்லிட
செவ்விதழ் செயல்களில் தள்ளிட
அதன் படி சாவிகள் நெய்திட
அனைத்திலும் அமுதம் பொங்கிட
செழிப்பில் விழிகள் விரிந்திட
பாசம் பொங்கி மோசம் தொடர்ந்திட
நாசம் இன்றி மோட்ஷம் அடைந்திட
ஒருவாய் உணவை இருவாய் உண்டிட
தருவாய் இனியும் சுகமே என்றிட
பாதிப் பயணம் பசுமையாய் முடிந்திட
மீதிப்பயணம் எதுவரை தொடர்ந்தது
மிச்சக்கதையில் எதுதான் நடந்தது
பச்சைப் பிள்ளை பாலிற்கு அழுதது
இச்சை தீர்ந்ததும் ஏறி மிதித்தது
உச்சம் தலையில் ஓங்கி அறைந்தது
துச்சமாய் எண்ணி துள்ளிக்குதித்தது
முச்சை அறுந்து முகத்திரை கிழிந்தது
கச்சை அவிழ்ந்து காற்றில் பறந்தது
பிச்சுத் தின்றிட பேய்கள் தொடர்ந்தது
நச்சென்றிருந்தது நாசமாய் போனது
சொச்சம் சொல்ல மூளை மழுங்குது
சொல்லாவிட்டால் உள்ளம் விம்முது
சொல்ல முன்னே உதடுகள் நடுங்குது
சொல்லச் சொல்ல கண்கள் கலங்குது
சொல்லி விட்டால் எல்லாம்................!?
இறுகப்பற்றிய இரண்டு உள்ளங்கள்
தொடர்ந்த உறவில் மறந்தது உலகை
அச்சம் பாதி உச்சம் மீதி எல்லைகள் பல
தொல்லைகள் இருந்தும் முல்லைகள் பூத்தது
காதுகளில் ஓசைகள் கர்ப்பம் தரித்திட
கண்களின் மொழிகள் களம் அமைத்திட
கைவிரல் பத்தும் ஒத்து உழைத்திட
மூச்சுக்காற்றில் முகங்கள் சிவந்திட
முந்தானை வாசத்தில் பேச்சு திணறிட
செவிவழி செய்திகள் சொல்லிட
செவ்விதழ் செயல்களில் தள்ளிட
அதன் படி சாவிகள் நெய்திட
அனைத்திலும் அமுதம் பொங்கிட
செழிப்பில் விழிகள் விரிந்திட
பாசம் பொங்கி மோசம் தொடர்ந்திட
நாசம் இன்றி மோட்ஷம் அடைந்திட
ஒருவாய் உணவை இருவாய் உண்டிட
தருவாய் இனியும் சுகமே என்றிட
பாதிப் பயணம் பசுமையாய் முடிந்திட
மீதிப்பயணம் எதுவரை தொடர்ந்தது
மிச்சக்கதையில் எதுதான் நடந்தது
பச்சைப் பிள்ளை பாலிற்கு அழுதது
இச்சை தீர்ந்ததும் ஏறி மிதித்தது
உச்சம் தலையில் ஓங்கி அறைந்தது
துச்சமாய் எண்ணி துள்ளிக்குதித்தது
முச்சை அறுந்து முகத்திரை கிழிந்தது
கச்சை அவிழ்ந்து காற்றில் பறந்தது
பிச்சுத் தின்றிட பேய்கள் தொடர்ந்தது
நச்சென்றிருந்தது நாசமாய் போனது
சொச்சம் சொல்ல மூளை மழுங்குது
சொல்லாவிட்டால் உள்ளம் விம்முது
சொல்ல முன்னே உதடுகள் நடுங்குது
சொல்லச் சொல்ல கண்கள் கலங்குது
சொல்லி விட்டால் எல்லாம்................!?

No comments:
Post a Comment