நான் யார் என்று எனக்குத் தெரிந்தும் என்னை நானே
யார் எனக் கேட்டேன் நீதான் அவன் என்று நானே
சொல்ல அவன்தானே நான் என தெரிந்து கொண்டு
எனது பாதையில் நடந்து சென்றேன்..
ஆனால் நால்புறமும் நால்வகைப் பேச்சு
நீ அவன் இல்லை இவன்தான் நீ என்றது
ஒருபுறம் இல்லவே இல்லை அவனும்
நீ இல்லை இவனும் நீ இல்லை எவன் தான்
என்று எதுவும் மெய் இல்லை என்றது
மறுபுறம்..
அப்போ நான் யார் தான் என்று எனக்குள்
கேட்டால் ... அட போடா நீ தான் அவன்
என்று உள்ளம் சொன்னது
இதனைக் கேட்டு என்னைத் தேடி எங்கும்
அலைந்தேன் எதுவும் இல்லை, அதனால்
கொஞ்சம் குழம்பிப்போனேன் இதனால்
என்னை அறிந்தோர் யாரோ அவரை நாடி
ஓடி வந்தேன்,
உண்மை சொல்ல ஆசைப் பட்டால் உள்ளபடி
யார் எனக் கேட்டேன் நீதான் அவன் என்று நானே
சொல்ல அவன்தானே நான் என தெரிந்து கொண்டு
எனது பாதையில் நடந்து சென்றேன்..
ஆனால் நால்புறமும் நால்வகைப் பேச்சு
நீ அவன் இல்லை இவன்தான் நீ என்றது
ஒருபுறம் இல்லவே இல்லை அவனும்
நீ இல்லை இவனும் நீ இல்லை எவன் தான்
என்று எதுவும் மெய் இல்லை என்றது
மறுபுறம்..
அப்போ நான் யார் தான் என்று எனக்குள்
கேட்டால் ... அட போடா நீ தான் அவன்
என்று உள்ளம் சொன்னது
இதனைக் கேட்டு என்னைத் தேடி எங்கும்
அலைந்தேன் எதுவும் இல்லை, அதனால்
கொஞ்சம் குழம்பிப்போனேன் இதனால்
என்னை அறிந்தோர் யாரோ அவரை நாடி
ஓடி வந்தேன்,
உண்மை சொல்ல ஆசைப் பட்டால் உள்ளபடி
சொல்வதென்றால் என்னை அறிந்து புரிந்தோர்களே
என்னை எனக்கு காண்பிப்பீரோ அவனா இவனா
எவனா என்று எடுத்துக்கொஞ்சம் உரைப்பீர்களோ ?
என் உண்மை முகம் தெரியவேண்டும் என்
உள்ளம் என்ன அறியவேண்டும், நியாயம்
நேர்மை தவறவேண்டாம் என் நலத்தில் கூடக்
கவனம் வேண்டாம் முகத்துதிகள் விட்டெறிந்து
உணர்வைக் கொஞ்சம் தொட்டெடுத்து
என் உண்மை முகம் எதுதான் என்று எனக்கு
கொஞ்சம் புரியவைத்து உங்கள் பார்வையில்
நான் யார் தான் என்று உள்ளதை உள்ளபடி
ஒப்பிப்பீரோ ?
என்னை எனக்கு காண்பிப்பீரோ அவனா இவனா
எவனா என்று எடுத்துக்கொஞ்சம் உரைப்பீர்களோ ?
என் உண்மை முகம் தெரியவேண்டும் என்
உள்ளம் என்ன அறியவேண்டும், நியாயம்
நேர்மை தவறவேண்டாம் என் நலத்தில் கூடக்
கவனம் வேண்டாம் முகத்துதிகள் விட்டெறிந்து
உணர்வைக் கொஞ்சம் தொட்டெடுத்து
என் உண்மை முகம் எதுதான் என்று எனக்கு
கொஞ்சம் புரியவைத்து உங்கள் பார்வையில்
நான் யார் தான் என்று உள்ளதை உள்ளபடி
ஒப்பிப்பீரோ ?

No comments:
Post a Comment