Monday, 12 March 2018

கடவுள் கடவுளென்று
கண்கலங்க வைக்கிறியே
உலகம் உருண்டையென
ஊகிக்க மறுக்கிறியே


வாடா வாடா என்று
வாரி அணைக்கிறியே
வரும் வழி தெரியாது
வாடித் தவிக்கிறேனே


போடா மடையா என்று
பொறுமை இழக்கிறியே
போகச் சொல்லிவிட்டு
பொங்கி அழுகிறியே


பொறுக்கி நீ என்று
நொறுக்கி எறியிறியே
நொறுக்கி எறிந்துவிட்டு
பொறிக்கி எடுக்கிறியே


தடுக்கி விழுந்தவனை
முடுக்கி விடுகிறியே
முடுக்கி விட்டுட்டு
கொழுக்கி போடுறியே


சிறுக்கி இருடி வாறன்
உருக்கி குடிக்கப் போறன்
மயக்கி மார்பில் போட்டு
கிறுக்கி வைக்கிறன் பாரன் !

No comments:

Post a Comment