Monday, 12 March 2018

பக்கம் வரவே பக்கம் வரவே மயக்கம்
நீ என் பக்கம் வந்த பின்பு என்னதான்
நடக்கும்

அக்கம் பக்கம் சுற்றம் சூழல் தடுக்கும்
அந்தக் கட்டளையும் மீறி யன்னல்கள்
திறக்கும்

விட்ட குறை தொட்ட குறை தொடரும்
நம் விந்தைகளால் செவ்வண்ண மொட்டு
மலரும்

சட்டம் திட்டம் வட்டம் போட்டு அடக்கும்
அதை வெட்டுக்கிளி வெட்டி தட்டி தத்தி
பறக்கும்

மிச்சம் மீதி சொல்ல கொஞ்சம் தயக்கம்
நான் அத்தனையும் சொல்லி விட்டால் ..
பிழைக்கும் !

No comments:

Post a Comment